வண்ணையம்பதி அருள்மிகு காமாட்சியம்மன் அந்தாதி
(பாடல்கள் 51 - 60)
விழைபவள் முன்னை விரும்பி விரும்பி
.. விழைபவர்க்கும்
குழைபவள் அன்னவர் கோரிக்கை ஏற்றுக்
.. கொடுப்பதற்கும்
தழைபவள் ஏன்றஎந் தாயினும் சாலத்
.. தயவினுக்கும்
இழைபவள் அல்லவோ என்றும் காமாட்சி
.. இறையவளே (51)
.. விழைபவர்க்கும்
குழைபவள் அன்னவர் கோரிக்கை ஏற்றுக்
.. கொடுப்பதற்கும்
தழைபவள் ஏன்றஎந் தாயினும் சாலத்
.. தயவினுக்கும்
இழைபவள் அல்லவோ என்றும் காமாட்சி
.. இறையவளே (51)
இறையவள் நீசொலும் என்னரு பேதம்
.. எனைத்திலுமே
மறையவள் நீஅதன் மாற்றமும் நீசொல்
.. மகிமைகுன்றா
நிறையவள் நீஎந்த நிச்ச யமும்நீ
.. நெடுந்தருக்கப்
பொறையவள் நீவண்ணை பூத்துக்கா மாட்சி
.. பொருந்துவையே (52)
.. எனைத்திலுமே
மறையவள் நீஅதன் மாற்றமும் நீசொல்
.. மகிமைகுன்றா
நிறையவள் நீஎந்த நிச்ச யமும்நீ
.. நெடுந்தருக்கப்
பொறையவள் நீவண்ணை பூத்துக்கா மாட்சி
.. பொருந்துவையே (52)
பொருந்துவ தன்றிப் புலைமயக் காய்வெறும்
.. பொய்ம்மையிலே
வருந்துவ தன்றி வடவண்ணைத் தெய்வமெம்
.. வாழ்வுக்கரண்
திருந்துவ தாகத் திறமொடு கூட்டும்
.. தினம்தினம்யாம்
பெருந்தவம் காமாட்சி யன்னையைப் போற்றும்
.. பெருமையிதே (53)
.. பொய்ம்மையிலே
வருந்துவ தன்றி வடவண்ணைத் தெய்வமெம்
.. வாழ்வுக்கரண்
திருந்துவ தாகத் திறமொடு கூட்டும்
.. தினம்தினம்யாம்
பெருந்தவம் காமாட்சி யன்னையைப் போற்றும்
.. பெருமையிதே (53)
பெருமையும் உண்டு பிறவுமே உண்டு
.. பெறுவனவான்
அருமையும் உண்டருள் ஆட்சியும் உண்டிவ்
.. வகிலமெலாம்
செருமையும் உண்டெனிற் செந்நெறி காமாட்சி
.. சீர்செயவே
ஒருமையும் உண்டுள் ளொளியதும் உண்டீ(து)
.. உறுதியன்றே (54)
.. பெறுவனவான்
அருமையும் உண்டருள் ஆட்சியும் உண்டிவ்
.. வகிலமெலாம்
செருமையும் உண்டெனிற் செந்நெறி காமாட்சி
.. சீர்செயவே
ஒருமையும் உண்டுள் ளொளியதும் உண்டீ(து)
.. உறுதியன்றே (54)
உறுதிப் பொருளாய் உற்பொரு ளாயெலாம்
.. ஊன்றியுணர்ந்(து)
இறுதிப் பொருளாய் இறைபொரு ளாய்நீ
.. இருந்தமைகண்(டு)
அறுதிப் பொருளாய் அறாத பொருளாய்
.. அறிந்தமட்டும்
கருதிப் பொருள் நினைக் கண்டோமெங் காமாட்சி
.. கைகுவித்தே (55)
.. ஊன்றியுணர்ந்(து)
இறுதிப் பொருளாய் இறைபொரு ளாய்நீ
.. இருந்தமைகண்(டு)
அறுதிப் பொருளாய் அறாத பொருளாய்
.. அறிந்தமட்டும்
கருதிப் பொருள் நினைக் கண்டோமெங் காமாட்சி
.. கைகுவித்தே (55)
கைகுவிப் பாரெனில் காணவர் நெஞ்சக்
.. கமலத்திலே
பொய்குவிப் பாரவர் பூசனை யாறு
.. பொழுதிலுமே
செய்குவிப் பாரவர் சிந்தை யெலாம்சிவ
.. கீர்த்தி என்றே
மெய்குவிப் பார்வண்ணைக் காமாட்சி பக்தி
.. மிகைபெறவே (56)
.. கமலத்திலே
பொய்குவிப் பாரவர் பூசனை யாறு
.. பொழுதிலுமே
செய்குவிப் பாரவர் சிந்தை யெலாம்சிவ
.. கீர்த்தி என்றே
மெய்குவிப் பார்வண்ணைக் காமாட்சி பக்தி
.. மிகைபெறவே (56)
மிகைபெற உண்டுமேன் மேலும் பயன்கள்
.. மிளிர்வனவாய்த்
தகைபெற உண்டு தனமொடு கல்வி
.. தழைத்தநடை
வகைபெற உண்டு வளம்பெறு வாழ்வும்
.. வளர்வதுண்டே
தொகைபெறச் சிங்காரத் தோட்டம்சூழ் காமாட்சி
.. தொன்மகளே (57)
.. மிளிர்வனவாய்த்
தகைபெற உண்டு தனமொடு கல்வி
.. தழைத்தநடை
வகைபெற உண்டு வளம்பெறு வாழ்வும்
.. வளர்வதுண்டே
தொகைபெறச் சிங்காரத் தோட்டம்சூழ் காமாட்சி
.. தொன்மகளே (57)
தொன்மக ளேநலம் தோன்றப் பலவாய்த்
.. துறைகிளரும்
நன்மக ளேதமிழ் நாவிற் பழுத்து
.. நயந்திருக்கும்
சொன்மகளேஎச் சுகமும் பெறவே
.. சுரந்தருள்நீ
பொன்மக ளேபுடை போற்றுங்கா மாட்சியாம்
.. பொற்கொடியே (58)
.. துறைகிளரும்
நன்மக ளேதமிழ் நாவிற் பழுத்து
.. நயந்திருக்கும்
சொன்மகளேஎச் சுகமும் பெறவே
.. சுரந்தருள்நீ
பொன்மக ளேபுடை போற்றுங்கா மாட்சியாம்
.. பொற்கொடியே (58)
பொற்கொடி காமாட்சி பூத்தநின் பீடத்தோர்
.. பூம்படியாய்க்
கற்கொடி யேனைக் கருணைகொண் டாக்கின்
.. கருதுபல்லூழ்
முற்கொடி தேஎன மூண்டன வாய்ச்சற்றும்
.. முன்நிற்பவோ
விற்கொடி யேறி விழியர சாள்பிறை
.. வேணியளே (59)
.. பூம்படியாய்க்
கற்கொடி யேனைக் கருணைகொண் டாக்கின்
.. கருதுபல்லூழ்
முற்கொடி தேஎன மூண்டன வாய்ச்சற்றும்
.. முன்நிற்பவோ
விற்கொடி யேறி விழியர சாள்பிறை
.. வேணியளே (59)
வேணிநீள் நல்ல வரைமலர்ச் செல்விபல்
.. வித்தைக்குமே
வாணிநீ நல்லமெய் வாழ்வுக்கும் அப்பால்
.. வருகதிக்கும்
தோணிநீ நல்ல துறையாம் சிவநெறி
.. துய்ப்பதற்கும்
ஏணிநீ நல்லாய்எம் காமாட்சி எங்கும்
.. இருப்பவளே (60)
.. வித்தைக்குமே
வாணிநீ நல்லமெய் வாழ்வுக்கும் அப்பால்
.. வருகதிக்கும்
தோணிநீ நல்ல துறையாம் சிவநெறி
.. துய்ப்பதற்கும்
ஏணிநீ நல்லாய்எம் காமாட்சி எங்கும்
.. இருப்பவளே (60)
No comments:
Post a Comment