Tuesday, July 24, 2012

காமாட்சியம்மன் அந்தாதி நூற்பயன்

வண்ணையம்பதி அருள்மிகு காமாட்சியம்மன் அந்தாதி
 
நூற்பயன்
 
எண்ணுவன கூடும் இணையில்லா வாழ்வுதரும்
நண்ணுவன வெல்லாம் நலமாகும் - திண்ணம்
அருமையுறு காமாட்சி அந்தாதி நூறும்
பெருமையுற ஓதப் பெறின்
 
மடக்கு
 
அந்தாதிப் பாடில்லா அம்மைக்குக் கட்டளையால்
அந்தாதி பாடுவார்க் கன்னவள்தாம் - அந்தாதி
என்னுமாய் உற்றதுணை ஏற்றருள்வாள் மஞ்சளும்பூப்
பொன்னுமாய்ச் செல்வம் பொலிந்து
 
(அந்தாதி = அந்தம் + ஆதி, அந்த + ஆதி, அம் + தாதி)
 
கி. வா. ஜ அவர்களின் பாராட்டுப்பா
 
புவிமணி நெற்றரின் யாரே அதைமெச்சிப்
.. போற்றல்செயார்
சவிமணி யாங்கதிர் வானூறின் யாவரே
.. தாழகிலார்
செவிமணிச் சொற்கொள் தமிழ ழகன்றமிழ்
.. தந்துசந்தக்
கவிமணி என்றும் பெயர்பெற்று நின்றான்
.. கவினுறவே

No comments:

Post a Comment