Saturday, July 28, 2012

துளித் துளி - கவிதை(2)

துளித் துளி - கவிதை(2)
 
கருத்தால் கவியும் - சொல்
திறத்தால் குவியும்
 
எண்ணம் எழும்பும் - சீர்
வண்ணம் விளம்பும்
 
செஞ்சொல் சிற்பம் - அவை
நெஞ்சம் ஒப்பும்
 
சொற்களும் முன்னால் - பலாச்
சுளைகளும் பின்னால்
 
உள்ளூறும் முன்னால் - சொற்
கள்ளூறும் பின்னால்
 
சிந்தைச் சித்திரம் - சொல்
விந்தை விசித்திரம்
 
பல்லக் காட்டும் - பொருள்
சொல்லக் கூட்டும்
 
உரைகள் இருந்தால் - பொய்த்
திரைகள் புகும்தாள்
 
சந்தச் சதிர்கள் - அவை
சந்தப் புதிர்கள்

No comments:

Post a Comment