வேண்டுகோள்
புதிய எண்ணங்கள்
புதிய வண்ணங்கள்
புதுவெள் ளம்போல்
பெருகவிடு - அதில்
விதியின் சிந்தைகள்
விளைக்கும் நிந்தைகள்
விடுத்தின் பங்கள்
பருகவிடு
புதிய வண்ணங்கள்
புதுவெள் ளம்போல்
பெருகவிடு - அதில்
விதியின் சிந்தைகள்
விளைக்கும் நிந்தைகள்
விடுத்தின் பங்கள்
பருகவிடு
வாழும் நம்பிக்கை
வளர்க்கும் அன்புக்கை
வழிகோத் தென்னை
நடக்கவிடு - அதில்
தோளும் தோளுமாய்த்
தொடரச் சூழுமாய்த்
துயரம் கொன்று
துடைக்கவிடு
வளர்க்கும் அன்புக்கை
வழிகோத் தென்னை
நடக்கவிடு - அதில்
தோளும் தோளுமாய்த்
தொடரச் சூழுமாய்த்
துயரம் கொன்று
துடைக்கவிடு
சிந்தை வேகங்கள்
செயல்வி வேகங்கள்
செறிய மேலும்
வளர்ச்சிகொடு - அதில்
முந்தை மூடங்கள்
முனைந்த வேடங்கள்
முழுதும் சாய
எழுச்சிகொடு
செயல்வி வேகங்கள்
செறிய மேலும்
வளர்ச்சிகொடு - அதில்
முந்தை மூடங்கள்
முனைந்த வேடங்கள்
முழுதும் சாய
எழுச்சிகொடு
இதயம் கோருமாய்
இறைஞ்ச வேறுமாய்
இருப்ப தென்ன,
மனிதனொடு? - அவன்
கதையும் மானிடக்
கவிதை தானிடக்
கனிந்தெம் தாயே
புனிதம்கொடு
இறைஞ்ச வேறுமாய்
இருப்ப தென்ன,
மனிதனொடு? - அவன்
கதையும் மானிடக்
கவிதை தானிடக்
கனிந்தெம் தாயே
புனிதம்கொடு
No comments:
Post a Comment