நினைவு நிழலில்
சந்தனப் பொய்கையிலே - தென்றல்
.. சரசங்கள் நெய்கையிலே
வந்தநற் காதலிலே - உடன்
.. வாலிப மோதலிலே
அந்தநன்னாட்களையே - எண்ணி
.. ஆயிரம் பாக்களையே
சிந்தனைப்பண் இழைப்பேன் - சிரஞ்
. சீவியாய் விண்வளைப்பேன்
.. சரசங்கள் நெய்கையிலே
வந்தநற் காதலிலே - உடன்
.. வாலிப மோதலிலே
அந்தநன்னாட்களையே - எண்ணி
.. ஆயிரம் பாக்களையே
சிந்தனைப்பண் இழைப்பேன் - சிரஞ்
. சீவியாய் விண்வளைப்பேன்
தேன்மழைச் சாரலிலே - பன்னீர்த்
.. தென்றலின் தூறலிலே
தான் மலர் ஆசையிலே - சொர்க்கத்
.. தவிப்புகள் பேசையிலே
நான்மகிழ் நாட்களையே - எண்ணி
.. நவநவப் பாக்களையே
வான்மணிக் கீதை செய்வேன் - புது
.. வரலாற்றுப் பாதை கொய்வேன்
.. தென்றலின் தூறலிலே
தான் மலர் ஆசையிலே - சொர்க்கத்
.. தவிப்புகள் பேசையிலே
நான்மகிழ் நாட்களையே - எண்ணி
.. நவநவப் பாக்களையே
வான்மணிக் கீதை செய்வேன் - புது
.. வரலாற்றுப் பாதை கொய்வேன்
செண்பக ஓடையிலே - துள்ளும்
.. செந்தமிழ் மேடையிலே
கண்புகும் வேட்கையிலே - விழிக்
.. காந்தங்கள் தாக்கையிலே
பண்புகொள் நாட்களையே - எண்ணிப்
.. பன்னூறு பாக்களையே
விண்புகழ் பூத்தொலிப்பேன் - காதல்
.. வெற்றிக்கே வாழ்த்தொலிப்பேன்
.. செந்தமிழ் மேடையிலே
கண்புகும் வேட்கையிலே - விழிக்
.. காந்தங்கள் தாக்கையிலே
பண்புகொள் நாட்களையே - எண்ணிப்
.. பன்னூறு பாக்களையே
விண்புகழ் பூத்தொலிப்பேன் - காதல்
.. வெற்றிக்கே வாழ்த்தொலிப்பேன்
No comments:
Post a Comment