அந்த நாள்
பருவம் என்ற மேடை முன்னே
.. பலதிரைகள் ஆடிடும்
உருவம் என்ற நிழல்கள் அங்கே
.. ஒவ்வொன்றாகக் கூடிடும்
.. பலதிரைகள் ஆடிடும்
உருவம் என்ற நிழல்கள் அங்கே
.. ஒவ்வொன்றாகக் கூடிடும்
இரவும் ஒன்று பகலும் ஒன்றாய்
.. எண்ணி நாள்கள் விடிந்திடும்
வரவும் ஒன்று செலவும் ஒன்றாய்
.. வாழ்வுக் கூத்து முடிந்திடும்
.. எண்ணி நாள்கள் விடிந்திடும்
வரவும் ஒன்று செலவும் ஒன்றாய்
.. வாழ்வுக் கூத்து முடிந்திடும்
காலம் என்ற மாயனாரின்
.. கைத்திறங்கள் என்னவோ?
கோல மன்றில் சாயமிட்ட
.. கொள்கை தானும் மின்னவோ?
.. கைத்திறங்கள் என்னவோ?
கோல மன்றில் சாயமிட்ட
.. கொள்கை தானும் மின்னவோ?
ஓலம் நின்று நாத வெள்ளம்
.. ஒடுங்கலும்தான் என்றைக்கோ?
மூலம் வென்று நாமும் மொத்தம்
.. மூலம் ஆவதன்றைக்கோ?
.. ஒடுங்கலும்தான் என்றைக்கோ?
மூலம் வென்று நாமும் மொத்தம்
.. மூலம் ஆவதன்றைக்கோ?
No comments:
Post a Comment