கவிதை
கூளமாய்க் கலைந்த உட்
.. குரல்மனப் பூக்களை
மேளமாய்ப் புனைந்தஎன்
.. மெய்விரல் நாடகம்
.. குரல்மனப் பூக்களை
மேளமாய்ப் புனைந்தஎன்
.. மெய்விரல் நாடகம்
என்னையே உருக்கி
.. இதயம்கொள் உணர்ச்சியில்
பொன்னையே பெருக்கும்
.. புதுச்சுடர் மந்திரம்
.. இதயம்கொள் உணர்ச்சியில்
பொன்னையே பெருக்கும்
.. புதுச்சுடர் மந்திரம்
வாகனக் கற்பனை
.. வசந்த விழாக்களில்
மோகனச் சொற்கொளும்
.. மூர்த்திதன் ஊர்வலம்
.. வசந்த விழாக்களில்
மோகனச் சொற்கொளும்
.. மூர்த்திதன் ஊர்வலம்
நாக்குத் திரியில்
.. நர்த்தனம் ஆடி
வாக்குச் சுடர்தான்
.. வரையும் சாகசம்
.. நர்த்தனம் ஆடி
வாக்குச் சுடர்தான்
.. வரையும் சாகசம்
மூளியாய்க் கிடந்தஎன்
.. மொழும்கல் மனத்தினை
காளியாய்ப் படைத்தொளி
.. காட்டிய தரிசனம்
.. மொழும்கல் மனத்தினை
காளியாய்ப் படைத்தொளி
.. காட்டிய தரிசனம்
No comments:
Post a Comment