Thursday, August 2, 2012

துளித் துளி - பொன்மொழிகள்

துளித் துளி - பொன்மொழிகள்
 
பொன்மொழி எதற்கு?
பின்மொழி வதற்கு!
 
மேற்கொள அல்ல
மேற்கோள் சொல்ல
 
எடுத்தே புகலவும்
அடுத்தே அகலவும்
 
உரையில் தொடுவது - நடை
முறையில் விடுவது
 
வாயில் வழங்கலாம் - வழி
தோய விழுங்கலாம்
 
வழிபடக் கூறு
வெளிப்பட வேறு
 
நடத்தைக் கல்ல
நழுவ மெல்ல
 
சந்தர்ப்பத் தழுவல்
சமயத்தில் நழுவல்
 
எனைத்தானும் கேட்க
அனைத்தானும் ஏய்க்க
 
கேள்விமேல் கேள்வி
வாழ்வின் மேல் தோல்வி
 
மதிமேல் பூனை
பதில்மேல் பானை
 
கேட்டார்க் கெதிர்தான்! - சொல்ல
மாட்டார் பதில்தான்
 
அர்த்தங்கள் எண்ண
குதர்த்தங்கள் பண்ண
 
தர்க்கங்கள் தழைக்க
குதர்க்கங்கள் பிழைக்க
 
வேதங்கள் ஓத - வெறும்
வாதங்கள் மோத
 
வழிபடப் பேர்தான்
வழிப்பட யார்தான்?

No comments:

Post a Comment