வண்ணையம்பதி அருள்மிகு காமாட்சியம்மன் அந்தாதி
(பாடல்கள் 71 - 80)
சார்பவர்க் கெல்லாம் சரணா லயமும்
.. சலனமறுத்(து)
ஓர்பவர்க் கெல்லாம் உறுதிப் பொருளாய்
.. உணர்ந்துணர்ந்து
நேர்பவர்க் கெல்லாம் நிலைகொள் துணையும்
.. நிகழ்பவளாய்த்
தேர்பவள் ஆவதும் வண்ணைக்கா மாட்சி
.. திருமகளே (71)
.. சலனமறுத்(து)
ஓர்பவர்க் கெல்லாம் உறுதிப் பொருளாய்
.. உணர்ந்துணர்ந்து
நேர்பவர்க் கெல்லாம் நிலைகொள் துணையும்
.. நிகழ்பவளாய்த்
தேர்பவள் ஆவதும் வண்ணைக்கா மாட்சி
.. திருமகளே (71)
திருமகள் வானுறு தேவரும் கூடித்
.. திரண்டுதொழ
ஒருமகன் ஆகம உட்பொருள் யாவுமே
.. உய்த்துணர
வருமகள் செல்வியும் வாக்கெனும் கல்வியும்
.. வாய்த்தவிழிப்
பெருமகள் ஆகிப் பிறங்குவள் காமாட்சி
.. பெண்கிளியே (72)
.. திரண்டுதொழ
ஒருமகன் ஆகம உட்பொருள் யாவுமே
.. உய்த்துணர
வருமகள் செல்வியும் வாக்கெனும் கல்வியும்
.. வாய்த்தவிழிப்
பெருமகள் ஆகிப் பிறங்குவள் காமாட்சி
.. பெண்கிளியே (72)
கிளியே கிளிதரும் கின்னரி யாகிக்
.. கிளர்சுகமே
எளியே மெனயாம் இருந்துமுன் மாண்பினை
.. என்னென்றெலாம்
ஒளியே பெறுநெஞ் சுரைவாய்ப் படுத்தி
.. உணர்ந்தனம் நின்
அளியேகா மாட்சி யணைவதி லேஎமக்
.. கார்தடையே (73)
.. கிளர்சுகமே
எளியே மெனயாம் இருந்துமுன் மாண்பினை
.. என்னென்றெலாம்
ஒளியே பெறுநெஞ் சுரைவாய்ப் படுத்தி
.. உணர்ந்தனம் நின்
அளியேகா மாட்சி யணைவதி லேஎமக்
.. கார்தடையே (73)
தடையெது நேரினும் தாயுனை எண்ணியே
.. தாங்கிவிடப்
படையது வாகிப் பணைக்க எம் தோளிற்
.. பனைவலியாய்
உடையதும் நீயன்றோ ஓங்காரி காமாட்சி
.. உட்கமலப்
புடையது கூடிப் புவனமூன் றாளும்
.. புரந்தரியே (74)
.. தாங்கிவிடப்
படையது வாகிப் பணைக்க எம் தோளிற்
.. பனைவலியாய்
உடையதும் நீயன்றோ ஓங்காரி காமாட்சி
.. உட்கமலப்
புடையது கூடிப் புவனமூன் றாளும்
.. புரந்தரியே (74)
புரந்தரி மாதவப் புண்ணியம் நெஞ்சிற்
.. பொலிந்தருளும்
நிரந்தரி அன்பர் நெடுங்குறை யெல்லாம்
.. நிவர்த்திக்கவே
உரந்தரி பாசமும் ஒண்கணை ஐந்தும்
.. உயிர்ப்பொருட்டாய்க்
கரந்தரி சக்தியக் காமாட்சி என்பதும்
.. கண்கொள்ளுமே (75)
.. பொலிந்தருளும்
நிரந்தரி அன்பர் நெடுங்குறை யெல்லாம்
.. நிவர்த்திக்கவே
உரந்தரி பாசமும் ஒண்கணை ஐந்தும்
.. உயிர்ப்பொருட்டாய்க்
கரந்தரி சக்தியக் காமாட்சி என்பதும்
.. கண்கொள்ளுமே (75)
கொள்ளவும் கொண்டு குறைவிலாக் கல்வி
.. குலதனமாய்
விள்ளவும் கொண்டு வியப்புக்கும் அப்பால்
.. வியப்பரிதாய்
அள்ளவும் கொண்டுளே ஆனந்த மாகி
.. அறிவமுதம்
தெள்ளவும் கொண்டு தெளிவிக்கும் காமாட்சி
.. தீந்தமிழே (76)
.. குலதனமாய்
விள்ளவும் கொண்டு வியப்புக்கும் அப்பால்
.. வியப்பரிதாய்
அள்ளவும் கொண்டுளே ஆனந்த மாகி
.. அறிவமுதம்
தெள்ளவும் கொண்டு தெளிவிக்கும் காமாட்சி
.. தீந்தமிழே (76)
தமிழே தமிழில் தழைக்கும்கா மாட்சி
.. தமிழதையே
குமிழேறி இன்பம் கொழிக்கக் குமர
.. குருபரர்பால்
சிமிழே எனும்வாய்ச் சிறுமியாய்ப் போந்துச்
.. செவிமடுத்தும்
உமிழே றோளிப்பரி சாரமன்னார்க்கன்(று)
.. உதவினையே (77)
.. தமிழதையே
குமிழேறி இன்பம் கொழிக்கக் குமர
.. குருபரர்பால்
சிமிழே எனும்வாய்ச் சிறுமியாய்ப் போந்துச்
.. செவிமடுத்தும்
உமிழே றோளிப்பரி சாரமன்னார்க்கன்(று)
.. உதவினையே (77)
வினையே செறிந்த விரைவுகொண் டெம்மை
.. விரட்டியொரு
முனையே ஒதுக்க முனையும் தருணம்
.. முகமனின்றி
அனையே எனவுன் அடைக்கலம் சார்வோம்
.. அதனையல்லால்
நினையேம்கா மாட்சி நிலையிலா எண்ணமெந்
.. நெஞ்சுக்குமே (78)
.. விரட்டியொரு
முனையே ஒதுக்க முனையும் தருணம்
.. முகமனின்றி
அனையே எனவுன் அடைக்கலம் சார்வோம்
.. அதனையல்லால்
நினையேம்கா மாட்சி நிலையிலா எண்ணமெந்
.. நெஞ்சுக்குமே (78)
நெஞ்சுக்கும் நெஞ்சென நிர்மலா காசம்
.. நெடிதுகண்டே
அஞ்சுக்கும் அஞ்சென ஆங்கதில் தோன்றி
.. அடிமுடியாய்
மஞ்சுக்கும் மஞ்சென மாவடிச் சேவைக்கா
.. மாட்சிஎன்றே
பஞ்சுக்கும் பஞ்செனப் பாதம் நடந்தாய்
.. பகவதியே (79)
.. நெடிதுகண்டே
அஞ்சுக்கும் அஞ்சென ஆங்கதில் தோன்றி
.. அடிமுடியாய்
மஞ்சுக்கும் மஞ்சென மாவடிச் சேவைக்கா
.. மாட்சிஎன்றே
பஞ்சுக்கும் பஞ்செனப் பாதம் நடந்தாய்
.. பகவதியே (79)
பகவ தியும்நீ பணிகுவார்க் கெல்லாம்
.. பரிந்தருளும்
சுகவ தியும்நீ சுகானு பவத்தில்
.. சுகித்திருக்கத்
தகவ தியும்நீ தயாள குணத்திற்கோர்
.. தாய்மையுமாய்
யுகவ தியும்நீ ஒளிகோடிக் காமாட்சி
.. உத்தமியே (80)
.. பரிந்தருளும்
சுகவ தியும்நீ சுகானு பவத்தில்
.. சுகித்திருக்கத்
தகவ தியும்நீ தயாள குணத்திற்கோர்
.. தாய்மையுமாய்
யுகவ தியும்நீ ஒளிகோடிக் காமாட்சி
.. உத்தமியே (80)
No comments:
Post a Comment