Sunday, September 30, 2012

உயிர்ப்பு!

உயிர்ப்பு!
 
மூலத்தின் ஓரத்தில்
முளைவிட்ட வித்தொன்று
காலத்தின் ஓரத்தில்
கனல்மூட்டப் பிறக்கிறது
 
உதயத்தின் ஓரத்தில்
உயிர்த்திட்ட மூச்சொன்று
இதயத்தின் ஓரத்தில்
எனைஎட்டிப் பார்க்கிறது
 
தொடக்கத்தின் ஓரத்தில்
துளிர்விட்ட வினைஒன்று
அடக்கத்தின் ஓரத்தில்
அப்பாலும் விரிகிறது
 
புழுக்கத்தின் ஓரத்தில்
பொரிந்திட்ட குஞ்சொன்று
ஒழுக்கத்தின் ஓரத்தில்
உறவுக்கே தவிக்கிறது
 
நெஞ்சுக்குள் ஓரத்தில்
நிழலிட்ட கனவொன்று
பிஞ்சுக்குள் ஓரத்தில்
பிரமிப்பாய் வளர்கிறது

No comments:

Post a Comment