வண்ணையம்பதி அருள்மிகு காமாட்சியம்மன் அந்தாதி
(பாடல்கள் 91 - 100)
பரியெனக் காற்றையும் பற்றி அதன்மேல்
.. பறந்துயர்வான்
சரியெனக் கோள்களும் அண்டமும் கைக்குள்
.. சமைத்திருப்போம்
புரியெனும் காஞ்சிப் புனிதரே காம்பரப்
.. புண்ணியர்க்கே
உரியநம் தேவிகா மாட்சியும் வண்ணையிங்(கு)
.. உற்றிடவே (91)
.. பறந்துயர்வான்
சரியெனக் கோள்களும் அண்டமும் கைக்குள்
.. சமைத்திருப்போம்
புரியெனும் காஞ்சிப் புனிதரே காம்பரப்
.. புண்ணியர்க்கே
உரியநம் தேவிகா மாட்சியும் வண்ணையிங்(கு)
.. உற்றிடவே (91)
உற்றிடு வாளந்த ஓங்காரி காமாட்சி
.. ஒண்பொருளைக்
கற்றிடு வார்க்குக் கலைகளுண் டாம்மெய்க்
.. கவிதையுண்டாம்
பெற்றிடு வார்சிவப் பேரின்ப போகப்
.. பெருமையதும்
முற்றிடு மாறிவை மூதுரை யாகும்
.. முழுமையுமே (92)
.. ஒண்பொருளைக்
கற்றிடு வார்க்குக் கலைகளுண் டாம்மெய்க்
.. கவிதையுண்டாம்
பெற்றிடு வார்சிவப் பேரின்ப போகப்
.. பெருமையதும்
முற்றிடு மாறிவை மூதுரை யாகும்
.. முழுமையுமே (92)
முழுமையும் நீயென மொய்த்துநின் சந்நிதி
.. முற்றத்திலே
எழுமையும் கூடி இயலிசை பாடி
.. இணையிலராய்த்
தொழுமையும் செய்குவம் துள்ளியும் ஆடுவம்
.. தோத்திரம்வாய்ச்
செழுமையும் பாடிச்சீர்க் காமாட்சி வெல்கனெச்
.. செப்புவமே (93)
.. முற்றத்திலே
எழுமையும் கூடி இயலிசை பாடி
.. இணையிலராய்த்
தொழுமையும் செய்குவம் துள்ளியும் ஆடுவம்
.. தோத்திரம்வாய்ச்
செழுமையும் பாடிச்சீர்க் காமாட்சி வெல்கனெச்
.. செப்புவமே (93)
செப்பியும் பொல்லாச் சிறுவினைக் கெல்லாம்
.. சிதறுமனம்
தப்பியும் வெல்லுமித் தாரணி நாடகத்
.. தன்மையினை
ஒப்பியும் ஈங்குயிர்ப் புற்றனம் காமாட்சி
.. உன்னருளாய்க்
குப்பியும் பூதங்கள் கொண்டது போல்நின்னுடன்
கூடினமே (94)
.. சிதறுமனம்
தப்பியும் வெல்லுமித் தாரணி நாடகத்
.. தன்மையினை
ஒப்பியும் ஈங்குயிர்ப் புற்றனம் காமாட்சி
.. உன்னருளாய்க்
குப்பியும் பூதங்கள் கொண்டது போல்நின்னுடன்
கூடினமே (94)
கூடின வாறு குறைவிலா வாழ்வும்
.. கொடுத்தெமக்கு
நாடின வாறு நலம் செயச் செங்கை
.. நளினத்திலே
சாடின வாறந் தகனமே ஓடத்
.. தருமபயம்
தேடின வாறும் திகழும்கா மாட்சி
.. திருவருளே (95)
.. கொடுத்தெமக்கு
நாடின வாறு நலம் செயச் செங்கை
.. நளினத்திலே
சாடின வாறந் தகனமே ஓடத்
.. தருமபயம்
தேடின வாறும் திகழும்கா மாட்சி
.. திருவருளே (95)
அருளே பொருளாய் அறிவே விரிவாய்
.. அமர்ந்துலகுத்
திரளே சிவமாய்த் தெளிவே நவமாய்த்
.. திளைத்திருக்க
மருளே கடந்துகா மாட்சியாம் அன்னை
.. மனோன்மணியாய்
இருளே கடிய எழுந்தனை ஞான
.. இரவியன்றே (96)
.. அமர்ந்துலகுத்
திரளே சிவமாய்த் தெளிவே நவமாய்த்
.. திளைத்திருக்க
மருளே கடந்துகா மாட்சியாம் அன்னை
.. மனோன்மணியாய்
இருளே கடிய எழுந்தனை ஞான
.. இரவியன்றே (96)
இரவியும் திங்களும் எண்ணுசேய் மாலும்
.. இரண்டரவும்
முருவிய பொன்னொடு மங்கல வெள்ளியும்
.. மந்தனுமாய்
நிரவிய கோளெலாம் நேர்பெறக் காமாட்சி
.. நின்னன்பர்பால்
கருவியு மாயவர் காலடி வைகுமோர்
.. கண் இமையே (97)
.. இரண்டரவும்
முருவிய பொன்னொடு மங்கல வெள்ளியும்
.. மந்தனுமாய்
நிரவிய கோளெலாம் நேர்பெறக் காமாட்சி
.. நின்னன்பர்பால்
கருவியு மாயவர் காலடி வைகுமோர்
.. கண் இமையே (97)
இமையே இமயா இமையோரும் மண்ணோரும்
.. ஏத்தவரும்
உமையே சிவானந்த உத்தமி காமாட்சி
.. ஊழ்வலியின்
சுமையே உயிர்க்கெலாம் சூழ்தல் தவிர்க்கச்
.. சுகவண்ணையில்
நமையே புரந்தும் நடந்தனள் என்றோதும்
.. நான்மறையே (98)
.. ஏத்தவரும்
உமையே சிவானந்த உத்தமி காமாட்சி
.. ஊழ்வலியின்
சுமையே உயிர்க்கெலாம் சூழ்தல் தவிர்க்கச்
.. சுகவண்ணையில்
நமையே புரந்தும் நடந்தனள் என்றோதும்
.. நான்மறையே (98)
நான்மறை வாழ்க எந் நல்லோரும் வாழ்க
.. நவிலுமன்புக்
கோன்முறை வாழ்க குடிமையும் வாழ்க
.. குதூகலமும்
தான்மறை யாமல் தழைத்தெங்கும் வாழ்க
.. தருமமும்தன்
கான்முறை யூன்றிடக் காமாட்சி தாய் இடும்
.. கட்டளையே (99)
.. நவிலுமன்புக்
கோன்முறை வாழ்க குடிமையும் வாழ்க
.. குதூகலமும்
தான்மறை யாமல் தழைத்தெங்கும் வாழ்க
.. தருமமும்தன்
கான்முறை யூன்றிடக் காமாட்சி தாய் இடும்
.. கட்டளையே (99)
கட்டளை எனற கலித்துறை நூறு
.. கவிதைகளால்
இட்டளை கின்ற இவ் வின்றமிழ் மாலை
.. இனிதெவரும்
முட்டளை என்றதம் மூழைக்கா மாட்சி
.. முறித்திடவாய்
மட்டளை வர்சிவ மாகியும் வாழ்வர்நா
.. மாட்சிசெய்தே (100)
.. கவிதைகளால்
இட்டளை கின்ற இவ் வின்றமிழ் மாலை
.. இனிதெவரும்
முட்டளை என்றதம் மூழைக்கா மாட்சி
.. முறித்திடவாய்
மட்டளை வர்சிவ மாகியும் வாழ்வர்நா
.. மாட்சிசெய்தே (100)
No comments:
Post a Comment