Saturday, October 6, 2012

மனக் கணக்கு

மனக் கணக்கு
 
செலவே என்று பேதைமனம் - தினங்கள்
சென்ற தெண்ணிப் பறக்கிறது - அதுதான்
வரவே என்று வாதைமனம் - அநுப
வங்கள் ஏற்க மறுக்கிறது
 
இருளே எனக்கண்(டு) ஊமைமனம் - புதிய
எதிர்கா லத்தைப் பழிக்கிறது - அதுதான்
அருளே எனக்கண்(டு) ஆமைமனம் - ஒளியை
அறியா மல்தான் விழிக்கிறது!
 
குறையே என்று மூடமனம் - நிறைவு
கொள்ளா விதமே அலைகிறது - அதுதான்
இறையே நின்ற பீடமென - உணர
ஏலா மையால் மலைகிறது
 
பகையே என்று தாழ்வுமனம் - மனித
பலத்தை புவியை வெறுக்கிறது - அதுதான்
வகையே வாழ்வும் யாவுமெனும் - ஒருநாள்
வாரா மையால் சிரிக்கிறது

No comments:

Post a Comment