பயணம்
நெஞ்சின் நிழலில்
.. நீள நடந்தேன்
செஞ்சொற் கழலில்
.. சிகரம் அடைந்தேன்
.. நீள நடந்தேன்
செஞ்சொற் கழலில்
.. சிகரம் அடைந்தேன்
கேட்ட இடத்தில்
.. கிளர்ச்சி ஆனேன்
பாட்டுத் தடத்தில்
.. பயணம் போனேன்
.. கிளர்ச்சி ஆனேன்
பாட்டுத் தடத்தில்
.. பயணம் போனேன்
வாழ்க்கைக் குகையுள்
.. வசந்தம் சொரிந்தேன்
வேட்கைப் பகையுள்
.. விதிமேல் சரிந்தேன்
.. வசந்தம் சொரிந்தேன்
வேட்கைப் பகையுள்
.. விதிமேல் சரிந்தேன்
இரவின் அகலில்
.. இளமை வரைந்தேன்
பரவும் பகலில்
.. பசிமேல் கரைந்தேன்
.. இளமை வரைந்தேன்
பரவும் பகலில்
.. பசிமேல் கரைந்தேன்
அழகின் மயக்கில்
.. அமுதம் குடித்தேன்
பழகி வியக்கும்
.. பழைமை முடித்தேன்
.. அமுதம் குடித்தேன்
பழகி வியக்கும்
.. பழைமை முடித்தேன்
சிந்தை முகட்டில்
.. சிறிதே களைத்தேன்
சந்தைப் பகட்டில்
.. சரிதம் வளைத்தேன்
.. சிறிதே களைத்தேன்
சந்தைப் பகட்டில்
.. சரிதம் வளைத்தேன்
சொல்லின் அசுவம்
.. சொடுக்கிமுன் விட்டேன்
புல்லின் விசுவப்
.. புதிரையே தொட்டேன்
.. சொடுக்கிமுன் விட்டேன்
புல்லின் விசுவப்
.. புதிரையே தொட்டேன்
No comments:
Post a Comment