உதயம்
முன்னிருட் கங்குலில்
மின்னிய மீன்கணம்
முத்துப் பனியாச்சு - புல்மேல்
இறைத்த மணியாச்சு - வயசுக்
கன்னியும் செப்பொடு
தன் இல்லம் விட்(டு)ஆறு
காண நடந்தாச்சு - கன்னத்தில்
நாணம் படர்ந்தாச்சு
மின்னிய மீன்கணம்
முத்துப் பனியாச்சு - புல்மேல்
இறைத்த மணியாச்சு - வயசுக்
கன்னியும் செப்பொடு
தன் இல்லம் விட்(டு)ஆறு
காண நடந்தாச்சு - கன்னத்தில்
நாணம் படர்ந்தாச்சு
மேலை நெடுவானில்
கோல நிலாவட்டம்
மேனி வெளுப்பாச்சு - உயிரோ(டு)
ஊனில் களிப்பாச்சு - இளைய
காலை நளினிக்குக்
கட்டியம் கூறிப்பூங்
காவும் விழிப்பாச்சு - கண்முன்னம்
யாவும் செழிப்பாச்சு
கோல நிலாவட்டம்
மேனி வெளுப்பாச்சு - உயிரோ(டு)
ஊனில் களிப்பாச்சு - இளைய
காலை நளினிக்குக்
கட்டியம் கூறிப்பூங்
காவும் விழிப்பாச்சு - கண்முன்னம்
யாவும் செழிப்பாச்சு
ஓடை மதகுநீ
ரோ(டு)ஒளிச் செங்கதிர்
ஊடிச் சிலிர்த்தாச்சு - நுரைநுரை
ஆடிச் சலிச்சாச்சு - முகிலில்
மூட மிடும்பனிக்
கூடம் விலகிநம்
முற்றம் எழிலாச்சு - இயற்கையே
முற்றும் தொழிலாச்சு
ரோ(டு)ஒளிச் செங்கதிர்
ஊடிச் சிலிர்த்தாச்சு - நுரைநுரை
ஆடிச் சலிச்சாச்சு - முகிலில்
மூட மிடும்பனிக்
கூடம் விலகிநம்
முற்றம் எழிலாச்சு - இயற்கையே
முற்றும் தொழிலாச்சு
மாடப் புறாவும்செங்
காடைப்புள்ளும் திசை
மாறிப் பறந்தாச்சு - சிவ்வென
ஏறி விரைந்தாச்சு - அதனைப்
பாடப்பா டப்புதுப்
பாங்கில்பண் ணோடும்
பரவசம் உண்டாச்சு - இறைவன்
அருள்வசம் கண்டாச்சு
காடைப்புள்ளும் திசை
மாறிப் பறந்தாச்சு - சிவ்வென
ஏறி விரைந்தாச்சு - அதனைப்
பாடப்பா டப்புதுப்
பாங்கில்பண் ணோடும்
பரவசம் உண்டாச்சு - இறைவன்
அருள்வசம் கண்டாச்சு
பழனச் சதிர்கொள்
வளநெற் கதிர்களும்
பாரில் படிஞ்சாச்சு - துயரும்
ஊரில் விடிஞ்சாச்சு - வீட்டின்
இழைநறும் கோலம்
எலாம்பரங் கிப்பூ
இதயம் மலர்ந்தாச்சு - அடடே
உதயம் புலர்ந்தாச்சு
வளநெற் கதிர்களும்
பாரில் படிஞ்சாச்சு - துயரும்
ஊரில் விடிஞ்சாச்சு - வீட்டின்
இழைநறும் கோலம்
எலாம்பரங் கிப்பூ
இதயம் மலர்ந்தாச்சு - அடடே
உதயம் புலர்ந்தாச்சு
No comments:
Post a Comment