Thursday, October 4, 2012

மனிதன்

மனிதன்
 
அழுது கொண்டே உலகம் நோக்கி
.. வருகிறான் - பின்
பழுது கண்டே கலகம் ஊக்கி
.. மறைகிறான்
 
குறி இலாதே வெறி அளந்து
.. குதிக்கிறான் - பின்
வெறியின் மீதே நெறி இழந்தும்
.. விதிர்க்கிறான்
 
ஆசை மட்டும் அமைய வீம்பில்
.. அலைகிறான் - பின்
கூசு மட்டும் குமையத் தேம்பிக்
.. குலைகிறான்
 
மனித வாழ்வின் மருமம் என்ன
.. மருமமோ? - அதன்
புனிதம் யாவும் புலம்பிப் பின்னும்
.. பொருமுமோ?

No comments:

Post a Comment