ஸ்ரீ சக்தி உலா (16-20)
மகிசா சுரபத மர்த்தினி - பனி
மயராஜ பர்வத வர்த்தினி
அகிலாண்ட நாயகி ஆயிழை - என்றும்
அன்பருக் கன்புசெய் சேயிழை (16)
மயராஜ பர்வத வர்த்தினி
அகிலாண்ட நாயகி ஆயிழை - என்றும்
அன்பருக் கன்புசெய் சேயிழை (16)
பேதைக்கும் பேரருள் கூட்டுவள் - அழும்
பிள்ளைக்கும் பால் சுரந்தூட்டுவள்
ஓதக்கொள் மாகவி ஆக்குவள் - நொந்த
ஊமைக்கும் வாக்குற நோக்குவள் (17)
பிள்ளைக்கும் பால் சுரந்தூட்டுவள்
ஓதக்கொள் மாகவி ஆக்குவள் - நொந்த
ஊமைக்கும் வாக்குற நோக்குவள் (17)
மையப் புருவ மனோன்மணி - எனும்
மாதவள் தேவர்க்கும் தேன்மணி
வையமும் வானும் வருமணி - அவள்
வாழ்வுக்கும் வாழ்வு தருமணி (18)
மாதவள் தேவர்க்கும் தேன்மணி
வையமும் வானும் வருமணி - அவள்
வாழ்வுக்கும் வாழ்வு தருமணி (18)
அகில உலகீன்ற அன்னைதான் - அவள்
ஆயினும் என்றென்றும் கன்னிதான் -
திகிலினைத் தூள்செயும் ஆயுதம் - அவள்
திருப்புகழ் பாடுக வாய் இதம் (19)
ஆயினும் என்றென்றும் கன்னிதான் -
திகிலினைத் தூள்செயும் ஆயுதம் - அவள்
திருப்புகழ் பாடுக வாய் இதம் (19)
வெள்ளி விரத ஸ்ரீ வித்தியை - பார
விரதம் விரும்பும் ஸ்ரீ நித்தியை
கொள்ளும் நிறைகுடக் கோமளை - நவ
கோணத் துறையும் சியாமளை! (20)
விரதம் விரும்பும் ஸ்ரீ நித்தியை
கொள்ளும் நிறைகுடக் கோமளை - நவ
கோணத் துறையும் சியாமளை! (20)
No comments:
Post a Comment