Tuesday, December 4, 2012

ஸ்ரீ சக்தி உலா (41-47)

ஸ்ரீ சக்தி உலா (41-47)
 
சமயங்களுக்கெட்டாச் சக்தியே - எனில்
சமயபுரம் கிட்டும் சித்தியே
உமை சிருங்கார உல்லாசி - சொல்லும்
உஜ்ஜனியும் அவள் நல்லாசி (41)
 
திருக்கட வூரினள் அம்மையே - அவள்
திருத்தலங்கள் தொறும் நம்மையே
அருட்கொடைக் காக்குதல் உண்மையே - அவள்
அற்புதம் என்னென்ன வண்மையே (42)
 
வற்றிடாச் செல்வ வரத்தினள் - மற்றும்
வண்ணை இமயபுரத்தினள்
ஒற்றியூர் வாழ்சசி வோத்தமி - அவள்
உலகம்மை தாம் என ஏத்துமின் (43)
 
ஆழிஅலைஅவள் ஆயிரம் - பெயர்
அர்ச்சனை செய்திட வாயுறும்
வாழி அவள் என வாழ்த்துமே - சூறை
வந்திடித் தும்தலை தாழ்த்துமே (44)
 
ஆம்சிவசக்தியாம் ஆணைமேல் - என்னுள்
ஆவியும் தேன்சொரி வீணையே
தீஞ்சுவை காட்டிடும் தெய்வதம் - அவள்
திருவடிப் பேறன்றோ உய்வதும் (45)
 
மந்திர அட்சதை வல்லியே - அவள்
மணித்திரு நாமங்கள் சொல்லியே
இந்திர போகமும் பற்றுவோம் - அவள்
இணையடிக் கோவிலே சுற்றுவோம் (46)
 
சுற்றச்சுற்றச் சுகம் சூழ்ந்திடும் - நாமம்
சொல்லச்சொல்லத் துயர் வீழ்ந்திடும்
மற்றுமற்றின்பமும் மண்டிடும் - அஷ்ட
மகாலட்சுமி வாசமும் கொண்டிடும் (47)

Monday, December 3, 2012

ஸ்ரீ சக்தி உலா (36-40)

ஸ்ரீ சக்தி உலா (36-40)
 
சேலத்துள் நல்ல சிவகாமி - தில்லைச்
சிதம்பரத்துள்ளே தவகாமி
மூலத்தை வென்ற முழுமையாள் - அவள்
முன்னைக்கும் முன்னை இளமையாள் (36)
 
நங்கைநல்லூர்ச் செல்வ நாயகி - தெய்வ
நாராயணிபஞ்ச சாயகி
சிங்கம் நன்(கு) ஊர்ந்திடும் சீலினி - நாத
சிந்தாமணி ரத பாலினி (37)
 
கம்பாநதி பெறும் காமாட்சி - நம்மாங்
காட்டுப்பதிவரும் வாமாட்சி
அன்பால் கடல்நாகை அம்மைச்சி - அதன்
அரவம் ஒடுக்கிடும் கொம்மைச்சி (38)
 
சோட்டாணிக்கரை பகவதி - அவள்
சொல்லுக்கடங்கா யுகவதி
பாட்டாலும் கொல்லூர்மூ காம்பிகை - கொங்குப்
பண்ணாரி யாளும் ஏகாம்பிகை (39)
 
தூத்துக்குடிசெய் ஓங்காரிதான் - கொடுங்
களூர்க்கண்ணபுரத்து மாரிதான்
வாழ்த்தும் சிருங்கேரி வாசிதான் - எல்லை
வடபத்ர காளியின் ஆசிதான் (40)

Sunday, December 2, 2012

ஸ்ரீ சக்தி உலா (31-35)

ஸ்ரீ சக்தி உலா (31-35)
 
நவராத் திரிகொள் நலங்கினாள் - சக்தி
நாள்தோறும் போற்றத் துலங்கினாள்
சிவராத் திரிபயன் செய்குவாள் - நம்முட்
சிந்தையிலும்கனல் பெய்குவாள் (31)
 
வீட்டினுள் குத்து விளக்கினாள் - மனை
விரதங்கள் ஏற்கும் வழக்கினாள்
பாட்டின் பொருளெனும் பைங்கிளி - ஆதி
பராசக்தி யாய்விரி ஐங்கிளி! (32)
 
கடம்ப வனத்துக் கலைக்குயில் - மற்றும்
கானவேடர்தம் மலைக்குயில்
நடம்பயில் மேட்டு நறுங்குயில் - தில்லை
நாயகி காஞ்சிப் பெருங்குயில் (33)
 
மயிலா புரித்தவ மாலினி - சப்த
மாதரும் ஆகிய சூலினி
கயிலாசருக்கன்புக் காமத்தி - செல்வம்
கடைக்கணிக் கும்புவிச் சேமத்தி (34)
 
ஆனையங் காட்டில் அகிலம்மை - தொண்டர்க்(கு)
அருள வேற்காட்டில் முகிலம்மை
வான்நயம் காட்டும் வடிவம்மை - முல்லை
வயினவி வேதம் படிவம்மை (35)

Friday, November 30, 2012

ஸ்ரீ சக்தி உலா (26-30)

ஸ்ரீ சக்தி உலா (26-30)
 
மாமனப் பூட்டு மயானத்தி - இருள்
மாயையும் ஓட்டும் தியானத்தி
நாமணக்கும் புகழ் அஞ்சலி - அவள்
நாமங்கள் அன்றோநம் நெஞ்சொலி (26)
 
அன்னையே நம்பண் திருப்புகழ் - அவள்
அடி அலால் ஏது விருப்புகள்?
மன்னும் அவள் திருச் சந்நிதி - ஒன்றே
மாறாமல் நாம்பெறும் பொன்நிதி (27)
 
உத்தம பத்தியர் ஓர்புறம் - செயும்
ஓங்காரமே அங்குப் பண்பெறும்
சித்தம் எலாம் அவள் ஸ்ரீபுரம் - எனச்
சேர்ந்தங்கு வான்மூட்டும் கோபுரம் (28)
 
பாச மறுத்திடும் பாசத்தாள் - இன்னும்
பஞ்சதசாட்சர பீஜத்தாள்
வீசுமங்குய்ய விலாசினி - அருள்
வித்தக ராஜசிம்மாசனி (29)
 
ராஜராஜேஸ்வர ரங்கிணி - சர்வ
ராகசங்கீத தரங்கிணி
பூஜை புரஸ்கர பூரணி - தாம்
பூல சுகலய காரணி (30)

Thursday, November 29, 2012

ஸ்ரீ சக்தி உலா (21-25)

ஸ்ரீ சக்தி உலா (21-25)

பாகம் பிரியாத பங்கினாள் - அரன்
பாதி அவள் எனத் தங்கினாள்
நாகம் புனைவிரல் நங்கையாள் - திரு
நாரணர்க்காம் அரும் தங்கையாள் (21)

ஸ்ரீசக்கரம் உறும் சண்பகி - உமை
செல்வி எனும் திரியம்பகி
வாசக் கரும்புகொள் வண்ணத்தி - உயிர்
வாழ்விக்கும் மாமகா எண்ணத்தி (22)

முப்புரை சிற்பரை மோகினி - கனல்
மூளும் தவத்திரு யோகினி
அப்புறம் அப்புறம் ஆனந்தி - அவள்
ஆயிரம் செக்கர்மேல் வான் அந்தி (23)

மாயப் பரவெளி மண்டலம் - எலாம்
மாதா அவள்திருக் கண்தலம்
ஆய பெரும்சிதா காசமே - அவள்
ஆடரங்காய் ஒளி வீசுமே (24)

அகத்தழல் மூட்டு நெய் யாகத்தாள் - உள்ளே
அருட்டழல் கூட்டும் தியாகத்தாள்
ஜெகத்தழ கோங்கிடும் செல்வத்தாள் - என்றும்
சிவத்தொடும் சேர்தள வில்வத்தாள் (25)

Wednesday, November 28, 2012

ஸ்ரீ சக்தி உலா (16-20)

ஸ்ரீ சக்தி உலா (16-20)
 
மகிசா சுரபத மர்த்தினி - பனி
மயராஜ பர்வத வர்த்தினி
அகிலாண்ட நாயகி ஆயிழை - என்றும்
அன்பருக் கன்புசெய் சேயிழை (16)
 
பேதைக்கும் பேரருள் கூட்டுவள் - அழும்
பிள்ளைக்கும் பால் சுரந்தூட்டுவள்
ஓதக்கொள் மாகவி ஆக்குவள் - நொந்த
ஊமைக்கும் வாக்குற நோக்குவள் (17)
 
மையப் புருவ மனோன்மணி - எனும்
மாதவள் தேவர்க்கும் தேன்மணி
வையமும் வானும் வருமணி - அவள்
வாழ்வுக்கும் வாழ்வு தருமணி (18)
 
அகில உலகீன்ற அன்னைதான் - அவள்
ஆயினும் என்றென்றும் கன்னிதான் -
திகிலினைத் தூள்செயும் ஆயுதம் - அவள்
திருப்புகழ் பாடுக வாய் இதம் (19)
 
வெள்ளி விரத ஸ்ரீ வித்தியை - பார
விரதம் விரும்பும் ஸ்ரீ நித்தியை
கொள்ளும் நிறைகுடக் கோமளை - நவ
கோணத் துறையும் சியாமளை! (20)

Tuesday, November 27, 2012

ஸ்ரீ சக்தி உலா (11-15)

ஸ்ரீ சக்தி உலா (11-15)
 
மண்டல விண்டலக் கூத்துகள் - அன்னை
மலரடிக் கேஅவை பூத்துகள்
குண்டலம் என்னக் குலுங்குமோ - ரவி
குளிர்மதி ஊசல் நலங்குமோ (11)
 
மூவுலகும் அவள் மோகனம் - அணு
முழுமையும் அன்னவள் வாகனம்
கூவும் கடலும் குமரிசெய் - தெய்வக்
குரவை எனும்நேர் விமரிசை (12)
 
முக்கனித் தீந்தமிழ் முத்தினம் - கால
மூப்புக்கும் மூவாத ரத்தினம்
தெக்கணக் கொற்கைத் திரவியம் - சுடர்த்
திங்களுடன் கோள் மருவியும் (13)
 
மொத்தமும் சேர்ந்தவள் முத்திரை - அன்னை
முன்கழல் ஆடலும் அத்திரை
கத்துமுனை தெற்கில் காண்பதேல் - அங்குக்
கன்னி தவம் செயும் மாண்பதே (14)
 
சான்றோரின் உள்ளொளிச் சங்கம் - அவள்
சத்தியம் காப்போரின் குங்குமம்
வான்தோயும் நல்லற வாணியே - அருள்
வாக்கினுக் காம்பொருள் ராணியே (15)

Monday, November 26, 2012

ஸ்ரீ சக்தி உலா (6-10)


ஸ்ரீ சக்தி உலா (6-10)
சகல கலைதரும் சாரதை - என்றும்
சார்ந்தனுபூதியாய்ப் பார் அதை
புகலும் துணையும் புனிதையே - எந்தப்
புரட்சிக்கும் வித்(து)அவ் வனிதையே (6)

மஞ்சனம் ஆடும் மகமாயி - பரி
மளநயம் கூடும் ஜகமாயி
அஞ்சும்நம் வாழ்விற் கபயமே - அவள்
அழகள் நம் சென்னிக்குபயமே! (7)

மூவர்க்கும் மூத்த முதல்விதான் - சங்க
முத்தமிழ்க் கூடல் புதல்விதான்
யாவர்க்கும் ஆன இறைவிதான் - மற்றும்
யாவுக்கும் தானே கருவிதான்! (8)

தந்தன தந்தன சிந்துகள் - அங்குத்
தறிகெட்டும் ஓடாத பந்துகள்
வந்தனம் வந்தனம் என்றுதான் - அண்டம்
வாழ்த்தும் அன்னையைச் சுழன்றுதான்! (9)

ஊழி அவளுக் கொருபதம் - அதன்
ஒடுக்கம் அவளின் மறுபதம்
காளிமா காளி கருணையே - நோக்கக்
கருதும் நெஞ்சம்மை சரணையே (10)

Sunday, November 25, 2012

ஸ்ரீ சக்தி உலா (1-5)

ஸ்ரீ சக்தி உலா
தேவி சரணமெனத் தேர்ந்த தலங்கள்தொறும்
கோவில் உறைவாளைக் கும்பிட்டேன் - மேவிஅவள்
சீரடிகள் என்றுமென் சிந்தையுமிப் பாவிலுமாய்
வேரடிகொண்(டு) ஊன்றும் விழைந்து


நூல்


குங்குமக் கோவில் கொலுவினாள் - குளிர்
கோமளச் சாந்து நிலவினாள்
மங்கள ஆரத்தி மாலையாள் - சர்வ
மறைகொளும் சாரத்தின் லீலையாள் (1)


அமுத கலையின் அழகினாள் - கோடி
அழகெனும் வெள்ளம் பழகினாள்
இமைப்பில் உலகே இயற்றுவாள் - தேடி
எண்ணரும் ஞானம் பயிற்றுவாள்! (2)


குலமகள் கற்புக் குடியினாள் - அவர்
கொண்டிடும் தாலி முடியினாள்
நலமென் மழலை நயத்தினாள் - காம
நரகருக் கான பயத்தினாள் (3)


ஞானரதமே நடத்துவாள் - செஞ்சீர்
ஞாயிற்றுப் பட்டே உடுத்துவாள்
மோன பதமே இயக்குவாள் - அண்டம்
மொத்தமும் சுற்றி மயக்குவாள் (4)


பூத்துக் கொடியாய்ப் பொலிபவள் - நறும்
புண்ணியர் நாவில் மலிபவள்
காத்துக் குடிஓம்பி வாழ்பவள் - அன்னை
காலமும் காப்பெனச் சூழ்பவள்! (5)

Wednesday, October 17, 2012

கேள்விகள்

கேள்விகள்
 
சுதந்திரம் என்பதே
.. சுயநலம் பேணவா? - இல்லை
இதந்தரும் நன்மைகள்
.. எல்லோரும் காணவா?
 
உரிமைகள் என்பதே
.. ஒருசிலர்க் கெட்டவா? - இல்லை
பெருமை எல்லோர்க்குமாய்ப்
.. பெரும்பலன் கிட்டவா?
 
கடமைகள் என்பதே
.. கண்துடைப் பாக்கவா? - இல்லை
உடைமைகள் வந்திங்கே
.. உன்னதம் பூக்கவா?
 
செல்வங்கள் என்பதே
.. சிற்சிலர் சொந்தமா? - இல்லை
பல்வகை உழைப்பினர்
.. பாட்டுக்குச் சொந்தமா?
 
தாயகம் என்பதே
.. தனித்தனிக் கூட்டமா - இல்லை
தூயகருத்தொன்றித்
.. துலங்கு நீரோட்டமா?
 
ஒருமைப்பாடென்பதே
.. உள்ளுத்ததோர் கேள்வியா - இல்லை
அருமைப் பண்பாட்டுக்கே
.. அருந்தவ வேள்வியா?
 
பாரதம் என்பதே
.. பழையதோர் வாதமா? - இல்லை
பூரதமாய் இன்று
.. புலர்ந்த சங்கீதமா?
 
மனிதர்நாம் என்பதே
.. மறந்து போகவா? - இல்லை
இனிதுயர் நல்கியும்
.. இந்தியர் ஆகவா?
 
வினாக்களைக் கேட்டுநாம்
.. வெறுமைதான் கொள்ளவா -இல்லை
கனாக்களில் மூழ்கிடாக்
.. கடமைமேல் துள்ளவா?

Friday, October 12, 2012

நம்மால்தான்

நம்மால்தான்
 
நன்றியினால் வாலாட்டும்
.. நாய்கூட பின்னொருநாள்
அன்றிதனைச் செய்யாமல்
.. அலட்சியமாய் மறந்துவிடும்!
 
காரணம் அந் நன்றிமனம்
.. கடுகளவும் கொள்ளாத
நா,ரணமாம் மனிதரெனும்
.. நாம்தானே வளர்க்கின்றோம்!
 
கரைந்துகரைந்(து) இரந்துண்ணும்
.. காகமுமே பின்னொருநாள்
மறந்து தம்முள் ஒற்றுமையை
.. மாறாகத் துறந்துவிடும்
 
ஏனென்றால் இனப்பற்றே
.. எள்ளளவும் இல்லாத
நானென்ற அகந்தையராம்
.. நாம்தானே அழைக்கின்றோம்!
 
பிறர் உதிரம் உறிஞ்சிஉண்ணும்
.. பேய்முட்டைகளும் ஓர்நாள்
வர, அதிலே தம் இனமும்
.. வாழாமல் செத்துவிடும்
 
ஏனென்றால் அவற்றினுக்கே
.. இரை,நஞ்சாய்க் குருதிகொண்டு
தான்நின்ற நாம்தானே
.. தாராளம் வழங்கிவிட்டோம்!

Monday, October 8, 2012

போலிகள்

போலிகள்
 
விளக்கினை ஏற்றிவிட்டுக் - காற்றை
.. விசிறவும் வைப்பாரோ? - உடல்
அழுக்கினைப் போக்கிவிட்டுச் - சேற்றை
.. அளையவும் துய்ப்பாரோ?
 
தேசியம் பேசுகிறார் - ஆனால்
.. திருடுகள் பண்ணுகிறார் - புகழ்ந்(து)
ஆசியும் கூறுகிறார் - ஆனால்
.. அழிவையே எண்ணுகிறார்
 
போலியும் தாம் இவர்கள் - ஏன், நெப்
.. போலியன் போல் நடிப்பார்? - காவல்
வேலியே தன் பயிரை - மேயும்
.. வித்தையும் மேல் படிப்பார்
 
என்ன மனிதர் இவர்? - ஆமாம்
.. ஏமாற்ற வல்லவர் தாம் - ஓர்நாள்
அன்னவர் வேடமெலாம் - தீரும்
.. அதுவரை நல்லவர் தாம்!

Sunday, October 7, 2012

பச்சோந்திப் பராபரங்கள்

பச்சோந்திப் பராபரங்கள்
 
கலைஎன்றும் கல்விஎன்றும்
.. காசடிக்கும் வித்தைகளை
விலைஇன்று பேசத்தான்
.. வெளிச்சங்கள் பராபரமே
 
நெறிஎன்றும் நீதிஎன்றும்
.. நியாயங்கள் சாகடிக்க
வெறி இன்று மூட்டத்தான்
.. வேடிக்கை பராபரமே
 
அறமென்றும் அன்பென்றும்
.. ஆயிரமாய் அளந்துவிட்டுப்
புறமின்று பேசத்தான்
.. பொய்வேடம் பராபரமே
 
மதமென்றும் மார்க்கமென்றும்
.. மக்களைஏ மாற்றிவிட்டு
நிதமின்று சுரண்டத்தான்
.. நியமங்கள் பராபரமே
 
வாழ்வென்றும் வளமென்றும்
.. வாய்வீரம் பேசிவிட்டுத்
தாழ்வின்று வைக்கத்தான்
.. தன்னலங்கள் பராபரமே
 
குடிஎன்றும் குலமென்றும்
.. கொக்கரிக்கப் போதைஉச்சி
முடிசென்று சுருட்டத்தான்
.. முனைப்பின்று பராபரமே
 
மனம் என்றும் சாட்சிஎன்றும்
.. மாய்மாலம் காட்டிவிட்டுத்
தினமின்று போலிகட்கே
.. திருவிழாக்கள் பராபரமே

Saturday, October 6, 2012

மனக் கணக்கு

மனக் கணக்கு
 
செலவே என்று பேதைமனம் - தினங்கள்
சென்ற தெண்ணிப் பறக்கிறது - அதுதான்
வரவே என்று வாதைமனம் - அநுப
வங்கள் ஏற்க மறுக்கிறது
 
இருளே எனக்கண்(டு) ஊமைமனம் - புதிய
எதிர்கா லத்தைப் பழிக்கிறது - அதுதான்
அருளே எனக்கண்(டு) ஆமைமனம் - ஒளியை
அறியா மல்தான் விழிக்கிறது!
 
குறையே என்று மூடமனம் - நிறைவு
கொள்ளா விதமே அலைகிறது - அதுதான்
இறையே நின்ற பீடமென - உணர
ஏலா மையால் மலைகிறது
 
பகையே என்று தாழ்வுமனம் - மனித
பலத்தை புவியை வெறுக்கிறது - அதுதான்
வகையே வாழ்வும் யாவுமெனும் - ஒருநாள்
வாரா மையால் சிரிக்கிறது

Friday, October 5, 2012

புதிர்

புதிர்
 
பலபல மயக்கம்
பலபல தயக்கம்
.. பார் இவை தாமே
.. உலகம் - அதிலும்
சிலசில இயக்கம்
சிலசில நயக்கம்
.. சேர்ந்திவை தாமே
.. கலகம்!
 
பலபல இயல்கள்
பலபல செயல்கள்
.. படைப்பவை தாமே
.. தருமம் - அதிலும்
சிலசில மயல்கள்
சிலசில புயல்கள்
.. சிரிப்பவை தாமே
.. மருமம்
 
பலபல நடிப்பு
பலபல நொடிப்புப்
.. பாத்திரம் தாமே
.. மனிதன் - அதிலும்
சிலசில துடிப்பு
சிலசில பிடிப்புச்
.. சித்திரம் தாமே
.. புனிதன்

Thursday, October 4, 2012

மனிதன்

மனிதன்
 
அழுது கொண்டே உலகம் நோக்கி
.. வருகிறான் - பின்
பழுது கண்டே கலகம் ஊக்கி
.. மறைகிறான்
 
குறி இலாதே வெறி அளந்து
.. குதிக்கிறான் - பின்
வெறியின் மீதே நெறி இழந்தும்
.. விதிர்க்கிறான்
 
ஆசை மட்டும் அமைய வீம்பில்
.. அலைகிறான் - பின்
கூசு மட்டும் குமையத் தேம்பிக்
.. குலைகிறான்
 
மனித வாழ்வின் மருமம் என்ன
.. மருமமோ? - அதன்
புனிதம் யாவும் புலம்பிப் பின்னும்
.. பொருமுமோ?

Wednesday, October 3, 2012

அந்த நாள்

அந்த நாள்
 
பருவம் என்ற மேடை முன்னே
.. பலதிரைகள் ஆடிடும்
உருவம் என்ற நிழல்கள் அங்கே
.. ஒவ்வொன்றாகக் கூடிடும்
 
இரவும் ஒன்று பகலும் ஒன்றாய்
.. எண்ணி நாள்கள் விடிந்திடும்
வரவும் ஒன்று செலவும் ஒன்றாய்
.. வாழ்வுக் கூத்து முடிந்திடும்
 
காலம் என்ற மாயனாரின்
.. கைத்திறங்கள் என்னவோ?
கோல மன்றில் சாயமிட்ட
.. கொள்கை தானும் மின்னவோ?
 
ஓலம் நின்று நாத வெள்ளம்
.. ஒடுங்கலும்தான் என்றைக்கோ?
மூலம் வென்று நாமும் மொத்தம்
.. மூலம் ஆவதன்றைக்கோ?

Tuesday, October 2, 2012

கரைமேல்

கரைமேல்
 
ஆசைக் கரைமேல் அறியாமை மோதிடும்
ஆர்வக் கரைமேல் வெறி ஆமை மோதிடும்
பாஷைக்கரைமேல் பதங்களே மோதிடும்
பரமன் கரைமேல் மதங்களே மோதிடும்
 
இதயக் கரைமேல் ஏக்கங்கள் மோதிடும்
எழுச்சிக் கரைமேல் தூக்கங்கள் மோதிடும்
உதயக் கரைமேல் உணர்வுகள் மோதிடும்
உள் உயிர்க் கரைமேல் கனவுகள் மோதிடும்
 
வரவுக் கரைமேல் செலவுகள் மோதிடும்
வானக் கரைமேல் நிலவுகள் மோதிடும்
இரவுக் கரைமேல் இளமைகள் மோதிடும்
இளமைக் கரமேல் பழமைகள் மோதிடும்
 
விதியின் கரைமேல் விருப்பங்கள் மோதிடும்
விருப்பக் கரைமேல் திருப்பங்கள் மோதிடும்
மதியின் கரைமேல் மயக்கங்கள் மோதிடும்
மயக்கக் கரைமேல் இயக்கங்கள் மோதிடும்
 
காலக் கரைமேல் கடமைகள் மோதிடும்
கடமைக் கரைமேல் மடமைகள் மோதிடும்
மூலக் கரைமேல் முடிவுகள் மோதிடும்
முடிவுக் கரைமேல் விடிவுகள் மோதிடும்
 
சாதனைக் கரைமேல் சோதனை மோதிடும்
சோதனைக் கரைமேல் வேதனை மோதிடும்
போதநற் கரைமேல் போலிகள் மோதிடும்
போலியின் கரைமேல் கேலிகள் மோதிடும்
 
ஆண்டுக் கரைமேல் ஆயுள் மோதிடும்
ஆயுள் கரைமேல் நோயும் மோதிடும்
பூண்ட செயல்மேல் பொறாமை மோதிடும்
போகட்டும் எங்குமே நிராசை மோதிடும்
 
சரித்திரக் கதைமேல் சாவுகள் மோதிடும்
சத்தியக் கரைமேல் வாழ்வுகள் மோதிடும்
அரித்திடும் கொள்கைமேல் அரசியல் மோதிடும்
அப்புறம்? அப்புறம்? வெறிசெயல் மோதிடும்!

Sunday, September 30, 2012

உயிர்ப்பு!

உயிர்ப்பு!
 
மூலத்தின் ஓரத்தில்
முளைவிட்ட வித்தொன்று
காலத்தின் ஓரத்தில்
கனல்மூட்டப் பிறக்கிறது
 
உதயத்தின் ஓரத்தில்
உயிர்த்திட்ட மூச்சொன்று
இதயத்தின் ஓரத்தில்
எனைஎட்டிப் பார்க்கிறது
 
தொடக்கத்தின் ஓரத்தில்
துளிர்விட்ட வினைஒன்று
அடக்கத்தின் ஓரத்தில்
அப்பாலும் விரிகிறது
 
புழுக்கத்தின் ஓரத்தில்
பொரிந்திட்ட குஞ்சொன்று
ஒழுக்கத்தின் ஓரத்தில்
உறவுக்கே தவிக்கிறது
 
நெஞ்சுக்குள் ஓரத்தில்
நிழலிட்ட கனவொன்று
பிஞ்சுக்குள் ஓரத்தில்
பிரமிப்பாய் வளர்கிறது

Saturday, September 29, 2012

சுமைகள்

சுமைகள்
 
மூளைச் சுமைகள் மூடம் ஏறின
முதுமைச் சுமைகள் பாடம் கூறின
தோளின் சுமைகள் பொறுப்பு கூட்டின
தொல்லைச் சுமைகள் வெறுப்பு நீட்டின
 
வயிற்றுச் சுமைகள் வாழ்வை ஒடுக்கின
வாழ்வுச் சுமைகள் தாழ்வை அடுக்கின
முயற்சிச் சுமைகள் முன்னே அழைத்தன
முடியாச் சுமைகள் பின்னெ இழுத்தன
 
இதயச் சுமைகள் எண்ணம் இடித்தன
இமையின் சுமைகள் கண்ணீர் வடித்தன
விதியின் சுமைகள் விம்மி வெடித்தன
விளைவோ? சுமைகள் கும்மி அடித்தன!

Friday, September 28, 2012

ஒற்றையடிப் பாதை

ஒற்றையடிப் பாதை
 
ஒற்றையடிப் பாதை - அது
ஊர்க்குநடைபாதை
- ஒற்றையடிப் பாதை
 
சுற்றிஓடும் வாழ்க்கை - ஒன்றும்
தொட்டுச் செல்லா தென்றே
கற்றுத்தரும் பாதை - திசை
காணஒண்ணாப் பாதை
- ஒற்றையடிப் பாதை
 
கைகளுக்கே எட்டா - மனக்
கனவுகளும் விட்டுப்
பொய்களுக்கே அப்பால் - ஓடிப்
போம் அனைய பாதை
- ஒற்றையடிப் பாதை
 
விலைமகளிர் காட்டும் - வஞ்ச
வித்தையெலாம் போலத்
தலைமறைவில் வானம் - தொட்டுத்
தழுவி நிற்கும் பாதை
- ஒற்றையடிப் பாதை
 
நீண்டமலை நாகம் - ஒரு
நெடுங்கிடையாய் மண்ணில்
பூண்டசைவும் இன்றித் - துயில்
போவதொத்த பாதை
- ஒற்றையடிப் பாதை
 
விட்டகுறி அம்பின் - ஒரே
விசைத்தடத்தைப் போல
எட்டும்வரை கண்கள் - தொட
எதிரிருக்கும் பாதை
- ஒற்றையடிப் பாதை
 
மடல்விரிந்த ஓலைத் - தென்னை
மட்டைத் தண்டு போல
படல்விரிந்த காட்டில் - தனிப்
படவருந்தும் பாதை
- ஒற்றையடிப் பாதை
 
சோகநெடும் பாட்டில் - இசைச்
சுருதிஒன்று போல
வேகநெடு மேட்டில் - உயிர்
வேட்கைவிம்மும் பாதை
- ஒற்றையடிப் பாதை
 
ஏழைவிடும் மூச்சில் - பெரும்
ஏக்கம் உண்டு போலச்
சூழவெறும் காட்டில் - மனச்
சுதிஒலிக்கும் பாதை
- ஒற்றையடிப் பாதை
 
துயர்ச்சுமைகள் தாங்கி - நடை
தொய்பவனைப் போல
முயற்சி இன்றி ஏங்கிப் - பின்னும்
மூச்சிழந்த பாதை
- ஒற்றையடிப் பாதை
 
பற்றனைத்தும் விட்டோன் - எங்கும்
பயணம் செய்தல் போல
பெற்றநடை நீளும் - கொள்கை
பிடிபடாத பாதை
- ஒற்றையடிப் பாதை
 
வானவிற் பல்லக்கு - கொண்ட
வரிசைபோதல் போலத்
தானசைந்தே பெண்கள் - குடம்
தாங்கிச் செல்லும் பாதை
- ஒற்றையடிப் பாதை
 
கோதைகுழல் மீது மின்னும்
கூர்வகிடு போலக்
காதைநெடும் காதை - எனக்
காவியம் செய்காதை
- ஒற்றையடிப் பாதை
 
வரவுசெலவாக - யுகம்
வளர்கதையே நீண்டு
நிரவும் வரலாறாம் - என
நிச்சயிக்கும் பாதை
- ஒற்றையடிப் பாதை
 
கண்ணிழந்தோர் கையை - மெல்லக்
காதலோடும் பற்றி
நண்ணும்வழி செல்லும் - உண்மை
நண்பரொத்த பாதை
- ஒற்றையடிப் பாதை
 
நம்பிக்கையில் ஊக்கம் ஒரே
நாட்டமுற்றோ போல
அன்புக்கையை நீட்டி - நமை
அரவணைக்கும் பாதை
- ஒற்றையடிப் பாதை
 
புல்லின்முடி எல்லாம் - வைரப்
பொட்டுருண்டே நழுவும்
வல்லியர்மென் பாதம் - ஆம்;அவ்
வான்பனிநீர் கழுவும்
- ஒற்றையடிப் பாதை
 
ஒற்றையடிப் பாதை - இது
ஊருக்கொரே பாதை
நெற்றிநெடும் காட்டில் - இது
நீண்ட நீண்ட பாதை
- ஒற்றையடிப் பாதை

Wednesday, September 26, 2012

வகிடு

வகிடு
 
மேகத்தின் வகிடு
.. மின்னல் இழைத்தது - தென்னை
மீதினில் வகிடு
.. தென்றல் வளைத்தது
 
கடல்நீரில் வகிடு
.. கப்பல் கிழித்தது - இரு
கன்னத்தில் வகிடோ
.. உப்பு துளிர்த்தது
 
வயல்களின் வகிடு
.. வரப்பு கிடந்தது - நில
வறட்சியின் வகிடு
.. வெடிப்பு தொடர்ந்தது
 
கொல்லைமேல் வகிடு
.. குறும்பனி தத்தது - புற்றுக்
கூட்டமேல் வகிடு
.. எறும்(பு)அணி மொய்த்தது
 
பட்டண வகிடு
.. பாதை இட்டது - அந்தப்
பாதைமேல் வகிடு
.. வானம் தொட்டது
 
ஆறுமேல் வகிடு
.. அணைகள் எடுத்தது - மங்கை
ஆசைமேல் வகிடு
.. குடும்பம் தடுத்தது
 
குடும்பத்தின் வகிடு
.. கூட்டு பிரிவது - கட்சிக்
கூட்டணி வகிடு
.. கொள்கை முறிவது
 
ஏழைமேல் வகிடு
.. எலும்பு தெரிவது - பச்சை
இலைகள்மேல் வகிடு
.. நரம்பு சொரிவது
 
நெற்றிக்கு வகிடு
.. நேர்க்கோ(டு) எடுத்தது - இமை
நேர்விழி வகிடு
.. பார்வை தொடுத்தது
 
முகத்துக்கு வகிடு
.. மூக்கெடுப் புண்டது - புற
முதுகுக்கு வகிடு
.. நேர்நடுத்தண்டது
 
கவிதையின் வகிடு
.. காய்சீர் பிரிப்பது - சுர
கானத்தின் வகிடு
.. தாளம் பொறித்தது
 
தேவைக்கு வகிடு
.. திட்டம் வகுப்பது - நீதித்
தெளிவுக்கு வகிடு
.. சட்டம் தொகுப்பது
 
செல்வமேல் வகிடு
.. சீர்ப்பங்கிடுவது - கொண்ட
செழிப்புமேல் வகிடு
.. ஊர்ப்பங்கிடுவது
 
வாழ்க்கையின் வகிடு
.. பிறப்பிறப் பானது - ஆம்
வரலாற்றின் வகிடோ
.. திருப்பங்கள் ஏனது?

Tuesday, September 25, 2012

புதுப்பாப்பா!

புதுப்பாப்பா!
 
பாப்பா ஒண்ணு எங்க வீட்டில்
.. முளைச்சி ருக்குது - அது
படுத்துகிட்டே என்னைப் பார்த்துப்
.. பார்த்துச் சிரிக்குது
 
கேட்பார் இல்லை; தரையில் எம்பிக்
.. காலை உதைக்குது - அதன்
கிட்டப் போனால் பட்டுக் காலால்
.. எட்டி மிதிக்குது
 
அம்மா கிட்டப் போகக் கையை
.. ஆட்டி அழைக்குது - அவள்
அந்தப் பக்கம் மறைஞ்சு போனால்
.. வாயைப் பிளக்குது
 
சும்மா சும்மா பாலுக்காகச்
.. சுத்தி அழுவுது - என்ன
சூழ்ச்சிகள்தான் பண்ணினாலும்
.. சுத்தித் தழுவுது
 
பல்லுகூட முளைக்கலே; தின்
.. பண்டம் கேட்குது - அப்பா
பால் முகத்தைக் கிள்ளிக் கிள்ளிப்
.. பதமே பார்க்குது
 
தொல்லை நித்தம் கொடாமல் தூங்க
.. மாட்டேன் என்குது - போட்ட
தொட்டிலிலும் எட்டிப் பார்த்தே
.. தலைகீழ் தொங்குது
 
தத்துப் பித்துன்னு சுத்திச் சுத்தித்
.. தானே உளறுது - ஒரு
தண்ணி மழையைக் கண்டால் போதும்
.. மண்ணைக் கிளறுது
 
அத்தை அக்கான்னு குதிகுதிச்சே
.. ஆட்டம் போடுது - பார்த்த
அத்தனையும் வேணுமின்னே
.. நோட்டம் போடுது
 
அக்கா நோட்டைத் தூக்கி வச்சே
.. அழகு பார்க்குது - படிச்ச
அடையாளமத்தான் தாள்களையும்
.. கிழிச்சு பார்க்குது
 
சொக்காயையும் டெக்னிக் கலரு
.. ஷோவாய்ப் பண்ணுது - அடே
சுந்தர் இண்ணா அந்தர் ஒண்ணு
.. போடா எண்ணுது
 
பாப்பா புதுப் பாப்பா அதோ
.. படுத்திருக்குது - ஆசு
பத்திரிக்குப் போய் அம்மாதான்
.. வாங்கி வந்தது
 
கேட்பார் இல்லை; பாப்பா பண்ணும்
.. கேலிக் கூத்திது - இன்னும்
கேட்கக் கேட்கச் சொல்லுவேன் நான்
.. நேரம் போதாது

Monday, September 24, 2012

மழலை வாழ்த்து

மழலை வாழ்த்து
 
குறுகுறு துள்ளல்கள்நீர் - மழலைக்
கொடைதரும் வள்ளல்கள்நீர்
சுறுசுறுப்(பு) உள்ளங்கள்நீர் - ஒளிப்பூஞ்
சுடர்மழை வெள்ளங்கள் நீர்
 
ஓடைக் குமிழிகள் நீர் - நுரைக்கும்
உயிர்ப்புச் சிமிழிகள் நீர்
பாடலின் சந்தங்கள் நீர் - பிறவிப்
பரம்பரைச் சொந்தங்கள் நீர்
 
நாட்டியச் சோலைகள் நீர் - விடியும்
நவயுகச்சாலைகள் நீர்
தீட்டிய கோலங்கள் நீர் - உதவும்
தேவதைப் பாலங்கள் நீர்
 
ஆலய தீபங்கள் நீர் - கமழும்
அஞ்சலி தூபங்கள் நீர்
மாலை வரிசைகள் நீர் - இறைவன்
மகிழும் பரிசுகள் நீர்
 
சங்கீத ராகங்கள் நீர் - புதிய
சமுதாய மேகங்கள் நீர்
இங்கித நெஞ்சங்கள் நீர் - சுவர்க்க
இதயத்தின் மஞ்சங்கள் நீர்
 
சிந்துர ஜாலங்கள் நீர் - வரையாச்
சித்திர மூலங்கள் நீர்
இந்திரக் கிண்ணிகள் நீர் - கவர்ந்(து)உள்
இழுத்திடும் கண்ணிகள் நீர்
 
வானவில் வண்ணங்கள் நீர் - பதிந்த
வைரத்தோள் எண்ணங்கள் நீர்
தேனவிர் முல்லைகள் நீர் - குலுங்கும்
தெய்விகக் கொல்லைகள் நீர்
 
தங்கப்பூ பாளங்கள் நீர் - முதிர்ந்த
தந்தத்து நாளங்கள் நீர்
பொங்கற்பூ மேளங்கள் நீர் - உயிராய்ப்
பூரிக்க வாழுங்கள் நீர்
 
சந்தனச் சிற்பங்கள் நீர் - அரும்புச்
சரமணித் தெப்பங்கள் நீர்
வந்தனம் பிள்ளைகளே - உமக்(கு) என்
வாழ்த்துகள் கொள்ளைகளே!

Sunday, September 23, 2012

குழந்தைப்பூ

குழந்தைப்பூ
 
பிச்சிப்பூக் காதலில்
.. பிறைப்பூவாய் தோன்றிமுன்னம்
உச்சிப்பூ முகர்ந்துவிட
.. உயர்கின்ற நிலவுப்பூ
 
உள்ளப்பூ வேட்கையிலே
.. உறவுப்பூ கட்டவிழுந்து
கொள்ளைப்பூ வாய்க்குலுங்கிக்
.. குறும்புதிர்க்கும் மழலைப்பூ
 
பருவப்பூ வாசலிலே
.. பாசப்பூ மணம்பரப்பக்
கரு, அப்பூ வாகிஎழில்
.. கலைமணக்கும் அமுதப்பூ
 
இரவுப்பூ சேர்க்கையிலே
.. இளமைப்பூ செலவழிய
வரவுப்பூ வாய் எனது
.. வழிநடத்தும் குழந்தைப்பூ

போதாமல்

போதாமல்

ஏற்றிய தீபத்தில் எண்ணெய்போ தாதே
.. இதயத்தில் ஏற்றி விட்டாள் - அவ்
இதயம்கொள் தீபமும் எரியப்போ தாதே
.. உதயத்தில் மாற்றி விட்டாள்
ஆற்றிய தொண்டினுக்(கு) அன்புபோ தாதென்றே
.. அன்னையைக் காட்டி விட்டாள் - அவ்
அன்னைமெய் அன்பும் அடங்காமற் காததற்கே
.. கன்னியைக் கூட்டி விட்டாள்
காட்டிய புன்னகைக் காட்சியும் போதாதே
.. கண்மலர் பூத்து விட்டாள் - அக்
கண்மலர்க் காட்சியும் காணாதென் றேஎங்கும்
.. விண்மலர் கோத்துவிட்டாள்
மீட்டிய ராகமும் மேவாதென்றே கடல்
.. மேளமும் கொட்டி விட்டாள் - அம்
மெல்லிசை மேளமும் மீளாதென் றேஉயிர்
.. நாளமும் தட்டி விட்டாள்

Friday, September 21, 2012

நினைவு நிழலில்

நினைவு நிழலில்
 
சந்தனப் பொய்கையிலே - தென்றல்
.. சரசங்கள் நெய்கையிலே
வந்தநற் காதலிலே - உடன்
.. வாலிப மோதலிலே
அந்தநன்னாட்களையே - எண்ணி
.. ஆயிரம் பாக்களையே
சிந்தனைப்பண் இழைப்பேன் - சிரஞ்
. சீவியாய் விண்வளைப்பேன்
 
தேன்மழைச் சாரலிலே - பன்னீர்த்
.. தென்றலின் தூறலிலே
தான் மலர் ஆசையிலே - சொர்க்கத்
.. தவிப்புகள் பேசையிலே
நான்மகிழ் நாட்களையே - எண்ணி
.. நவநவப் பாக்களையே
வான்மணிக் கீதை செய்வேன் - புது
.. வரலாற்றுப் பாதை கொய்வேன்
 
செண்பக ஓடையிலே - துள்ளும்
.. செந்தமிழ் மேடையிலே
கண்புகும் வேட்கையிலே - விழிக்
.. காந்தங்கள் தாக்கையிலே
பண்புகொள் நாட்களையே - எண்ணிப்
.. பன்னூறு பாக்களையே
விண்புகழ் பூத்தொலிப்பேன் - காதல்
.. வெற்றிக்கே வாழ்த்தொலிப்பேன்

Thursday, September 20, 2012

வேண்டல்

வேண்டல்
 
மின்னலிலே நார் உரித்து
.. மீன்களிலே பூப்பறித்துப்
பின்னலிலே சூட்டசடைப்
.. பில்லைதா! - வெண்ணிலாப்
பில்லை மெல்லக் கிள்ளி எனக்(கு)
.. இல்லை தா!
 
கங்குலிலே சேலை நெய்து
.. கார்வில்லிலே மாலைகொய்து
திங்களிலே என்கழுத்தில்
.. சூட்டவா - அன்றி உன்
திருக்கரமே மாலை எனப்
.. பூட்டவா!
 
புல்நீரிலே பரல் இழைத்துப்
.. புலரியிலே நிரல்வளைத்து
முன்நேரிலே அட்டிகையாய்க்
.. கொண்டுவா - இல்லை உன்
மொய்த்தவிழிப் பார்வை அட்டி
.. உண்டு வா!

Wednesday, September 19, 2012

புன்னகை

புன்னகை
 
புன்னகை யோஒரு புன்னகை - என்னுள்
பொன்மண மாய் உறும் புன்னகை
தன்னை இழந்திடும் புன்னகை - வெறித்
தாபம் கிளர்ந்திடும் புன்னகை
 
மின்னலின் வீச்சிடும் புன்னகை - சுடர்
மின்சாரம் பாய்ச்சிடும் புன்னகை
கன்னல் சுவைதரும் புன்னகை - உயிர்க்
காதல் நவமுறும் புன்னகை
 
கீற்று நிலவுபோல் புன்னகை - உயிர்க்
கிளி மூக்(கு) அலகுபோல் புன்னகை
ஆற்றல் மிகுந்திடும் புன்னகை - ஊடல்
அகத்தும் புகுந்திடும் புன்னகை
 
மாம்பழத் துண்டெனும் புன்னகை - அதில்
மயக்கங்கள் உண்டெனும் புன்னகை
வீம்பெழில் துள்ளிடும் புன்னகை - பாளை
வெடிப்பனெக் கள்ளிடும் புன்னகை
 
வண்ணத்துப் பூச்சியின் புன்னகை - இள
வசந்தத்துக் காட்சியின் புன்னகை
கண்ணொத்தக் காதலின் புன்னகை - நெஞ்சம்
கனிந்தொத்த மோதலின் புன்னகை
 
ஓடைகொள் சிற்றலைப் புன்னகை - பின்னி
உறவுகள் பற்(று) அலைப் புன்னகை
சாடைக்குத் தூதுசொல் புன்னகை - ஏதோ
சாகசச் சேதிசொல் புன்னகை
 
அரும்புகொள் மொட்டெனும் புன்னகை - கள்ள
ஆசைமின்வெட்டுனும் புன்னகை
இரும்பும் உருக்கிடும் புன்னகை - வன்கல்
இதயமும் நெக்கிடும் புன்னகை
 
கனவுகள் பின்னிடும் புன்னகை - பல
கற்பனை மன்னிடும் புன்னகை
நினைவுகொள் வசியப் புன்னகை - காதல்
நெஞ்சுக்(கு) அவசியப் புன்னகை
 
மெல்ல நெளிவுறும் புன்னகை - இதழ்
மீறத் தெளிவுறும் புன்னகை
சொல்லவொண் ணாதர்மப் புன்னகை - மனம்
சொக்கவும் காமர்தம் புன்னகை
 
பாசத்தின் வார்ப்படப் புன்னகை - ஏதோ
பரிவுக்கும் மேற்படும் புன்னகை
நேசத்தின் நேசமாம் புன்னகை - என்றும்
நிலைபெறப் பேசுமாம் புன்னகை
 
நாகத்தும் ரத்தினப் புன்னகை - அதில்
நவநவ முத்தெனும் புன்னகை
ஆகத்தைச் சுண்டிடும் புன்னகை - கோடி
ஆசையும் விண்டிடும் புன்னகை

Tuesday, September 18, 2012

கவி அணங்கு

கவி அணங்கு
 
பாலில் முழுதும் பனி இரவில் - நிலா
பரவி ஒழுகும் தனிவரவில்
வாலிப வல்லிமுன் வந்தனளே - இள
வசந்தம்முன் செல்ல நடந்தனளே
 
உதயம் நீராடும் ஒளிப்பொழுதில் - இந்த
உலகம் சீராடும் துளிவிழுதில்
இதய என் வல்லி எழுந்தனளே - காதில்
ஏதேதோ சொல்லில் வளைந்தனளே
 
மஞ்சன மாலை மணிவெயிலில் - சுடர்
மரகதச் சோலை அணிவயலில்
அஞ்சன வல்லி நின்(று) ஆடினளே - எனை
ஆங்குயிர் கெல்லியும் ஓடினளே
 
காதலி அல்லள்; கவிதை அவள் - வேறும்
கற்பனை அல்லள்; யுவதி அவள்!
ஆதலின் என்னுள் அயின்றனளே - நவம்
ஆயிரம் மின்னப் பயின்றனளே!

Monday, September 17, 2012

அருட்கொடை

அருட்கொடை
 
தூளாய் உருளும் பனிப்பரலே!
துலங்க உன்னுள் நெடும்பனையும்
வாளா இருத்திக் காட்டவல்ல
வனப்பை நீயும் கற்றதெங்கே?
 
செம்மாதுளையாம் கனிச்சிமிழே!
சேர உன்னுள் மணிப்பரலும்
அம்மா வியப்போ(டு) அடுக்கிவைக்கும்
அழகை நீயும் பெற்றதெங்கே?
 
மயிலின் தோகை மணிக்குளமே!
மயங்க உன்னுள் நிறம்பலவும்
பயிலும் வண்ணம் பாய்விரிக்கும்
பாங்கை நீயும் உற்றதெங்கே?
 
தங்க ஓடைத் தகதகப்பே!
தவழ உன்னுள் சலசலப்பும்
பொங்க ஓடி புரண்டு செலும்
புதுமை நீயும் திரண்டதெங்கே?
 
பலவாம் சுளைகொள் பலாப்பழமே!
படலம் படலம் சுவை அவையும்
கொலுவாய் உனக்குள் நிலவ வரும்
குளுமை நீயும் நெய்ததெங்கே?
 
ஏழைக் கவியே உன்னிடம் ஓர்
எளிய சொல்லே உள்ளொளியால்
வாழக் கவிதை வரம்பெறல்போல்
வளமாய் இவையும் பெற்றன காண்!

Sunday, September 16, 2012

கைத்திறன்

கைத்திறன்
 
அந்தர வானவில் சிந்தூரச் சேற்றினை
.. அள்ளி இறைத்தவர் யார்? - பிறைச்
சந்திரக் கிண்ணி சரவிளக்கேற்றிச்
.. சற்றே மறைத்தவர் யார்?
 
வண்ணத்துப்பூச்சி வரிகளில் கோல
.. வகையையும் நெய்தவர் யார்? - எழில்
எண்ணற்ற பூக்களும் இந்திர வர்ணமாய்
.. இங்கிதம் பெய்தவர் யார்?
 
பன்னிற நாடாவின் பட்டென வானவில்
.. பாவும் வரிந்தவர் யார்? - அங்குப்
பொன்னிற வண்ணப் பொறிப்பொறியாய் மத்தாப்
.. பூவும் சொறிந்தவர் யார்?
 
மாமயில் தோகை மணிவிசிர் ஆட்டத்தில்
.. மாயம் இழைத்தவர் யார்? - அவை
தாம் ஒயில் ஆகும் தடத்தில் பொற்காசும்
.. தழைய விளைத்தவர் யார்?
 
ஓடைகளில்நீர் உல்லாசக் குமிழி
.. உருளவும் விட்டவர் யார்? - சிறு
காடை குருவிக் கவின்சிறகுக்குள்
.. கவிதைமூச்சிட்டவர் யார்?
 
சொற்களின் கூளத்தில் சுந்தர காவியம்
.. சொக்கப் படைப்பவர் யார்? - பசும்
புற்களின் மேல்பனிப் பொன்னொளி மந்திரப்
.. பூட்டும் உடைப்பவர் யார்?
 
மணிமணிச் செம்புள் மாதுளைக் கெம்பும்
.. மடங்கென வைத்தவர் யார்? - அவை
அணிஅணி யாவும் அடுக்கடுக்காயும்
.. அழகுறத் தைத்தவர் யார்?
 
கன்னியர் நுங்கிளம் கன்னங்கள் தோறும்
.. கவிதை குழைத்தவனே - பின்னர்
மன்னிய மாயமாய் மற்றென்ன ஐயம்?
.. மகிழ்ந்திவை விளைத்தவனே!

Thursday, September 6, 2012

விளக்கீடு

விளக்கீடு
 
பூவகலில் வண்ணமணிப்
.. பூச்சிவிளக்கேற்றுது - கண்
பாவைஅதைக் காண உடன்
.. பார்வை விளக்கேற்றுது!
 
தோரணமாய் வானவில்லும்
.. தொடர விளக்கேற்றுது - அதன்
காரணமாய் மங்கைகண்ணும்
.. கனவை விளக்கேற்றுது!
 
வனமயிலும் தோகையிலே
.. வரிசை விளக்கேற்றுது - அதை
இனமடவார் கண்ணு ஏறுந்தி
.. இன்ப விளக்கேற்றுது!
 
ஓடையில் நீர்க் குமிழியும்தான்
.. ஊடிவிளக்கேற்றுது - அதைச்
சாடையில் கண் பார்க்கவும் தான்
.. சலன விளக்கேற்றுது!

Wednesday, September 5, 2012

சிரிப்பு

சிரிப்பு
 
புல்லில் சிரிக்கிறேன்
.. என்றுசொல்லிக் - காலைப்
பூம்பனி வைரமாய்
.. மின்னியது!
 
நெல்லில் சிரிக்கிறேன்
.. என்றுசொல்லி - வேர்வை
நித்திலம் பொற்கதிர்
.. மன்னியது!
 
அல்லில் சிரிக்கிறேன்
.. என்றுசொல்லி - வானம்
ஆயிரம் முத்தாரம்
.. வீசியது!
 
வில்லில் சிரிக்கிறேன்
.. என்றுசொல்லி - மேகம்
விண்ணுக்கு வர்ணங்கள்
.. பூசியது!
 
கல்லில் சிரிக்கிறேன்
.. என்றுசொல்லி - ஜீவ
காவியம் சிற்பமாய்த்
.. துள்ளியது!
 
சொல்லில் சிரிக்கிறேன்
.. என்றுசொல்லிக் - கவிச்
சோதியோ அண்டம்வான்
.. அள்ளியது!

Tuesday, September 4, 2012

பனிப் பரல்கள்

பனிப் பரல்கள்
 
புள்ளியாய் இறைத்த
.. பூம்பனிக் கூளங்கள்
வெள்ளியாய் நிறைத்த
.. வெண்மணிச் சோளங்கள்
 
மாப்பொடி நன்கு
.. மலர்த்திய கோலங்கள்
பூப்படிமம்கொள்
.. பொரிப்பொரி ஜாலங்கள்
 
கண்மூடித் தெளித்த
.. கண்ணாடித் தூவல்கள்
விண்மூடித் துளிர்த்த
.. வேடிக்கைச் சீவல்கள்
 
பால்நிலாச் சிட்டின்
.. பருவமென் முட்டைகள்
வேனிலாத் திட்டின்
.. விடியல் கண் மொட்டுகள்
 
இரவெலாம் சிந்தும்
.. இளநீரின் முத்துகள்
பரவலாய் முந்தும்
.. பரல்மணி வித்துகள்

Monday, September 3, 2012

வசந்த ராகம்

வசந்த ராகம்
 
பூக்களைக் கொண்டே பொழுதெலாம் தென்றலின்
.. புத்துயிர் சுவாசிக்கும் - தேன்
ஈக்களைக் கொண்டே இயலிசைநாடக
.. இங்கிதம் வாசிக்கும்
 
சலசல ஓடையில் சங்கீத வீணைகள்
.. சந்தங்களை மீட்டும் - அந்தக்
கலைகொளும் வீணைக் கமகங்களின் நிறம்
.. கந்தருவம் கூட்டும்
 
மாந்தளிர்த்தோரண மையலில் சிக்கி
.. மனம்களி வண்டாகும் - கொடிப்
பூந்தளிர் கோதிப் புனைகுயில் சிட்டுகள்
.. புண்ணியப் பண்பாடும்
 
அரும்(பு)அவிழாத பல்லாயிரம் மொட்டுகள்
.. ஆங்காங்கு கண்வெட்டும் - பனிக்
குறும்புகளாய் அங்குக் கொப்புளிக்கும் தளிர்
.. கோபுர விண்முட்டும்
 
வசந்த வருகையை வா எனச் சொல்லிமெய்
.. வாலிபம் வரவேற்கும் - துணை
இசைந்(து)அநுராக இதயங்கள் எல்லாம்
.. இணைந்து கரம்கோக்கும்

Sunday, September 2, 2012

வசந்த முத்திரை

வசந்த முத்திரை
 
வந்தனத்துடன் சந்தனத் தமிழ்
.. வாரி வாரி இறைக்கிறாள்
வண்ண வண்ணமும் கிண்ண கிண்ணமும்
.. வாங்கிப் பூவாய் நிறைக்கிறாள்
 
சிந்து சிந்தெனப் பந்து பந்தெனச்
.. செம்மாங் காயும் புடைக்கிறாள்
சிந்து நாடகம் தந்த தோ(டு)அகம்
.. ஜீவ காவியம் படைக்கிறாள்
 
முந்து முந்தெனத் தந்தனம்தன்
.. மோகப் பாடல் வடிக்கிறாள்
முல்லை கொல்லையில் மெல்ல எல்லையில்
.. மூதரும்பும் வெடிக்கிறாள்
 
இந்த விந்தையில் நம்தம் சிந்தையில்
.. ஏற்றம் காண வரிக்கிறாள்
இன்பச் சித்திரை அன்பு முத்திரை
.. ஏதும் தானாய்ப் பொறிக்கிறாள்

Friday, August 31, 2012

வேனல் விழா

வேனல் விழா
 
வசந்த மகட்கோர் வரவே பெனப்பொடி
வாரி இறைத்தாச்சு - வர்ணம்
தூறி நிறைச்சாச்சு - காற்றில்
அசைந்தசைந்தே அவை ஆயிரம் பூமத்தாப்(பு)
ஆட்சியும் உண்டாச்சு - பட்டாம்
பூச்சியும் கண்டாச்சு
 
காமனும் தன்வில்லைக் கைவிட்டுப் போகக்
ககனவில் ஈர்ப்பாச்சு - எழில்
மிகநவில் வார்ப்பாச்சு - கோடிப்
பூமன்னும் சித்திரப் பொன்மகரந்தமும்
பூக்கோலம் இட்டாச்சு - பனி
மாக்கோல மொட்டாச்சு
 
மூண்டெழும் வெள்ளலை மோதிக் கடலும்
முழக்கும் முரசாச்சு - தெம்போ(டு)
அழைக்கும் அரசாச்சு - காலம்
பூண்டெழும் மற்றொரு பூரிப்(பு) இது எனும்
பூரணம் இன்றாச்சு - இன்பத்
தோரணம் நன்றாச்சு
 
மரந்தளிரும் கிளி மாயமும் வான் திசை
மாறிய காடாச்சு - நிலா
ஏறிய மேடாச்சு - வாணி
சார்ந்தொளி நெஞ்சமும் சாந்தியும் அன்புமாய்ச்
சத்தியம் பூத்தாச்சு - அருள்
நித்தியம் கூத்தாச்சு
 
பூத்துப் பொலிந்திடப் பூரணி வாஎனப்
பூங்குயில் பாட்டாச்சு - அதோ
மாங்குயில் கேட்டாச்சு - கூட
வாழ்த்தும் வரவேற்பும் வைகறையாய் உஷை
வாசல் படைச்சாச்சு - நம்முள்
பூசல் உடைச்சாச்சு
 
பட்டபாட்டிற்குப் பணப்புதையல்போல்
பரிதியும் வந்தாச்சு - தனி
உறுதியும் தந்தாச்சு - இனி
விட்டது குளிரும் வெற்றி என்றே இள
வேனல் விழவாச்சு - யுக
மே, நல் உழவாச்சு

Thursday, August 30, 2012

வண்ணத்துப்பூச்சி

வண்ணத்துப்பூச்சி
 
ஜிகுஜிகு வண்ணத்துப் பூச்சி - உன்
சிறகினில் எத்தனை வீச்சு
வெகுசுக மாய்ப்பறந்தாச்சு - உனை
விட்டதும் நல்லதாய்ப் போச்சு
 
அழகழ காயிரம் வண்ணம் - கொள்நீ
அங்கங்கு தாவிடும் எண்ணம்
பழகினதெங்கு? சொல் திண்ணம் - உன்போல்
பறந்திட ஆவல்மண் விண்ணும்
 
கொள்ளைவர் ணங்களைக் கொண்டே - உனைக்
கொழித்ததில் யாரின்பங்குண்டே?
அள்ளக் குறையாது கண்டே - மனம்
ஆசையில் போகுது வண்டே!
 
தகதகப் பூம்பொடித் தங்கம் - என
தான்மின்ன எத்தனை அங்கம்
மிகமிக மேனிகொள் எங்கும் - சுக
மெல்லிய ராகங்கள் பொங்கும்
 
சிறகென்ன சித்திரப் பட்டா? - இல்லை
செங்கீற்று மின்னலின் வெட்டா
பிறகென்ன மல்லிகை மொட்டா - அட
பிடிபடாச் சொல்லின் பகட்டா?
 
மலர்தொறும் சென்றுசென்றமர்ந்தும் - கொண்ட
மாயங்கள் தாம் மகரந்தம்
உலருமும் தே சிறகந்தம் - புள்ளி
ஓவியம் புனையுமோ வந்தும்?
 
தங்கக் கடத்தல்கள் தான்நீ - செய்யத்
தந்திரம் கற்றதுன் மேனி
அங்கங்(கு) அலைந்திடும் தேனீ - கூட
ஆவதில்லை உன்போல் கூனி
 
காதலி என்னவள் கன்னம் - எனக்
கனிந்துன் சிறகுகள் மின்னும்
ஆதலின் உன்னையே இன்னும் - தொடர்
ஆசைகள் என்னையே தின்னும்
 
பூவுக்குப் பூமெல்லத் தாவும் - துளிப்
போதிலும் உல்லாசம் தூவும்
வாழ்வுக்கு நீஎங்குலாவும் - தெய்வ
வரங்களைப் பெற்றனை யாவும்?
 
குங்குமம் மஞ்சள் குளித்துப் - பல
கோலங்கள் இன்னும் தெளித்துத்
துங்கமின் வெட்டும் துளிர்த்து - நீகொள்
துள்ளலும் ஏன்? சொல் களித்து
 
வாய்ப்புகள் எவ்வெவெர் வாழ்வும் - தொட்டு
வருவது போலெந்தப் பூவும்
மேய்ப்புகள் கொண்டிட மேவும் - விந்தை
மேன்மைஉன்பால் அன்றோ நீவும்
 
வசந்தமும் நின்வரவேற்கும் - சொர்க்க
வாசலும் நீவரப் பார்க்கும்
அசைந்தசைந் தேமது வார்க்கும் - மலர்
அணிக்கும்நின் மேல் அன்றோ நோக்கும்
 
சுறுசுறுப் புக்கோர் பொறுப்பே - உன்
சுறுசுறுப் பென்றும் சிறப்பே
மறுபிறப் புக்கோர் விருப்பே - எனில்
மகிழ்வதும் நான் உம் பிறப்பே
 
ஜிகுஜிகு வண்ணத்துப் பூச்சி - உன்பூஞ்
சிறகினில் எத்தனை வீச்சு!
வெகுசுக மாய்ப்பறந்தாச்சு - எல்லாம்
வேடிக்கை யாய்ச்சொல்லப் போச்சு

Wednesday, August 29, 2012

வானவில்

வானவில்
 
வானச் சாசனம்
வர்ணப் பாசனம்
வேனல் இயற்கையின்
விரிமயில் ஆசனம்
 
ஊஞ்சல் மோகனம்
ஓளிவில் வாகனம்
தீஞ்சொற் கவிதையின்
திசைமகள் சீதனம்
 
சொர்ண மாளிகை
சொர்க்கத் தூளிகை
வர்ணப் பீடமேல்
வான்மகள் ஆளுகை
 
நவமணிப் பட்டியல்
நளினமின் வெட்டியல்
குவைமணிச் சரடெனக்
கோத்தபொன் அட்டியல்
 
கதம்பத் தோரணம்
கவர்ச்சிப் பூரணம்
விதம்பல செய்திடும்
வேடிக்கை காரணம்
 
கற்பனை ஆலயம்
காவிய மாலயம்
சிற்பநல் ஓவியச்
சிந்துரச் சாலையும்
 
வரையாச் சித்திரம்
வசந்தன் கைத்திறம்
அரையாய் வளைந்தவில்
அம்பில்லை; பத்திரம்

Tuesday, August 28, 2012

கடல்

கடல்
 
ஒன்றன்பின் ஒன்(று) அலை ஓடும் - அதில்
உன்னத வெண்ணுரை ஆடும் - ஒளிக்
குன்றென வெள்ளியைக் கொண்டே உருக்கிய
கோலம்போல் அந்நுரைப் பாடும் - காணக் கூடும்
 
மீன்களும் ஆயிரம் மேவும் - தண்ணீர்
மீதொரு வேளையில் பாயும் - அவை
தான்கொத்திப் போகவே மீன்கொத்திப் புட்களும்
தந்திரமாய் அங்கே சாயும் - ஏமாந்(து) ஓயும்
 
கட்டு மரம் பல காணும் - அவை
காவியச் சித்திரம் பூணும் - இன்னும்
எட்டும் அலையெலாம் ஏறி இறங்கி
எழில்மகள் ஊஞ்சலாய்த் தோணும் - ஒரு கோணம்
 
பதுங்கிட மண்வளை பார்க்கும் - பின்னும்
பறித்த மணல்குழி சேர்க்கும் - தரை
ஒதுங்க அந்நண்டினம் ஊர்ந்து வருமுன்னே
ஓடிவரும் அலை தூர்க்கும் - தன்னுள் ஈர்க்கும்
 
கொத்தொடு முத்தம் கொழிக்கும் - எல்லாம்
கொண்டு நீராழம் ஒளிக்கும் - மிகப்
பித்தொடு பித்தாய்ப் பிதற்றிடுவார்போல்
பெருமூச்செறிந்து பழிக்கும் - தண்ணீர் தெளிக்கும்
 
பளபளக்கும் வைரப் பாலம் - இடா
பாற்கடல் காணிரோ மேலும் - அதில்
களைபெற ஞாயிறு கால் ஊன்றி ஏறவும்
கைதொழப்போம் இந்த ஞாலம் - தெய்வக் கோலம்

Monday, August 27, 2012

நீர்க்குமிழி

நீர்க்குமிழி
 
ஆறுவிடும் கண்ணீர்
அழுகைத் தொணதொணப்பு
மாறுபடும் அந்நீர்
மவுனமுணுமுணுப்பு
 
கார்த்திகைநீரோடை
காட்டும் அகல்விளக்கு
பார்த்துகையால் ஆடப்
பல்லாங்குழி அடுக்கு
 
துள்ளுபுனல் மீறித்
துவளுமலர் மொட்டு
கொள்ளைமகிழ் நீரின்
கோலப்பொடிப் பொட்டு
 
இளம்சிறுவர் ஆடி
எறிந்தரசகுண்டு
குளம்சிரிக்கப் பாடிக்
கொழிக்கும் இசைவண்டு
 
நீலமயில் தோகை
நீண்டவிழிச் சிமிட்டு
காலமெய்யை ஆக
காட்டும் கணநிமிட்டு
 
நீரினுள் ஓர் நாகம்
நெடுமூச்சேறி கொதிப்பு
ஊரிலுள்ளோர் தாகம்
உணர்த்துமறுபதிப்பு
 
தேன் எனவே ஓடித்
திளைக்கும் நுரை எறும்பு
மீன் அலைக்குள் ஊடி
மீட்டும் சிறு குறும்பு
 
நாணமிடும் ஓடை
நளினவிழி வெட்டு
பூணழகுக் கூடைப்
பூவின் செடித் தட்டு
 
குலை அறுந்து போன
கொடிமுந்திரித் திரட்டு
மலைஉருண்ட தான
மணிக்கம்பளப் பகட்டு
 
அருவிஜல தரங்கம்
அடுக்கும் சுரக்கொழிப்பு
மருவிமன அரங்கம்
மலரும் கிளிகிளுப்பு
 
நீர்த்தடத்தின் மீதே
நிமிரும் தலைச் சிட்டு
பார்த்திருக்கும் போதே
பதுங்கும் உடை பட்டு
 
மூழ்கியநீர்க் காக்கை
முட்டை அணிவகுப்பு
வாழ்க எனும் வாழ்க்கை
மறையும் உயிர்த் தொகுப்பு
 
நிலையாமை மேவி
நிலைத்த உயிர்ச்சான்று
கலையாய் என் பாவின்
கட்டியம் இஞ்ஞான்று
 
மீன்பிடிக்கும் வலையின்
மிதக்கும் கனமுடிப்பு
வான் உடுக்கள் தொலைஊர்
வலமோகனப் படைப்பு
 
திடீர்மழையால் வந்த
திகைப்புக் குறியீடு
அடைமழையால் இந்த
ஆணிமுத்துக் காடு

Sunday, August 26, 2012

புதுவெள்ளம்

புதுவெள்ளம்
 
வெள்ளமோ வெள்ளம்! - புது
வெள்ளமோ வெள்ளம்!
 
பொங்கு திரை
நுங்கு நுரைப்
புனல் வழியும் வெள்ளம் - சுழன்(று)
அங்கு வளைச்
சங்கு களை
அலை அலையாய் அள்ளும்;
வெள்ளமோ வெள்ளம்! - புது
வெள்ளமோ வெள்ளம்!
 
குமிழி யோடும்
உமிழி இடக்
கொப்புளங்கள் நீந்தும்! - ஒளிச்
சிமிழி எனத்
தமிழர் மனைக்(கு)
ஒப்ப விளக்கேந்தும்;
வெள்ளமோ வெள்ளம்! - புது
வெள்ளமோ வெள்ளம்!
 
நன்செய் வளம்
புன்செய்க் களம்
நானிலமும் பாயும்! - மிக
அஞ்சி விட
மிஞ்சி நெடும்
ஆறு கடல் சாயும்;
வெள்ளமோ வெள்ளம்! - புது
வெள்ளமோ வெள்ளம்!
 
அணை மதகும்
இணை மதகும்
அரிக்க இரைந்தோடும் - வெள்ளிப்
பணமும் நுரைக்
கணமும் ஒரு
பணயம் எறிந்தாடும்;
வெள்ளமோ வெள்ளம்! - புது
வெள்ளமோ வெள்ளம்!

Saturday, August 25, 2012

அருவி

அருவி
 
கழற்சிக் காயெனக்
கரைநீர்த் திவலைகள்
சுழற்சியாய் ஆடும்
சுந்தர நாட்டியம்
 
கோணமாய்ச் சார்த்திய
குன்றெனும் வீணைமேல்
பாண நதிமகள்
பண்ணும் ஆலாபனம்
 
சாரல் மலைகொளும்
சங்கீத மேடையில்
ஊரல் நதிகொளும்
ஊர்த்துவ தாண்டவம்
 
மலைமங்கையின்
மார்பக மெந்துகில்
நிலைமை நழுவி
நேர்புரள் காவியம்
 
வெள்ளி இழைகள்
விதம்விதம் கொழிக்கத்
துள்ளி அலைகள்
தொடரும் மாதவம்
 
வீழ்ச்சி என்றாலே
வெறுப்பவர் கூட
வீழ்ச்சி என்றாலே
விரும்பும் சாகசம்!

Friday, August 24, 2012

மழைப் பின்னல்

மழைப் பின்னல்
 
மின்னல் ஊசி
வானத் திலே
என்ன பண்ணுது? - அது
மேகப் பொத்தல்
அத்தனைக்கும்
தையல் பின்னுது!
 
வண்ணமழைக்
கம்பி இழை
என்னபண்ணுது? - அது
வானும் மண்ணும்
இணையச் சர
கூடம் பின்னுது!
 
கொட்டும் இடி
கொட்டமடித்(து)
என்னபண்ணுது? - அது
கும்மி அடித்
தோடி மரக்
கூந்தல் பின்னுது!
 
பொங்கி வரும்
நுங்கு வெள்ளம்
என்னபண்ணுது? - அது
புதுநுரையாய்
நாணிக்கோணிச்
சரிகை பின்னுது!
 
இத்தனையும்
பார்க்கப் பார்க்க
என்னபண்ணுது? - நெஞ்சில்
இயற்கை என்ற
வியக்கும் சக்தி
இன்பம் பின்னுது!

Thursday, August 23, 2012

கொடி மின்னல்

கொடி மின்னல்
 
இருட்டழகி கழுத்தேறி
இடிமுழக்கும் அவள்நடனப்
பொருட்டசைந்து பளபளக்கும்
பொற்சரடே! மின்னலடி!
 
கரியசுவர் மேலிருந்து
காற்றினுக்குத் தக்கபடிச்
சரிகை அலைந் தாடுமலர்ச்
சரக்கொடியோ மின்னலடி!
 
குகைச்சுரங்கம் திறந்தவுடன்
கொடிபறக்க ஓடியெங்கும்
தகைச்சுரங்கம் ஆனதங்கத்
தோரணமோ, மின்னலடி?
 
மழைநீரில் ஆடியவிண்
மங்கைதிசைக் கார்குழலில்
இழைநீவச் சிணுக்கெடுக்கும்
இங்கிதமோ, மின்னலடி?
 
மேகமடர் குகைவழியே
மெல்லஎட்டிப் பார்த்த மயில்
தோகைமடல் விரித்தபடித்
துள்ளுவதோ மின்னலடி?
 
நூல்வலைகள் தாம்விரித்தால்
நொடியில்விழா மீன்களென்று
வேல்வலைகள் தாம்விரித்த
விந்தைகளோ மின்னலடி?
 
எண்ணமிலாச் சிந்தையுள்ளும்
இப்படியே பற்பலவாம்
வண்ணமெலாம் கொண்டுவரும்
வான்கொடையோ மின்னலடி?

Wednesday, August 22, 2012

மயில்

மயில்
 
பதுக்க முடியாப்
பவுன் முத்திரைநீ!
ஒதுக்க முடியா
ஓவியத் திரைநீ!
 
நட்டுவம் இன்றி
நடத்தும் கலைநீ!
கொட்டு முழக்கின்றிக்
குதிக்கும் சிலைநீ!
 
உழைக்காப் புதுமை
உயிர்ப்(பு) அறுவடை நீ!
இழைக்கா இயற்கை
இலக்கியக் கொடைநீ!
 
நீலத் தோகையின்
நேர்துறை முகம்நீ!
கோலத் தனிஎழில்
கொட்டும் யுகம்நீ!
 
அழகு நடன
அரும்பத வுரைநீ!
மெழுகுப் பச்சையின்
மின்னலை நுரைநீ!
 
மழைக்காலத்தின்
மருமகப் பிள்ளைநீ!
திளைக்க மரகதம்
திரண்ட பொற்கிள்ளைநீ!
 
உயிராய்க் கிடைத்த
ஒளிப்புதையல்நீ!
அயராது மகிழ்வேன்
ஆடுக மயில்நீ!

Tuesday, August 21, 2012

பட்டாம் பூச்சி!

பட்டாம் பூச்சி!
 
பூப்பறிக்கப் போனேன்
பூபறந்து போச்சு!
போனவண்ணம் பார்த்தேன்
காணவண்ணப் பூச்சி!
 
படம் எழுதப் போனேன்
படம் எழுந்துப் போச்சு!
தடம் மருண்டு பார்த்தேன்!
தகத்தகாயப் பூச்சி!
 
மின்னல்கிள்ளப் போனேன்
மின்னல்துள்ளிப் போச்சு!
என்ன என்று பார்த்தேன்!
இந்திரவில் பூச்சி!
 
பட்டுகண்டு போனேன்
பட்டெனவே போச்சு!
தொட்டெடுக்கப் பார்த்தேன்
துளித்துளிபொன் பூச்சி!
 
சுடரணைக்கப் போனேன்
சுடர்தெறித்துப் போச்சு!
அட, வியந்து பார்த்தேன்
அடடா, பட்டாம் பூச்சி!

Monday, August 20, 2012

பத்தாம் பிறை

பத்தாம் பிறை
 
கூடைக்கு ளேசிறு
கூடை கவிழ்த்திய
கோலமே போன்ற நிலா - வெள்ளித்
தாலமே போன்ற நிலா - மலர்
மேடைக்கு மத்தியில்
மீதொளி ஆசன
மிட்டது போன்ற நிலா - முறத்
தட்டது போன்ற நிலா
 
அல்லிக் குளத்தின்
அரும்தா மரைஇதழ்
ஆடுதல் போன்ற நிலா - அன்னம்
ஓடுதல் போன்ற நிலா - கலா
வல்லிக்(கு) இயற்கையே
வாழ்த்திய ஆரத்தி
வட்டத்தைப் போன்ற நிலா - தெப்ப
மட்டத்தைப் போன்ற நிலா
 
சித்திர முத்தைச்
சிறப்பாய்க் கருக்கொளும்
சிப்பியைப் போன்ற நிலா - பட்டுத்
தொப்பியைப் போன்ற நிலா - மிகப்
பத்திர வேலைகொள்
பாங்குடன் தோன்றும்
பதக்கத்தைப் போன்ற நிலா - சிற்பச்
சதுக்கத்தைப் போன்ற நிலா
 
சீவிய தென்னையின்
செவ்விள நீர்க்காய்
தெரிவது போன்ற நிலா - துண்டாய்
விரிவது போன்ற நிலா - வண்ணம்
ஓவியம் தூரிகை
ஊன்றிக் குழைக்க
உறைமடல் போன்ற நிலா - பத்தாம்
பிறைமடல் தோன்றும் நிலா!

Sunday, August 19, 2012

ஏன் போனாள்?

ஏன் போனாள்?
 
கோலமிடப் புள்ளி இட்டுக்
கோடிழுக்கா முன்னம்
வாலைநிலாக் கிண்ணிவிட்டேன்
வஞ்ச இரா போனாள்?
 
மல்லிகைப்பூ குவியலிட்டு
மாலைகட்டா முன்னம்
மெல்லநிலாக் கூடைவிட்டேன்
மின்னல் இரா போனாள்?
 
தாதியரோ(டு) ஆட்டமிட்டுத்
தண்ணீர்கொளா முன்னம்
சோதிநிலாக் குடத்தைவிட்டேன்
சொக்கி இரா போனாள்?
 
அரங்கெனவே தோரணமிட்(டு)
ஆடவரா முன்னம்
மருங்கில்நிலா முரசைவிட்டேன்
மங்கை இரா போனாள்?
 
பெண்கள்புடை சூழவிட்டுப்
பேணிக்கொளா முன்னம்
கண்கொள்நிலாக் குழந்தைவிட்டேன்
கன்னி இரா போனாள்?
 
போனதென்ன காரணமோ?
புரியவில்லை யேனும்
வானவன் தன் காதலிக்கே
வாழ்த்துரைக்க லானேன்!

Saturday, August 18, 2012

தெய்வ தீபம்

தெய்வ தீபம்
 
நீண்டு சிவந்து நிமிர் மிளகாய் எனத்
தூண்ட எரியும் தூமணித் தீபம்!
 
சிவந்தும் மலராய்ச் செம்பருத்தியின்
குவிந்த மொட்டுபோல் கொழும்சுடர்த் தீபம்
 
பழுத்த மாதுளைப் பழமே தொங்கிடத்
திளைத்த காட்சிபோல் திகழ்வுறும் தீபம்
 
தாரை மழைநீர் தரைமேல் விழுகையில்
நேரும் குமிழ்போல் நிரம்பிடும் தீபம்
 
செக்கச் சிவந்து சிலிர்த்திடும் கோழியின்
தக்க கொண்டைபோல் தழல்பெறும் தீபம்
 
தாழப் பூத்தும் தழைக்கும் நாண
வாழைப் பூப்போல் வரிசைகொள் தீபம்
 
புதியது கண்ட அப் போதே விஞ்ஞானியின்
சுதி ஓலிக் கண்கள் போல் ஜொலித்திடும் தீபம்
 
காந்தள் விரல் எனும் கைவிளக்கேந்தியே
பூந்தண் அழகியர் புனைந்திடும் தீபம்
 
முத்து விளக்கிதழ் முறுவலில் ஏற்றுவோர்
குத்து விளக்கெனக் கொலுவிடும் தீபம்
 
குடும்ப விளக்கெனும் குல மடவார் கைப்
படும்பொன் விளக்கெனப் பளிச்சிடும் தீபம்
 
பனித்துளிக் காலைப் பரிசுக் கிரவெலாம்
தனித்துளித் துளியாய்த் தவம்செயும் தீபம்
 
இருளுக்கும் வான் உடு ஏற்றிடக் கண்டே
அருளுக்கு வையகம் ஆராட்டும் தீபம்

Friday, August 17, 2012

அந்தி வந்தது

அந்தி வந்தது
 
அந்தி வந்தது அந்தி - ஒரே
அழகு தந்தது முந்தி
 
சிந்திச் சிந்தி இறைத்த பூக்கள்
சிற்பக் கோலம் பூண்டன - அந்தச்
சிதரில் ஒளிப் புதரில் மனம்
சென்று சென்று மீண்டன
அந்தி வந்தது அந்தி - ஒரே
அழகு தந்தது முந்தி
 
குந்திக் குந்தி எழுந்த சிட்டுக்
குருவி மீண்டும் அமர்ந்தன - அவை
கொத்திக் கொத்தி விழுந்த நெல்லின்
குவியல் யாண்டும் சுமந்தன
அந்தி வந்தது அந்தி - ஒரே
அழகு தந்தது முந்தி
 
துள்ளித் துள்ளி வெள்ளிக் கிண்ணம்
தொலைவில் எங்கும் உருண்டன - நிலாத்
துளிக ளென்னும் ஒளி அமுதச்
சுவையை மொண்டு புரண்டன
அந்தி வந்தது அந்தி - ஒரே
அழகு தந்தது முந்தி
 
எள்ளி எள்ளி இறைத்த பொற்கா(சு)
எடுப்பார் இன்றிக் கிடந்தன - அவை
எண்ணி எண்ணி முடியு முன்னே
இரவுப் படை தொடர்ந்தன
அந்தி வந்தது அந்தி - ஒரே
அழகு தந்தது முந்தி
 
கோடி கோடிச் சிமிட்டல் கொண்டு
குறும்பு விழி பூத்தன - அந்தக்
குறும்பு விழிப் பார்வை எல்லாம்
நிரம்ப மணி கோத்தன
அந்தி வந்தது அந்தி - ஒரே
அழகு தந்தது முந்தி
 
ஓடி ஓடி மின்மினிகள்
உயர உயர மொய்த்தன - அந்த
உப்பரிகைக் காடனைத்தும்
ஒளிச்சரிகை தைத்தன
அந்தி வந்தது அந்தி - ஒரே
அழகு தந்தது முந்தி
 
புலர்ந்து புலர்ந்(து) உலைக்களத்தின்
பொரித்து கள்கள் தெறித்தன - அந்தப்
போர்க்களத்தில் மலைகளெல்லாம்
பூவாணமாய்ச் சிரித்தன
அந்தி வந்தது அந்தி - ஒரே
அழகு தந்தது முந்தி
 
கலந்து கலந்(து) இருளும் ஒளியும்
கண்ணா மூச்சே ஆடினே - அந்தக்
கால முறை ஆடலுக்கும்
கவிதை வீச்சே கூடின
அந்தி வந்தது அந்தி - ஒரே
அழகு தந்தது முந்தி

Thursday, August 16, 2012

விடியல் வியப்புகள்

விடியல் வியப்புகள்
 
வசந்தங்கள் பூத்து வரிசை இடப் - பனி
வயிரங்கள் கோத்துத் தரிசைநட
அசைந்தெங்கும் நீள அவிநயமாம் - தென்றல்
அமரபூ பாளக் கவிநயமாம்
 
காலை அரும்புகள் கட்டியமாம் - அவை
காணச் சுரும்புகள் முட்டியும் ஆம்
கோல ரகசியம் கூறிடுமாம் - அதில்
கோடி அவசியம் தேறிடுமாம்
 
பொரிப்பொரிக் கிண்ணத்துப் பூச்சிகளாம் - அவை
பொடிப்பொடி வண்ணத்துக் காட்சிகளாம்
விரிப்பொடும் பூம்பொழில் விட்டில்களாம் - அந்த
வியப்புக்குக் காம்பெழில் கட்டில்களாம்
 
ஓடை அருவிகொள் உல்லாசம்தான் - அங்கே
ஒதுங்கும் குருவிகள் நல்வாசம்தான்
கூடை மலரும் கொலு எனலாம் - நிசிக்
கொத்தாய்ப் புலரும் நிலவெனலாம்
 
பின்னும் என்னென்ன பிதற்றல்களாம் - கிளிப்
பிள்ளைபோல் சொன்ன குதற்றல்களாம்
சொன்ன ஒவ்வொன்றும் புதுநலம்தான் - தெய்வ
சொர்க்கமாய் நின்ற குதூகலம்தான்

Wednesday, August 15, 2012

உதயம்

உதயம்
 
முன்னிருட் கங்குலில்
மின்னிய மீன்கணம்
முத்துப் பனியாச்சு - புல்மேல்
இறைத்த மணியாச்சு - வயசுக்
கன்னியும் செப்பொடு
தன் இல்லம் விட்(டு)ஆறு
காண நடந்தாச்சு - கன்னத்தில்
நாணம் படர்ந்தாச்சு
 
மேலை நெடுவானில்
கோல நிலாவட்டம்
மேனி வெளுப்பாச்சு - உயிரோ(டு)
ஊனில் களிப்பாச்சு - இளைய
காலை நளினிக்குக்
கட்டியம் கூறிப்பூங்
காவும் விழிப்பாச்சு - கண்முன்னம்
யாவும் செழிப்பாச்சு
 
ஓடை மதகுநீ
ரோ(டு)ஒளிச் செங்கதிர்
ஊடிச் சிலிர்த்தாச்சு - நுரைநுரை
ஆடிச் சலிச்சாச்சு - முகிலில்
மூட மிடும்பனிக்
கூடம் விலகிநம்
முற்றம் எழிலாச்சு - இயற்கையே
முற்றும் தொழிலாச்சு
 
மாடப் புறாவும்செங்
காடைப்புள்ளும் திசை
மாறிப் பறந்தாச்சு - சிவ்வென
ஏறி விரைந்தாச்சு - அதனைப்
பாடப்பா டப்புதுப்
பாங்கில்பண் ணோடும்
பரவசம் உண்டாச்சு - இறைவன்
அருள்வசம் கண்டாச்சு
 
பழனச் சதிர்கொள்
வளநெற் கதிர்களும்
பாரில் படிஞ்சாச்சு - துயரும்
ஊரில் விடிஞ்சாச்சு - வீட்டின்
இழைநறும் கோலம்
எலாம்பரங் கிப்பூ
இதயம் மலர்ந்தாச்சு - அடடே
உதயம் புலர்ந்தாச்சு

Tuesday, August 14, 2012

கதிர்மகள்

கதிர்மகள்
 
வண்ணக் குழம்போ?
வானப் பிழம்போ?
வருகுது பார், தம்பி - அது
சொர்ணக் குழம்பாய்ச்
சோதித் தழும்பாய்ச்
சுழலுது பார், எம்பி!
 
தங்கக் குடமோ?
தாமரைப் படமோ?
தழையுது பார், தம்பி - அது
பொங்கும் குடமாய்ப்
பூரிப் பிடமாய்ப்
பொலியுது பார், எம்பி!
 
வயிரமின் தட்டோ?
வார்கடல் திட்டோ?
வனப்(பு) அது பார், தம்பி -அது
இயற்கையின் தட்டாய்
எழில்மகள் பொட்டாய்
ஏறுது பார், எம்பி!
 
காலக் குளமோ?
ககனப் பழமோ?
கண்டவர் யார், தம்பி? - அது
மூலக் குளமாய்
முற்றும் வளமாய்
மூண்டது பார், எம்பி!
 
மண்ணுக் கரசோ?
மன்னர் முரசோ?
மருவுது பார், தம்பி! - அது
கண்ணுக் கரசாய்க்
கடவுட் பரிசாய்க்
காண்பதும் பார், எம்பி!
 
கங்குல் முடிவோ?
கவலை விடிவோ?
கதிர்முகம் பார், தம்பி - அது
மங்கலக் காலை
மணமகள் கோல
மகிழ்ச்சியு மாம், எம்பி!

Monday, August 13, 2012

எழிற்காலை

எழிற்காலை
 
இரவெலாம் வானம்
கருவுயிர்த் தீன்ற
இளம்சிசுக் காலை - தங்கப்
பழம்பசுங் காலை - அதன் ஒளி
முறுவலாம் தேனைப்
பெறஎலாம் விம்மின
மோகனச் சோலை - தெய்வம்
ஆகநல் வேலை
 
விரிகடல் எல்லாம்
சரிகைகள் பின்னி
விளையாடும் காலை - வர்ண
இழையோடும் காலை - அதன் தனி
மெருகோடும் கண்டேன்
சருகுகள் தாமுமே
மின்னிடும் லீலை - இளம்
பொன்னுடற் சேலை
 
கிளையெலாம் மேலும்
ஒளிமுலாம் கோலம்
கிறுக்கிடும் காலை - வியந்(து) அதன்
வழிநடந் தேக
நளினமாய்த் தென்றல்
வழிகாட்டும் சாலை - எல்லாம்
எழில்கூட்டும் காலை

Sunday, August 12, 2012

எழிலும் தொழிலும்

எழிலும் தொழிலும்
 
மின்னல் மரகத மேடையிலே - கதிர்ச்
செந்நெல் கரகம்முன் ஆடையிலே
முத்துப் பனித்துளி மொட்டுகள்நான் - வைர
வித்து மணித்துளிச் சொட்டுகள்நான்
 
உள்ளம் வெடித்த நிலங்களிலே - கண்ணீர்
வெள்ளம் வடித்த புலங்களிலே
உழைப்பவர் வேர்வை யுறுதுளிநான் - அங்குக்
களைப்பவர் ஜீவச் சிறுதுளிநான்
 
மஞ்சள் வெயில்வரும் மாலையிலே - கூடிக்
கொஞ்சும் குயில்வரும் வேளையிலே
மனம்முறிந் தோர்தம் மழைக்கண்ணீர்நான் - கூலி
தினமறிந் தோர்தம் பிழைக்கண்ணீர்நான்
 
அந்தர வான அடவியிலே - காயும்
சுந்தர சீனப் புடவையிலே
அள்ளி இறைத்த அழல்மலர்நான் - கோலப்
புள்ளி நிறைத்த தழல்மலர்நான்
 
எழிலென்றும் என்னை எழுதிடுவார் - அதன்
தொழிலென்றும் என்னைத் தொழுதிடுவார்
எழிலெனில் உள்ளேன்மெய் எண்ணத்திலே - அதன்
தொழிலெனில் உள்ளேன்கை வண்ணத்திலே

Saturday, August 11, 2012

கவிதை

கவிதை
 
கூளமாய்க் கலைந்த உட்
.. குரல்மனப் பூக்களை
மேளமாய்ப் புனைந்தஎன்
.. மெய்விரல் நாடகம்
 
என்னையே உருக்கி
.. இதயம்கொள் உணர்ச்சியில்
பொன்னையே பெருக்கும்
.. புதுச்சுடர் மந்திரம்
 
வாகனக் கற்பனை
.. வசந்த விழாக்களில்
மோகனச் சொற்கொளும்
.. மூர்த்திதன் ஊர்வலம்
 
நாக்குத் திரியில்
.. நர்த்தனம் ஆடி
வாக்குச் சுடர்தான்
.. வரையும் சாகசம்
 
மூளியாய்க் கிடந்தஎன்
.. மொழும்கல் மனத்தினை
காளியாய்ப் படைத்தொளி
.. காட்டிய தரிசனம்

Friday, August 10, 2012

கவிக்குருவி

கவிக்குருவி
 
குருவிஒரு குருவி - சின்னக்
குருவிஒரு குருவி - நான்
குருவிஒரு குருவி - சின்னக்
குருவிஒரு குருவி
 
கருவில் உருவாகிக்
கவித்திருவும் ஆகிப்
பெருவெளியின் மீதும்
பேரொளியைக் கோதும்
குருவிஒரு குருவி - சின்னக்
குருவிஒரு குருவி
 
பரசிவமாம் வெள்ளம்
பாய்ந்துணர்வை அள்ளும்
வரசிவமாய் என்னை
வாழ்த்திடுவன் அன்னை
குருவிஒரு குருவி - சின்னக்
குருவிஒரு குருவி
 
ஞானமென்ற நாழில்
நாதமென்ற பாழில்
ஊனமொன்று நீங்க
உயிர்ச்சிறகு தாங்கக்
குருவிஒரு குருவி - சின்னக்
குருவிஒரு குருவி
 
அந்தரத்துத் தென்னை
அயர்ந்து வரும் என்னை
வந்தமரச் சொல்லும்
வசைமனத்தைக் கொல்லும்
குருவிஒரு குருவி - சின்னக்
குருவிஒரு குருவி
 
நெல்லழகு மூக்கும்
நிறைபுவனம் தூக்கும்,
சொல்லமுதக் காற்றில்
சோதிமுளைக் கீற்றில்
குருவிஒரு குருவி - சின்னக்
குருவிஒரு குருவி
 
காலமென்றன் கருவி
கவிதை என்றன் அருவி
ஓலமென்ற மேட்டில்
ஒளிச்சருகுக் கூட்டில்
குருவிஒரு குருவி - சின்னக்
குருவிஒரு குருவி

Thursday, August 9, 2012

தழுவல்

தழுவல்
 
புல்லில் அரும்பி வந்தாள் - அழகி
பொட்டுத் துளியெனவே!
சொல்லில் தழுவுகிறேன்! - அவள்மேல்
சுடராய் இழைவதற்கே!
 
மெய்யில் விளையவந்தாள் - அழகி
மின்வேர்த் துளியெனவே!
உய்யத் தழுவுகிறேன்! - அவள்மேல்
உழைப்பாய் உயர்வதற்கே!
 
மொட்டில் சிரித்துவந்தாள் - அழகி
முத்துத் துளியெனவே!
கட்டித் தழுவுகிறேன்! - அவள்மேல்
காற்றாய் மிதப்பதற்கே!
 
விண்ணில் உருகிவந்தாள் - அழகி
விரிநுண் துளியெனவே!
மண்ணில் தழுவுகிறேன்! - அவள்மேல்
மடையாய்ச் சிரிப்பதற்கே!
 
நெஞ்சில் நெகிழ்ந்துவந்தாள் - அழகி
நினைவுத் துளியெனவே!
செஞ்சொல் தழுவுகிறேன்! - அவள்மேல்
சிந்தனை ஆவதற்கே!
 
எண்ணும் வியப்பனைத்து - அழகி
இமைத்தாள் துளியெனவே!
கண்ணுள் தழுவுகிறேன்! - அவளே
காவிய அகண்டமென்றே!

Wednesday, August 8, 2012

பயணம்

பயணம்
 
நெஞ்சின் நிழலில்
.. நீள நடந்தேன்
செஞ்சொற் கழலில்
.. சிகரம் அடைந்தேன்
 
கேட்ட இடத்தில்
.. கிளர்ச்சி ஆனேன்
பாட்டுத் தடத்தில்
.. பயணம் போனேன்
 
வாழ்க்கைக் குகையுள்
.. வசந்தம் சொரிந்தேன்
வேட்கைப் பகையுள்
.. விதிமேல் சரிந்தேன்
 
இரவின் அகலில்
.. இளமை வரைந்தேன்
பரவும் பகலில்
.. பசிமேல் கரைந்தேன்
 
அழகின் மயக்கில்
.. அமுதம் குடித்தேன்
பழகி வியக்கும்
.. பழைமை முடித்தேன்
 
சிந்தை முகட்டில்
.. சிறிதே களைத்தேன்
சந்தைப் பகட்டில்
.. சரிதம் வளைத்தேன்
 
சொல்லின் அசுவம்
.. சொடுக்கிமுன் விட்டேன்
புல்லின் விசுவப்
.. புதிரையே தொட்டேன்

Tuesday, August 7, 2012

வேண்டுகோள்

வேண்டுகோள்
 
புதிய எண்ணங்கள்
புதிய வண்ணங்கள்
புதுவெள் ளம்போல்
பெருகவிடு - அதில்
விதியின் சிந்தைகள்
விளைக்கும் நிந்தைகள்
விடுத்தின் பங்கள்
பருகவிடு
 
வாழும் நம்பிக்கை
வளர்க்கும் அன்புக்கை
வழிகோத் தென்னை
நடக்கவிடு - அதில்
தோளும் தோளுமாய்த்
தொடரச் சூழுமாய்த்
துயரம் கொன்று
துடைக்கவிடு
 
சிந்தை வேகங்கள்
செயல்வி வேகங்கள்
செறிய மேலும்
வளர்ச்சிகொடு - அதில்
முந்தை மூடங்கள்
முனைந்த வேடங்கள்
முழுதும் சாய
எழுச்சிகொடு
 
இதயம் கோருமாய்
இறைஞ்ச வேறுமாய்
இருப்ப தென்ன,
மனிதனொடு? - அவன்
கதையும் மானிடக்
கவிதை தானிடக்
கனிந்தெம் தாயே
புனிதம்கொடு

Monday, August 6, 2012

கவிஞன் நான்!

கவிஞன் நான்!
 
அற்பு தத்தின்
சொற் பதத்தில்
.. அந்த ரங்க
.. சந்தம் பொங்க
.. ஆடுவேன் - கவி
.. பாடுவேன்.
 
எண்ணம் என்னும்
வண்ணம் மின்ன
.. எக்க ளிப்பின்
.. முக்கு ளிப்பில்
.. ஏறுவேன் - விதி
.. மீறுவேன்
 
மண்ட லத்துச்
செண்டெ டுத்து
.. மையம் பற்றி
.. வையம் சுற்றி
.. மாட்டுவேன் - திறம்
.. காட்டுவேன்
 
காலம் என்ற
ஞால மன்றில்
.. காட்சி யாவும்
.. சாட்சி மேவக்
.. காணுவேன் - வெற்றி
.. பூணுவேன்
 
திங்க ளோடு
தங்க ஊடு
.. தேனி லாவின்
.. வானில் மேவித்
.. தேறுவேன் - இளைப்
.. பாறுவேன்
 
சுந்த ரத்தின்
அந்த ரத்தில்
.. சொக்கும் காதல்
.. மிக்கும் போதை
.. சூழுவேன் - என்றும்
.. வாழுவேன்
 
நாவி யெங்கும்
காவி யங்கள்
.. நவ நிலத்தின்
.. பவனி வைத்தும்
.. நல்குவேன் - பொய்ம்மை
.. வெல்குவேன்
 
பாட்டு வீணை
மீட்டும் ஆணைப்
.. பரவ சத்தின்
.. அருள்வ சத்தில்
.. பாய்குவேன் - சிவம்
.. தோய்குவேன்
 
வாணி அன்னை
பேணி என்னை
.. வைக்கும் அன்பில்
.. மொய்க்கும் இன்பம்
.. வைகுவேன்  - யுகம்
.. செய்குவேன்
 
தீஞ்சொல் தானும்
ஊஞ்சல் ஆன
.. தெய்வம் நேரில்
.. கைவந் தூறத்
.. தேவையே - என்றன்
.. சேவையே

Sunday, August 5, 2012

ஒளியைத் தேடி

ஒளியைத் தேடி
 
ஒளியைத் தேடி நடக்கின்றேன்
இருளை ஊடிக் கடக்கின்றேன்
.. வழியை நாடி விரைகின்றேன்
.. வாழ்வில் கூடிக் கரைகின்றேன்
ஒளியைத் தேடி நடக்கின்றேன்
இருளை ஊடிக் கடக்கின்றேன்
 
பொழுதுத் துளியும் யாழாகப்
புலரி வெளியும் பாழாக
.. அழுதும் அதற்கே மாறாக
.. அருணோ தயத்தின் வேராக
ஒளியைத் தேடி நடக்கின்றேன்
இருளை ஊடிக் கடக்கின்றேன்
 
இதய மூலை ஆய்ந்திட்டேன்
எண்ணச் சோலை பாய்ந்திட்டேன்
.. உதய காலை புகுந்திட்டேன்
.. ஓகோ பொய்தான் மிகுந்திட்டேன்
ஒளியைத் தேடி நடக்கின்றேன்
இருளை ஊடிக் கடக்கின்றேன்
 
நம்பிக் கையே அகலாக்கி
நாளும் அதையே புகலாக்கி
.. அன்பு மனமும் திரிகொண்டே
.. அதற்கும் மேலோர் நெறிகண்டே
ஒளியைத் தேடி நடக்கின்றேன்
இருளை ஊடிக் கடக்கின்றேன்
 
முடியா நீண்ட பயணம்தான்
முனைப்பே தூண்டும் அயனம்தான்
.. மடியாய் அதற்கே மயங்கவில்லை
.. மனம்தான் சிறகு; தயங்கவில்லை
ஒளியைத் தேடி நடக்கின்றேன்
இருளை ஊடிக் கடக்கின்றேன்
 
புதிய யுகத்தின் விடிவொன்று
புகையும் அகத்தின் முடிவென்று
.. எதிலும் துணிச்சல் வரப்பெற்றேன்
.. இதோஇ தோநான் புறப்பட்டேன்
ஒளியைத் தேடி நடக்கின்றேன்
இருளை ஊடிக் கடக்கின்றேன்

Saturday, August 4, 2012

துளித் துளி - மனிதன்

துளித் துளி - மனிதன்
 
அரை குறைப் பிண்டம்
அவசரப் பண்டம்
 
ஒன்றரை மிருகம்
தின்(று)அறை பெருகும்
 
சிந்தனைச் செம்மல்
நிந்தனை விம்மல்
 
வெறிகளால் விலங்கு
நரிகளாய் நலங்கு
 
உல்லாச உள்ளாம்
சல்லாபக் கள்ளம்
 
உத்தம வேடம்
மொத்தமும் மூடம்
 
ஆளாருக் கடிமை
பாழாகும் படிமெய்
 
அரசியற் கலைவன் - பணம்
வரைசெயல் தலைவன்
 
முகத்துதி முனைவன்
புகழ்த்துதி புனைவன்
 
சந்தர்ப்பச் சாதி
வந்தற்ப வாதி
 
சுவருக்குள் புனிதன்
தவறுக்குள் மனிதன்
 
சுயநலச் சித்தன்
அயல்நல எத்தன்
 
கனாக்களில் நோய்பவன்
வினாக்களில் தோய்பவன்
 
தப்புகள் புரிபவன்
தப்பிக்கச் சரிபவன்
 
தப்புகள் சேர்ப்பவன் - பின்
தப்பிக்கப் பார்ப்பவன்
 
பிழைகள் புரிந்தவன் - பின்
பிழைக்கத் தெரிந்தவன்
 
அகப்பட வாய் அற்றவன்
சுகப்படவாய் உற்றவன்
 
பிழைப்பின்மேல் நாட்டம்
பிழைகள் மேல் ஓட்டம்
 
கொள்கையில் குழப்பம்
உள்கையில் இளப்பம்
 
சங்கற்பத் தலைவன்
சந்தர்ப்பப் புலவன்
 
வாய்ப்புக் கடிமை
ஏய்ப்புக் குடி, மெய்
 
நடப்பால் மனிதன்
நடிப்பால் புனிதன்
 
நாள்தொறும் நாடகம்
ஆள் தொறும் பூடகம்

Friday, August 3, 2012

துளித் துளி - உறவு

துளித் துளி - உறவு
 
விரிதலும் ஒருபால் - உடன்
விரிசலும் மறுபால்
 
காசுக்குக் காகம் - பணம்
பேசக்கொள் மோகம்
 
ஒருகணம் அன்பர்
மறுகணம் வம்பர்
 
ஒட்டும் உலகம் - பகை
வெட்ட விலகும்
 
காசுக்குக் கரையும் - பண
ஓசிக்கு விரையும்
 
ஒட்டுவதை ஒட்டும்
வெட்டுவதை வெட்டும்
 
நடிப்புக்கு நாட்களம் - மன
வெடிப்புக்கு வேர்க்களம்
 
பந்தத்தால் பாசம் - வரும்
சொந்தத்தால் மோசம்
 
பணத்தால் பழிக்கும் - எதிர்
குணத்தால் கொழிக்கும்
 
சந்தர்ப்பம் சறுக்கும் - அதை
வந்தற்பம் முறுக்கும்
 
தொல்லைமேல் தொடரும் - ஓர்
எல்லைமேல் இடரும்
 
பாசமேற்பட்டும் - ஆ
வேசமே ஆட்டும்
 
காரியம் படுவது - கால்
வாரியும் விடுவது
 
சோற்றுக்குச் சொந்தம் - கைம்
மாற்றுக்கு முந்தும்
 
விருந்தென வந்தும் - கள்ளப்
பருந்தெனக் குந்தும்
 
பரிவினைப் பகட்டும் - உட்
பிரிவினை புகட்டும்

Thursday, August 2, 2012

துளித் துளி - பொன்மொழிகள்

துளித் துளி - பொன்மொழிகள்
 
பொன்மொழி எதற்கு?
பின்மொழி வதற்கு!
 
மேற்கொள அல்ல
மேற்கோள் சொல்ல
 
எடுத்தே புகலவும்
அடுத்தே அகலவும்
 
உரையில் தொடுவது - நடை
முறையில் விடுவது
 
வாயில் வழங்கலாம் - வழி
தோய விழுங்கலாம்
 
வழிபடக் கூறு
வெளிப்பட வேறு
 
நடத்தைக் கல்ல
நழுவ மெல்ல
 
சந்தர்ப்பத் தழுவல்
சமயத்தில் நழுவல்
 
எனைத்தானும் கேட்க
அனைத்தானும் ஏய்க்க
 
கேள்விமேல் கேள்வி
வாழ்வின் மேல் தோல்வி
 
மதிமேல் பூனை
பதில்மேல் பானை
 
கேட்டார்க் கெதிர்தான்! - சொல்ல
மாட்டார் பதில்தான்
 
அர்த்தங்கள் எண்ண
குதர்த்தங்கள் பண்ண
 
தர்க்கங்கள் தழைக்க
குதர்க்கங்கள் பிழைக்க
 
வேதங்கள் ஓத - வெறும்
வாதங்கள் மோத
 
வழிபடப் பேர்தான்
வழிப்பட யார்தான்?

Wednesday, August 1, 2012

துளித் துளி - முகத்துதி

துளித் துளி - முகத்துதி
 
வாய்ப்புகள் யார்க்கு? - வெகு
வாய்ப்புகழ் வோர்க்கு!
 
தாக்கினால் தாழ்வு - துதி
வாக்கினால் வாழ்வு
 
துதிக்கத் தொடங்கு - பலர்
மதிக்கும் மடங்கு
 
தாங்கத் தாங்க - புகழ்
ஓங்கும் ஓங்கும்
 
முகத்துதி முன்னால்
அகத்துதி பின்னால்
 
துதிசெயத் துதிசெயப் - பல
அதிசயம் அதுசெயும்
 
யாவுக்கும் இன்னுரை - அது
வாழ்வுக்கும் முன்னுரை
 
அள்ளிவிடும் துதி - செயல்
கொள்ளப்படும் மதி
 
அருச்சனைத் திரையில் - பல
பிரச்சனை மறையும்
 
முகத்துக்குச் சொற்கள் - புற
முதுகுக்குக் கற்கள்
 
வாயடிக்கே வாய்க்கும்
காயடிக்கே காய்க்கும்
 
ஆதிக்கம் மேவினும் - துதி
சாதிக்கும் யாவினும்
 
இதழில் கனிரசம்
இதயம் துளிவிஷம்
 
உதட்டில் சொல்வரும்
உள்ளே கல்மிஷம்
 
முகத்துக்கு முன் துதி - நெஞ்சே
அகத்துக்குப் பின் துதி

Tuesday, July 31, 2012

துளித் துளி - வாய்ப்புகள்

துளித் துளி - வாய்ப்புகள்
 
சந்தர்ப்பச் சாக்கு
வந்தொப்பப் போக்கு
 
தூண்டும் திரியில் - சுடர்
மீண்டும் பொரியில்
 
கண்கொத்திப் பாம்பு
பின் கொத்த வீம்பு
 
தூண்டிலில் மீனாய்
தாண்டிடும் வீணாய்
 
கொத்தினால் கொக்கு
எத்தினால் மக்கு
 
தழுவினால் அதிர்ஷ்டம்
நழுவினால் அது இஷ்டம்
 
பட்டாம் பூச்சி
விட்டால் போச்சு
 
விருப்பங்கள் கோபுரம்
திருப்பங்கள் நேர்புறம்
 
வாழ்க்கை வரைக்கும்
வேட்கை முறைக்கும்
 
கனாக்களில் களிக்கும்
வினாக்களில் பழிக்கும்
 
அன்றாட ஆர்வம் - பின்
சென்றோடும் சோர்வும்
 
வரவரப் பார்த்திரு - கை
பெறப்பெறக் காத்திரு

Sunday, July 29, 2012

துளித் துளி - அடக்கம்

துளித் துளி - அடக்கம்
 
அலைகடலே முழங்கும் - முத்தை
ஆழ்கடலே வழங்கும்
 
புலன்கள் அடங்கும் - எனில்
நலன்கள் தொடங்கும்
 
பணிவே துணியும் - அத்
துணிவே பணியும்
 
தாழத் தெரிந்தவன் - நன்கு
வாழப் புரிந்தவன்
 
அடக்கம் ஆயிரம் - அதன்
தொடக்கமாய் இரும்
 
பேச்சில் மவுனம் - செயல்
மூச்சில் கவனம்
 
நாநயம் சுருக்கும் - அது
ஊனையும் உருக்கும்
 
தானே தாழ்ந்தவர் - புகழ்
வான்நேர் வாழ்ந்தவர்
 
பணிவாய்ப் படர்ந்தவர் - செயல்
துணிவாய்த் தடர்ந்தவர்
 
அணிஎன அணிவது
பணிஎனப் பணிவது
 

Saturday, July 28, 2012

துளித் துளி - கவிதை(2)

துளித் துளி - கவிதை(2)
 
கருத்தால் கவியும் - சொல்
திறத்தால் குவியும்
 
எண்ணம் எழும்பும் - சீர்
வண்ணம் விளம்பும்
 
செஞ்சொல் சிற்பம் - அவை
நெஞ்சம் ஒப்பும்
 
சொற்களும் முன்னால் - பலாச்
சுளைகளும் பின்னால்
 
உள்ளூறும் முன்னால் - சொற்
கள்ளூறும் பின்னால்
 
சிந்தைச் சித்திரம் - சொல்
விந்தை விசித்திரம்
 
பல்லக் காட்டும் - பொருள்
சொல்லக் கூட்டும்
 
உரைகள் இருந்தால் - பொய்த்
திரைகள் புகும்தாள்
 
சந்தச் சதிர்கள் - அவை
சந்தப் புதிர்கள்

Friday, July 27, 2012

துளித் துளி - செயல்திறம்

துளித் துளி - செயல்திறம்
 
வயலுக்கு வரப்பு தேவை
செயலுக்கு சிறப்பு தேவை
 
ஆற்றுதல் நலமேல்
போற்றுதல் தலைமேல்
 
செதுக்கினால் சிற்பம் - உளி
ஒதுக்கினால் அற்பம்
 
உயர்ச்சி எவ்வொன்றும் - செயல்
அயர்ச்சியே வென்றும்
 
சுரங்கம் இருப்பான் - நாளை
அரங்கம் சிறப்பான்
 
முயற்சியே முந்தும் - செயல்
உயர்ச்சியே உந்தும்
 
செய்தால் ஜெயம்தான்
செய்யான் பயந்தான்
 
புயல்வேகம் போருக்கு
செயல்வேகம் சீருக்கு
 
முயற்சியில் முனையான்
அயர்ச்சியில் விளையான்

Thursday, July 26, 2012

துளித் துளி - விருப்பங்கள்

துளித் துளி - விருப்பங்கள்
 
விருப்பங்கள் கோபுரம்
திருப்பங்கள் நேர்புறம்
 
வாய்ப்புகள் சிலர்க்கு
ஏய்ப்புகள் பலர்க்கு
 
வாயடிக்கே வாய்க்கும்
காயடிக்கே காய்க்கும்
 
வசந்தமாய் வரும்படி
கசந்துமாய்ப் பெறும்படி
 
சந்தர்ப்பம் சாதிக்கும்
வந்தற்பம் வாதிக்கும்
 
வருவன வரட்டும்
பெறுவன பெறட்டும்
 
இறைவன் ஒருவன்
எதுவும் தருவன்
 
நிறைவெனப் பெறுவோம்
நிலையாமை மறவோம்
 
காலப் போக்கும் - அதன்
மூலம் ஏற்கும்

Wednesday, July 25, 2012

துளித் துளி - தொன்று தொட்டு

துளித் துளி - தொன்று தொட்டு

பிராயம் தோறும் - அபிப்
பிராயம் மாறும்

பருவம் தோறும் - கொண்ட
உருவம் தேறும்

வாரம் தோறும் - ஆர
வாரம் சேரும்

காலம் தோறும் - அதன்
கோலம் மீறும்

நாடு தோறும் - பண்
பாடே வேறும்

வீடு தோறும் - அன்பு
கூடச் சீறும்

தோற்றம் தோறும் - எதிர்
மாற்றம் ஏறும்

வாழ்வு தோறும் - ஆம்
யாவும் நேரும்

உள்ளம் தோறும் - நேர்
கள்ளம் கூறும்

Tuesday, July 24, 2012

காமாட்சியம்மன் அந்தாதி நூற்பயன்

வண்ணையம்பதி அருள்மிகு காமாட்சியம்மன் அந்தாதி
 
நூற்பயன்
 
எண்ணுவன கூடும் இணையில்லா வாழ்வுதரும்
நண்ணுவன வெல்லாம் நலமாகும் - திண்ணம்
அருமையுறு காமாட்சி அந்தாதி நூறும்
பெருமையுற ஓதப் பெறின்
 
மடக்கு
 
அந்தாதிப் பாடில்லா அம்மைக்குக் கட்டளையால்
அந்தாதி பாடுவார்க் கன்னவள்தாம் - அந்தாதி
என்னுமாய் உற்றதுணை ஏற்றருள்வாள் மஞ்சளும்பூப்
பொன்னுமாய்ச் செல்வம் பொலிந்து
 
(அந்தாதி = அந்தம் + ஆதி, அந்த + ஆதி, அம் + தாதி)
 
கி. வா. ஜ அவர்களின் பாராட்டுப்பா
 
புவிமணி நெற்றரின் யாரே அதைமெச்சிப்
.. போற்றல்செயார்
சவிமணி யாங்கதிர் வானூறின் யாவரே
.. தாழகிலார்
செவிமணிச் சொற்கொள் தமிழ ழகன்றமிழ்
.. தந்துசந்தக்
கவிமணி என்றும் பெயர்பெற்று நின்றான்
.. கவினுறவே

Monday, July 23, 2012

காமாட்சியம்மன் அந்தாதி (பாடல்கள் 91 - 100)

வண்ணையம்பதி அருள்மிகு காமாட்சியம்மன் அந்தாதி
 
(பாடல்கள் 91 - 100)
 
பரியெனக் காற்றையும் பற்றி அதன்மேல்
.. பறந்துயர்வான்
சரியெனக் கோள்களும் அண்டமும் கைக்குள்
.. சமைத்திருப்போம்
புரியெனும் காஞ்சிப் புனிதரே காம்பரப்
.. புண்ணியர்க்கே
உரியநம் தேவிகா மாட்சியும் வண்ணையிங்(கு)
.. உற்றிடவே (91)
 
உற்றிடு வாளந்த ஓங்காரி காமாட்சி
.. ஒண்பொருளைக்
கற்றிடு வார்க்குக் கலைகளுண் டாம்மெய்க்
.. கவிதையுண்டாம்
பெற்றிடு வார்சிவப் பேரின்ப போகப்
.. பெருமையதும்
முற்றிடு மாறிவை மூதுரை யாகும்
.. முழுமையுமே (92)
 
முழுமையும் நீயென மொய்த்துநின் சந்நிதி
.. முற்றத்திலே
எழுமையும் கூடி இயலிசை பாடி
.. இணையிலராய்த்
தொழுமையும் செய்குவம் துள்ளியும் ஆடுவம்
.. தோத்திரம்வாய்ச்
செழுமையும் பாடிச்சீர்க் காமாட்சி வெல்கனெச்
.. செப்புவமே (93)
 
செப்பியும் பொல்லாச் சிறுவினைக் கெல்லாம்
.. சிதறுமனம்
தப்பியும் வெல்லுமித் தாரணி நாடகத்
.. தன்மையினை
ஒப்பியும் ஈங்குயிர்ப் புற்றனம் காமாட்சி
.. உன்னருளாய்க்
குப்பியும் பூதங்கள் கொண்டது போல்நின்னுடன்
கூடினமே (94)
 
கூடின வாறு குறைவிலா வாழ்வும்
.. கொடுத்தெமக்கு
நாடின வாறு நலம் செயச் செங்கை
.. நளினத்திலே
சாடின வாறந் தகனமே ஓடத்
.. தருமபயம்
தேடின வாறும் திகழும்கா மாட்சி
.. திருவருளே (95)
 
அருளே பொருளாய் அறிவே விரிவாய்
.. அமர்ந்துலகுத்
திரளே சிவமாய்த் தெளிவே நவமாய்த்
.. திளைத்திருக்க
மருளே கடந்துகா மாட்சியாம் அன்னை
.. மனோன்மணியாய்
இருளே கடிய எழுந்தனை ஞான
.. இரவியன்றே (96)
 
இரவியும் திங்களும் எண்ணுசேய் மாலும்
.. இரண்டரவும்
முருவிய பொன்னொடு மங்கல வெள்ளியும்
.. மந்தனுமாய்
நிரவிய கோளெலாம் நேர்பெறக் காமாட்சி
.. நின்னன்பர்பால்
கருவியு மாயவர் காலடி வைகுமோர்
.. கண் இமையே (97)
 
இமையே இமயா இமையோரும் மண்ணோரும்
.. ஏத்தவரும்
உமையே சிவானந்த உத்தமி காமாட்சி
.. ஊழ்வலியின்
சுமையே உயிர்க்கெலாம் சூழ்தல் தவிர்க்கச்
.. சுகவண்ணையில்
நமையே புரந்தும் நடந்தனள் என்றோதும்
.. நான்மறையே (98)
 
நான்மறை வாழ்க எந் நல்லோரும் வாழ்க
.. நவிலுமன்புக்
கோன்முறை வாழ்க குடிமையும் வாழ்க
.. குதூகலமும்
தான்மறை யாமல் தழைத்தெங்கும் வாழ்க
.. தருமமும்தன்
கான்முறை யூன்றிடக் காமாட்சி தாய் இடும்
.. கட்டளையே (99)
 
கட்டளை எனற கலித்துறை நூறு
.. கவிதைகளால்
இட்டளை கின்ற இவ் வின்றமிழ் மாலை
.. இனிதெவரும்
முட்டளை என்றதம் மூழைக்கா மாட்சி
.. முறித்திடவாய்
மட்டளை வர்சிவ மாகியும் வாழ்வர்நா
.. மாட்சிசெய்தே (100)

Friday, July 20, 2012

காமாட்சியம்மன் அந்தாதி (பாடல்கள் 81 - 90)

வண்ணையம்பதி அருள்மிகு காமாட்சியம்மன் அந்தாதி
 
(பாடல்கள் 81 - 90)
 
உத்தமி காமாட்சி உய்யுமா றுன்புகழ்
.. ஒன்றினையே
நித்தமிவ் வேழை நெடுந்தமிழ் மாலையாய்
.. நேரிரந்தேன்
சித்த மிளகிச் சிலம்படி தூக்கிஎன்
.. சென்னியிலே
வைத்து மிகுநலம் வாழ்விக்க வேண்டும்
.. வரமிவையே (81)
 
வரமிவை என்றுமெய் வாயாரப் போற்றி
.. வழிபடநின்
திறமிவை என்று தினம்தினம் முந்துவன்
.. தேடியுமுட்
புறமிவை என்றனு பூதியாற் காமாட்சி
.. பூரணிவான்
அறமிவை என்றுன் அருளுக் கிரந்தேன்
.. அடிமையுற்றே (82)
 
அடிமையுற் றோமெனில் நின்னன்பர்க் கல்லால்
.. அயலிலில்லை
மிடிமையுற் றோமெனில் மேவும் குறைகளை
.. மேலறுத்துக்
குடிமையுற் றோமெனில் கொண்டது நின்னருட்
.. கோயிலன்றோ
படிமையுற் றோமெனும் பாங்குகா மாட்சி
.. பசுங்கொடியே (83)
 
கொடியே கொடிமலர்க் கொன்றையைச் சூடிக்
.. குனித்தபிரான்
பிடியே எனுமாம் பிராட்டிகா மாட்சிநின்
.. பெற்றியெலாம்
அடியே னிவையென் றறியும் தரமோ
.. அகல்வெளியின்
முடியே தொடவும் முனைவது போலொரு
.. மூடமையே (84)
 
மூடமை என்னினும் முந்தப் பலவாய்
.. முறைதொகுத்துச்
காடமை நீற்றுக் கறைக்கண்ட னாரைக்
.. கருதித்தவ
பீடம மர்ந்தநின் பெண்மையைப் போற்றும்
.. பெருமையில்வான்
வீடமை வாமன்றோ காமாட்சி வெற்றி
.. விளையுமதே (85)
 
விளையும தாய்எம் வினைக்கொரு மூலமும்
.. விண்டறிந்து
களையும தாய்ச்சிவ காட்சியு மெந்தம்
.. கடைவிழிக்கே
திளையும தாய்நவ தேவிகா மாட்சியுன்
.. சீரடியில்
வளையும தாகஎம் சென்னியை வைத்தோம்
.. வணக்கமென்றே (86)
 
வணக்கமென் றோர்க்கெலாம் வானர சாளும்
.. வளமுமவள்
இணக்கமென் றோர்க்கெலாம் இங்கித வாழ்க்கையும்
.. ஈந்தவள்தான்
மணக்குமென் றோர்க்கெலாம் மங்கலப் பேறும்
.. மதித்தருள்வாள்
சுணக்கமின் பேறபல் சுழல்மெத்தை சூழ்வண்ணைச்
.. சுந்தரியே (87)
 
சுந்தரி சித்தச் சுவர்கடந் தாங்குச்
.. சுகவெளிகொள்
அந்தரி பூதங்கள் ஐந்தையும் ஆட்டி
.. அதன்விளையாட்
டுந்தரி யோக யுகாந்தரி கோடி
.. உதயநெற்றிச்
சிந்துரி காமாட்சி செம்பொருள் உன்றன்
.. சிறப்பிவையே (88)
 
இவையே சிறப்பென் றிறுதி உரைக்க
.. இயலுவதும்
நவையே மதன்கணை நாண்மலர் ஐந்தும்
.. நமனைவெல்லக்
கவையேறு பாசமும் கைக்கொண்ட தெய்வமாக்
.. கன்னிகையும்
சிவையேகா மாட்சியுன் சீர்த்தியுண் டின்னுமெம்
.. சிந்தனைக்கே (89)
 
சிந்தனைக் கும்படாச் செம்பொரு ளாகிச்
.. சிதம்பரமாய்
வந்தனைக் கும்படா வாறாப்பால் நின்று
.. வரும்விதியின்
நிந்தனைக் கும்படா தெம்மையு மேசிவ
.. நிர்மலமேல்
பந்தெனக் கூத்து பயில்வைகா மாட்சி
.. பராபரியே (90)

Thursday, July 19, 2012

காமாட்சியம்மன் அந்தாதி (பாடல்கள் 71 - 80)

வண்ணையம்பதி அருள்மிகு காமாட்சியம்மன் அந்தாதி
 
(பாடல்கள் 71 - 80)
 
சார்பவர்க் கெல்லாம் சரணா லயமும்
.. சலனமறுத்(து)
ஓர்பவர்க் கெல்லாம் உறுதிப் பொருளாய்
.. உணர்ந்துணர்ந்து
நேர்பவர்க் கெல்லாம் நிலைகொள் துணையும்
.. நிகழ்பவளாய்த்
தேர்பவள் ஆவதும் வண்ணைக்கா மாட்சி
.. திருமகளே (71)
 
திருமகள் வானுறு தேவரும் கூடித்
.. திரண்டுதொழ
ஒருமகன் ஆகம உட்பொருள் யாவுமே
.. உய்த்துணர
வருமகள் செல்வியும் வாக்கெனும் கல்வியும்
.. வாய்த்தவிழிப்
பெருமகள் ஆகிப் பிறங்குவள் காமாட்சி
.. பெண்கிளியே (72)
 
கிளியே கிளிதரும் கின்னரி யாகிக்
.. கிளர்சுகமே
எளியே மெனயாம் இருந்துமுன் மாண்பினை
.. என்னென்றெலாம்
ஒளியே பெறுநெஞ் சுரைவாய்ப் படுத்தி
.. உணர்ந்தனம் நின்
அளியேகா மாட்சி யணைவதி லேஎமக்
.. கார்தடையே (73)
 
தடையெது நேரினும் தாயுனை எண்ணியே
.. தாங்கிவிடப்
படையது வாகிப் பணைக்க எம் தோளிற்
.. பனைவலியாய்
உடையதும் நீயன்றோ ஓங்காரி காமாட்சி
.. உட்கமலப்
புடையது கூடிப் புவனமூன் றாளும்
.. புரந்தரியே (74)
 
புரந்தரி மாதவப் புண்ணியம் நெஞ்சிற்
.. பொலிந்தருளும்
நிரந்தரி அன்பர் நெடுங்குறை யெல்லாம்
.. நிவர்த்திக்கவே
உரந்தரி பாசமும் ஒண்கணை ஐந்தும்
.. உயிர்ப்பொருட்டாய்க்
கரந்தரி சக்தியக் காமாட்சி என்பதும்
.. கண்கொள்ளுமே (75)
 
கொள்ளவும் கொண்டு குறைவிலாக் கல்வி
.. குலதனமாய்
விள்ளவும் கொண்டு வியப்புக்கும் அப்பால்
.. வியப்பரிதாய்
அள்ளவும் கொண்டுளே ஆனந்த மாகி
.. அறிவமுதம்
தெள்ளவும் கொண்டு தெளிவிக்கும் காமாட்சி
.. தீந்தமிழே (76)
 
தமிழே தமிழில் தழைக்கும்கா மாட்சி
.. தமிழதையே
குமிழேறி இன்பம் கொழிக்கக் குமர
.. குருபரர்பால்
சிமிழே எனும்வாய்ச் சிறுமியாய்ப் போந்துச்
.. செவிமடுத்தும்
உமிழே றோளிப்பரி சாரமன்னார்க்கன்(று)
.. உதவினையே (77)
 
வினையே செறிந்த விரைவுகொண் டெம்மை
.. விரட்டியொரு
முனையே ஒதுக்க முனையும் தருணம்
.. முகமனின்றி
அனையே எனவுன் அடைக்கலம் சார்வோம்
.. அதனையல்லால்
நினையேம்கா மாட்சி நிலையிலா எண்ணமெந்
.. நெஞ்சுக்குமே (78)
 
நெஞ்சுக்கும் நெஞ்சென நிர்மலா காசம்
.. நெடிதுகண்டே
அஞ்சுக்கும் அஞ்சென ஆங்கதில் தோன்றி
.. அடிமுடியாய்
மஞ்சுக்கும் மஞ்சென மாவடிச் சேவைக்கா
.. மாட்சிஎன்றே
பஞ்சுக்கும் பஞ்செனப் பாதம் நடந்தாய்
.. பகவதியே (79)
 
பகவ தியும்நீ பணிகுவார்க் கெல்லாம்
.. பரிந்தருளும்
சுகவ தியும்நீ சுகானு பவத்தில்
.. சுகித்திருக்கத்
தகவ தியும்நீ தயாள குணத்திற்கோர்
.. தாய்மையுமாய்
யுகவ தியும்நீ ஒளிகோடிக் காமாட்சி
.. உத்தமியே (80)

Wednesday, July 18, 2012

காமாட்சியம்மன் அந்தாதி (பாடல்கள் 61 - 70)

வண்ணையம்பதி அருள்மிகு காமாட்சியம்மன் அந்தாதி
 
(பாடல்கள் 61 - 70)
 
இருப்பவ ளாய்மனம் எண்ணும் அனைத்தும்
.. இயன்றபிழை
பொறுப்பவ ளாயந்தப் பொய்ம்மை களைமுன்
.. பொறுத்திருக்கும்
அறுப்பவ ளாயெமை யாதரித் தாண்டாங்(கு)
.. அறநெறியில்
திருப்புவ ளாகிய தேவிகா மாட்சி
.. திறம்பெரிதே (61)
 
பெரிதே எனவுனைப் பேணிக்கொண் டாடிப்
.. பெறுவதற்கும்
அரிதே உலகம் உடங்கலும் ஆன்ற
.. அருண்மொழிகள்
வறிதே உனையாம் வணங்கவும் ஆசைகா
.. மாட்சியதாற்
சிறிதே புகன்றதிச் சேயரும் வேறென்ன
.. செய்வதுண்டே (62)
 
உண்டே பிறவிக் குறுதுணை காமாட்சி
.. ஒண்கமலச்
செண்டே எனுமடி சிந்தித்து நாளும்
.. செறிந்தவற்றில்
வண்டே எனவும் வலம்வரு வோம்அவ்
.. வரமொன்றையே
கொண்டே மெனிற்பின் குறியென்ன வேண்டும்
.. குவலயத்தே (63)
 
குவலய மேநின் கொலுவெனக் கண்டும்
.. குதிகுதித்துச்
சுவைலய மாயந்தச் சுந்தர இன்பத்தில்
.. சொக்கிநின்றோம்
நவலய மாகி நளினிபீ டத்தின்
.. நயஉச்சியில்
தவலய மாகுவை தாயாம்கா மாட்சி
.. தயைபண்ணியே (64)
 
பண்ணைக் குழைத்துப் பதமும் குழைத்துப்
.. பரவசமாய்
விண்ணைக் குழைத்து வியப்பும் குழைத்தநின்
.. வீறுரைப்பேன்
கண்ணைக் குழைத்(து) அதில் கங்குல் குழைத்தும்கா
.. மாட்சி என்றே
மண்ணைக் குழைத்து மகாலிங்க மாக்கி
.. மகிழ்ந்தவளே (65)
 
மகிழ்ந்தவ ளேநின் மலரடி அன்பர்
.. மனமுருக
நெகிழ்ந்தவ ளேயந் நினைவும் கனவுமெய்
.. நிச்சயமாய்
முகிழ்ந்தவ ளேயண்ட முட்டை யிலுமொரு
.. மோகனமாய்
வகிர்ந்தவ ளேஎம்கா மாட்சி வரம்தர
.. வழக்கென்னவே (66)
 
என்வழக் காயினும் ஏற்றது கொள்கஓர்
.. இச்சையினால்
பொன்வழக் கென்றோ பொருள்வழக் கென்றோ
.. புகுந்துன்னிடம்
முன்வழக் காட முனைத்திட வில்லைஇம்
.. மூவுலகும்
தன்வழக் காயருள் தாங்குகா மாட்சிஎம்
.. தாரகமே (67)
 
தாரகம் நீஎத் தருக்கமும் நீகொளும்
.. தந்திரநூல்
சாரகம் நீமறைச் சாத்திரக் கோவைநீ
.. சண்பகப்பூ
ஆரக மார்பொடும் ஆயிரம் சோதி
.. அவிர்பரிசாய்ப்
பாரகம் பீரம் பரப்புவை வண்ணை
.. பணைப்பவளே (68)
 
பணைப்பவ ளாகிப் பலகாலும் தேடிப்
.. பணியுமெனை
அணைப்பவ ளாகி அரனெனும் ஊற்றோ(டு)
.. அமுதமயம்
பிணைப்பவ ளாகிப் பெருந்தவ மாகிஎன்
.. பித்துநெஞ்சம்
மணைப்பவ ளாகும்கா மாட்சிஎன் னென்பேனுன்
.. மாட்சிமையே (69)
 
மாட்சிமெய் யுண்டே மறவா துனைத்தொழும்
.. மக்கட்கெலாம்
ஆட்சிமெய் யுண்டே அமருல கென்றும்
.. அமர்ந்துலவும்
காட்சிமெய் யுண்டே கருதோர் இமைப்பும்
.. கரம்குவிக்கச்
சாட்சிமெய் யுண்டேமா சக்திகா மாட்சியுன்
.. சார்பினர்க்கே (70)

Monday, July 16, 2012

காமாட்சியம்மன் அந்தாதி (பாடல்கள் 51 - 60)

வண்ணையம்பதி அருள்மிகு காமாட்சியம்மன் அந்தாதி
 
 
(பாடல்கள் 51 - 60)
 
விழைபவள் முன்னை விரும்பி விரும்பி
.. விழைபவர்க்கும்
குழைபவள் அன்னவர் கோரிக்கை ஏற்றுக்
.. கொடுப்பதற்கும்
தழைபவள் ஏன்றஎந் தாயினும் சாலத்
.. தயவினுக்கும்
இழைபவள் அல்லவோ என்றும் காமாட்சி
.. இறையவளே (51)
 
இறையவள் நீசொலும் என்னரு பேதம்
.. எனைத்திலுமே
மறையவள் நீஅதன் மாற்றமும் நீசொல்
.. மகிமைகுன்றா
நிறையவள் நீஎந்த நிச்ச யமும்நீ
.. நெடுந்தருக்கப்
பொறையவள் நீவண்ணை பூத்துக்கா மாட்சி
.. பொருந்துவையே (52)
 
பொருந்துவ தன்றிப் புலைமயக் காய்வெறும்
.. பொய்ம்மையிலே
வருந்துவ தன்றி வடவண்ணைத் தெய்வமெம்
.. வாழ்வுக்கரண்
திருந்துவ தாகத் திறமொடு கூட்டும்
.. தினம்தினம்யாம்
பெருந்தவம் காமாட்சி யன்னையைப் போற்றும்
.. பெருமையிதே (53)
 
பெருமையும் உண்டு பிறவுமே உண்டு
.. பெறுவனவான்
அருமையும் உண்டருள் ஆட்சியும் உண்டிவ்
.. வகிலமெலாம்
செருமையும் உண்டெனிற் செந்நெறி காமாட்சி
.. சீர்செயவே
ஒருமையும் உண்டுள் ளொளியதும் உண்டீ(து)
.. உறுதியன்றே (54)
 
உறுதிப் பொருளாய் உற்பொரு ளாயெலாம்
.. ஊன்றியுணர்ந்(து)
இறுதிப் பொருளாய் இறைபொரு ளாய்நீ
.. இருந்தமைகண்(டு)
அறுதிப் பொருளாய் அறாத பொருளாய்
.. அறிந்தமட்டும்
கருதிப் பொருள் நினைக் கண்டோமெங் காமாட்சி
.. கைகுவித்தே (55)
 
கைகுவிப் பாரெனில் காணவர் நெஞ்சக்
.. கமலத்திலே
பொய்குவிப் பாரவர் பூசனை யாறு
.. பொழுதிலுமே
செய்குவிப் பாரவர் சிந்தை யெலாம்சிவ
.. கீர்த்தி என்றே
மெய்குவிப் பார்வண்ணைக் காமாட்சி பக்தி
.. மிகைபெறவே (56)
 
மிகைபெற உண்டுமேன் மேலும் பயன்கள்
.. மிளிர்வனவாய்த்
தகைபெற உண்டு தனமொடு கல்வி
.. தழைத்தநடை
வகைபெற உண்டு வளம்பெறு வாழ்வும்
.. வளர்வதுண்டே
தொகைபெறச் சிங்காரத் தோட்டம்சூழ் காமாட்சி
.. தொன்மகளே (57)
 
தொன்மக ளேநலம் தோன்றப் பலவாய்த்
.. துறைகிளரும்
நன்மக ளேதமிழ் நாவிற் பழுத்து
.. நயந்திருக்கும்
சொன்மகளேஎச் சுகமும் பெறவே
.. சுரந்தருள்நீ
பொன்மக ளேபுடை போற்றுங்கா மாட்சியாம்
.. பொற்கொடியே (58)
 
பொற்கொடி காமாட்சி பூத்தநின் பீடத்தோர்
.. பூம்படியாய்க்
கற்கொடி யேனைக் கருணைகொண் டாக்கின்
.. கருதுபல்லூழ்
முற்கொடி தேஎன மூண்டன வாய்ச்சற்றும்
.. முன்நிற்பவோ
விற்கொடி யேறி விழியர சாள்பிறை
.. வேணியளே (59)
 
வேணிநீள் நல்ல வரைமலர்ச் செல்விபல்
.. வித்தைக்குமே
வாணிநீ நல்லமெய் வாழ்வுக்கும் அப்பால்
.. வருகதிக்கும்
தோணிநீ நல்ல துறையாம் சிவநெறி
.. துய்ப்பதற்கும்
ஏணிநீ நல்லாய்எம் காமாட்சி எங்கும்
.. இருப்பவளே (60)