Sunday, September 23, 2012

போதாமல்

போதாமல்

ஏற்றிய தீபத்தில் எண்ணெய்போ தாதே
.. இதயத்தில் ஏற்றி விட்டாள் - அவ்
இதயம்கொள் தீபமும் எரியப்போ தாதே
.. உதயத்தில் மாற்றி விட்டாள்
ஆற்றிய தொண்டினுக்(கு) அன்புபோ தாதென்றே
.. அன்னையைக் காட்டி விட்டாள் - அவ்
அன்னைமெய் அன்பும் அடங்காமற் காததற்கே
.. கன்னியைக் கூட்டி விட்டாள்
காட்டிய புன்னகைக் காட்சியும் போதாதே
.. கண்மலர் பூத்து விட்டாள் - அக்
கண்மலர்க் காட்சியும் காணாதென் றேஎங்கும்
.. விண்மலர் கோத்துவிட்டாள்
மீட்டிய ராகமும் மேவாதென்றே கடல்
.. மேளமும் கொட்டி விட்டாள் - அம்
மெல்லிசை மேளமும் மீளாதென் றேஉயிர்
.. நாளமும் தட்டி விட்டாள்

No comments:

Post a Comment