வண்ணையம்பதி அருள்மிகு காமாட்சியம்மன் அந்தாதி
(பாடல்கள் 81 - 90)
உத்தமி காமாட்சி உய்யுமா றுன்புகழ்
.. ஒன்றினையே
நித்தமிவ் வேழை நெடுந்தமிழ் மாலையாய்
.. நேரிரந்தேன்
சித்த மிளகிச் சிலம்படி தூக்கிஎன்
.. சென்னியிலே
வைத்து மிகுநலம் வாழ்விக்க வேண்டும்
.. வரமிவையே (81)
.. ஒன்றினையே
நித்தமிவ் வேழை நெடுந்தமிழ் மாலையாய்
.. நேரிரந்தேன்
சித்த மிளகிச் சிலம்படி தூக்கிஎன்
.. சென்னியிலே
வைத்து மிகுநலம் வாழ்விக்க வேண்டும்
.. வரமிவையே (81)
வரமிவை என்றுமெய் வாயாரப் போற்றி
.. வழிபடநின்
திறமிவை என்று தினம்தினம் முந்துவன்
.. தேடியுமுட்
புறமிவை என்றனு பூதியாற் காமாட்சி
.. பூரணிவான்
அறமிவை என்றுன் அருளுக் கிரந்தேன்
.. அடிமையுற்றே (82)
.. வழிபடநின்
திறமிவை என்று தினம்தினம் முந்துவன்
.. தேடியுமுட்
புறமிவை என்றனு பூதியாற் காமாட்சி
.. பூரணிவான்
அறமிவை என்றுன் அருளுக் கிரந்தேன்
.. அடிமையுற்றே (82)
அடிமையுற் றோமெனில் நின்னன்பர்க் கல்லால்
.. அயலிலில்லை
மிடிமையுற் றோமெனில் மேவும் குறைகளை
.. மேலறுத்துக்
குடிமையுற் றோமெனில் கொண்டது நின்னருட்
.. கோயிலன்றோ
படிமையுற் றோமெனும் பாங்குகா மாட்சி
.. பசுங்கொடியே (83)
.. அயலிலில்லை
மிடிமையுற் றோமெனில் மேவும் குறைகளை
.. மேலறுத்துக்
குடிமையுற் றோமெனில் கொண்டது நின்னருட்
.. கோயிலன்றோ
படிமையுற் றோமெனும் பாங்குகா மாட்சி
.. பசுங்கொடியே (83)
கொடியே கொடிமலர்க் கொன்றையைச் சூடிக்
.. குனித்தபிரான்
பிடியே எனுமாம் பிராட்டிகா மாட்சிநின்
.. பெற்றியெலாம்
அடியே னிவையென் றறியும் தரமோ
.. அகல்வெளியின்
முடியே தொடவும் முனைவது போலொரு
.. மூடமையே (84)
.. குனித்தபிரான்
பிடியே எனுமாம் பிராட்டிகா மாட்சிநின்
.. பெற்றியெலாம்
அடியே னிவையென் றறியும் தரமோ
.. அகல்வெளியின்
முடியே தொடவும் முனைவது போலொரு
.. மூடமையே (84)
மூடமை என்னினும் முந்தப் பலவாய்
.. முறைதொகுத்துச்
காடமை நீற்றுக் கறைக்கண்ட னாரைக்
.. கருதித்தவ
பீடம மர்ந்தநின் பெண்மையைப் போற்றும்
.. பெருமையில்வான்
வீடமை வாமன்றோ காமாட்சி வெற்றி
.. விளையுமதே (85)
.. முறைதொகுத்துச்
காடமை நீற்றுக் கறைக்கண்ட னாரைக்
.. கருதித்தவ
பீடம மர்ந்தநின் பெண்மையைப் போற்றும்
.. பெருமையில்வான்
வீடமை வாமன்றோ காமாட்சி வெற்றி
.. விளையுமதே (85)
விளையும தாய்எம் வினைக்கொரு மூலமும்
.. விண்டறிந்து
களையும தாய்ச்சிவ காட்சியு மெந்தம்
.. கடைவிழிக்கே
திளையும தாய்நவ தேவிகா மாட்சியுன்
.. சீரடியில்
வளையும தாகஎம் சென்னியை வைத்தோம்
.. வணக்கமென்றே (86)
.. விண்டறிந்து
களையும தாய்ச்சிவ காட்சியு மெந்தம்
.. கடைவிழிக்கே
திளையும தாய்நவ தேவிகா மாட்சியுன்
.. சீரடியில்
வளையும தாகஎம் சென்னியை வைத்தோம்
.. வணக்கமென்றே (86)
வணக்கமென் றோர்க்கெலாம் வானர சாளும்
.. வளமுமவள்
இணக்கமென் றோர்க்கெலாம் இங்கித வாழ்க்கையும்
.. ஈந்தவள்தான்
மணக்குமென் றோர்க்கெலாம் மங்கலப் பேறும்
.. மதித்தருள்வாள்
சுணக்கமின் பேறபல் சுழல்மெத்தை சூழ்வண்ணைச்
.. சுந்தரியே (87)
.. வளமுமவள்
இணக்கமென் றோர்க்கெலாம் இங்கித வாழ்க்கையும்
.. ஈந்தவள்தான்
மணக்குமென் றோர்க்கெலாம் மங்கலப் பேறும்
.. மதித்தருள்வாள்
சுணக்கமின் பேறபல் சுழல்மெத்தை சூழ்வண்ணைச்
.. சுந்தரியே (87)
சுந்தரி சித்தச் சுவர்கடந் தாங்குச்
.. சுகவெளிகொள்
அந்தரி பூதங்கள் ஐந்தையும் ஆட்டி
.. அதன்விளையாட்
டுந்தரி யோக யுகாந்தரி கோடி
.. உதயநெற்றிச்
சிந்துரி காமாட்சி செம்பொருள் உன்றன்
.. சிறப்பிவையே (88)
.. சுகவெளிகொள்
அந்தரி பூதங்கள் ஐந்தையும் ஆட்டி
.. அதன்விளையாட்
டுந்தரி யோக யுகாந்தரி கோடி
.. உதயநெற்றிச்
சிந்துரி காமாட்சி செம்பொருள் உன்றன்
.. சிறப்பிவையே (88)
இவையே சிறப்பென் றிறுதி உரைக்க
.. இயலுவதும்
நவையே மதன்கணை நாண்மலர் ஐந்தும்
.. நமனைவெல்லக்
கவையேறு பாசமும் கைக்கொண்ட தெய்வமாக்
.. கன்னிகையும்
சிவையேகா மாட்சியுன் சீர்த்தியுண் டின்னுமெம்
.. சிந்தனைக்கே (89)
.. இயலுவதும்
நவையே மதன்கணை நாண்மலர் ஐந்தும்
.. நமனைவெல்லக்
கவையேறு பாசமும் கைக்கொண்ட தெய்வமாக்
.. கன்னிகையும்
சிவையேகா மாட்சியுன் சீர்த்தியுண் டின்னுமெம்
.. சிந்தனைக்கே (89)
சிந்தனைக் கும்படாச் செம்பொரு ளாகிச்
.. சிதம்பரமாய்
வந்தனைக் கும்படா வாறாப்பால் நின்று
.. வரும்விதியின்
நிந்தனைக் கும்படா தெம்மையு மேசிவ
.. நிர்மலமேல்
பந்தெனக் கூத்து பயில்வைகா மாட்சி
.. பராபரியே (90)
.. சிதம்பரமாய்
வந்தனைக் கும்படா வாறாப்பால் நின்று
.. வரும்விதியின்
நிந்தனைக் கும்படா தெம்மையு மேசிவ
.. நிர்மலமேல்
பந்தெனக் கூத்து பயில்வைகா மாட்சி
.. பராபரியே (90)
No comments:
Post a Comment