Friday, August 10, 2012

கவிக்குருவி

கவிக்குருவி
 
குருவிஒரு குருவி - சின்னக்
குருவிஒரு குருவி - நான்
குருவிஒரு குருவி - சின்னக்
குருவிஒரு குருவி
 
கருவில் உருவாகிக்
கவித்திருவும் ஆகிப்
பெருவெளியின் மீதும்
பேரொளியைக் கோதும்
குருவிஒரு குருவி - சின்னக்
குருவிஒரு குருவி
 
பரசிவமாம் வெள்ளம்
பாய்ந்துணர்வை அள்ளும்
வரசிவமாய் என்னை
வாழ்த்திடுவன் அன்னை
குருவிஒரு குருவி - சின்னக்
குருவிஒரு குருவி
 
ஞானமென்ற நாழில்
நாதமென்ற பாழில்
ஊனமொன்று நீங்க
உயிர்ச்சிறகு தாங்கக்
குருவிஒரு குருவி - சின்னக்
குருவிஒரு குருவி
 
அந்தரத்துத் தென்னை
அயர்ந்து வரும் என்னை
வந்தமரச் சொல்லும்
வசைமனத்தைக் கொல்லும்
குருவிஒரு குருவி - சின்னக்
குருவிஒரு குருவி
 
நெல்லழகு மூக்கும்
நிறைபுவனம் தூக்கும்,
சொல்லமுதக் காற்றில்
சோதிமுளைக் கீற்றில்
குருவிஒரு குருவி - சின்னக்
குருவிஒரு குருவி
 
காலமென்றன் கருவி
கவிதை என்றன் அருவி
ஓலமென்ற மேட்டில்
ஒளிச்சருகுக் கூட்டில்
குருவிஒரு குருவி - சின்னக்
குருவிஒரு குருவி

No comments:

Post a Comment