வண்ணையம்பதி அருள்மிகு காமாட்சியம்மன் அந்தாதி
(பாடல்கள் 31 - 40)
அறிந்த தனைத்தும் அவளென் றறிந்தோம்
.. அதன்வழியே
புரிந்த தனைத்தும் அவளென்று போந்தோம்
.. புலனொடுக்கித்
தெரிந்த தனைத்தும் அவளென்று தேர்ந்தோம்
.. தெளிவிலிவை
விரிந்த தனைத்தும்கா மாட்சியியேல் நெஞ்சம்
.. வியக்குமன்றே (31)
.. அதன்வழியே
புரிந்த தனைத்தும் அவளென்று போந்தோம்
.. புலனொடுக்கித்
தெரிந்த தனைத்தும் அவளென்று தேர்ந்தோம்
.. தெளிவிலிவை
விரிந்த தனைத்தும்கா மாட்சியியேல் நெஞ்சம்
.. வியக்குமன்றே (31)
வியக்கும் படியவள் விந்தைவிஞ் ஞான
.. விளக்கமுமாய்
இயக்கும் படியினி தேயிருப் பாள்நலம்
.. எண்ணிலவாய்ப்
பயக்கும் படியெந்தப் பஞ்சை யையும் ஒரு
.. பார்வையிலே
கயக்கும் படியறுத் தாளுவள் காமாட்சி
.. காவியமே (32)
.. விளக்கமுமாய்
இயக்கும் படியினி தேயிருப் பாள்நலம்
.. எண்ணிலவாய்ப்
பயக்கும் படியெந்தப் பஞ்சை யையும் ஒரு
.. பார்வையிலே
கயக்கும் படியறுத் தாளுவள் காமாட்சி
.. காவியமே (32)
காவிய மேஎனக் கல்லொடு மண்ணும்
.. கனிவித்துயிர்
ஓவிய மேஎன உன்னொளி கூட்டி
.. உரைப்பதற்கே
மேவியம் மேநினை மேன்மேலும் வேண்டினம்
.. மேலெழுந்து
தாவியு மேமடல் தாழைசூழ் வண்ணைத்
.. தரங்கிணியே (33)
.. கனிவித்துயிர்
ஓவிய மேஎன உன்னொளி கூட்டி
.. உரைப்பதற்கே
மேவியம் மேநினை மேன்மேலும் வேண்டினம்
.. மேலெழுந்து
தாவியு மேமடல் தாழைசூழ் வண்ணைத்
.. தரங்கிணியே (33)
தரங்கிணி காமாட்சி தாள்மற வா(து)உன்
.. தயைபெறவே
நெருங்கணி யாகமுன் நின்றெம் குறையெலாம்
.. நேர்ந்துரைத்தோம்
குரங்கணி யாய்க்கனி கோடெறிந் தாடக்
.. குளிர்வனம்சூழ்
மருங்கணி யாம்வண்ணை மாமதிற் கோயில்
.. மகிழவந்தே (34)
.. தயைபெறவே
நெருங்கணி யாகமுன் நின்றெம் குறையெலாம்
.. நேர்ந்துரைத்தோம்
குரங்கணி யாய்க்கனி கோடெறிந் தாடக்
.. குளிர்வனம்சூழ்
மருங்கணி யாம்வண்ணை மாமதிற் கோயில்
.. மகிழவந்தே (34)
வந்தேம் தெளிந்தேம் வருதுயர்க் கெல்லாம்
.. வகையிழந்தே
நொந்தேம் எனவும் நுடங்கு நிலையை
.. நொடியில்விட்டேம்
செந்தேன் பிலிற்றுமுன் சிங்காரத் தோட்டம்
.. சிறக்கஎதிர்
கொந்தேய் குழலிகா மாட்சி குளிரருள்
.. கூர்ந்ததுமே (35)
.. வகையிழந்தே
நொந்தேம் எனவும் நுடங்கு நிலையை
.. நொடியில்விட்டேம்
செந்தேன் பிலிற்றுமுன் சிங்காரத் தோட்டம்
.. சிறக்கஎதிர்
கொந்தேய் குழலிகா மாட்சி குளிரருள்
.. கூர்ந்ததுமே (35)
கூர்ந்தது மன்றிக் குறைவினை தீர்ந்தோம்
.. குறைவினையே
தீர்ந்தது மன்றித் தெளிவொன்று சார்ந்தோம்
.. தெளிவொன்றையே
சார்ந்தது மன்றிச் சமத்துவம் போந்தோம்
.. சமத்துவமே
போந்தது மன்றிப் பொலிந்தனம் காமாட்சி
.. புண்ணியமே (36)
.. குறைவினையே
தீர்ந்தது மன்றித் தெளிவொன்று சார்ந்தோம்
.. தெளிவொன்றையே
சார்ந்தது மன்றிச் சமத்துவம் போந்தோம்
.. சமத்துவமே
போந்தது மன்றிப் பொலிந்தனம் காமாட்சி
.. புண்ணியமே (36)
புண்ணியம் நீயந்தப் புண்ணியம் யாவுக்கும்
.. பூத்தமுதற்
கண்ணியம் நீயந்தக் கண்ணியம் யாவுக்கும்
.. காட்சிமுந்த
எண்ணிய நீயந்த எண்ணங்கள் யாவும்
.. இயக்கவன்றோ
நண்ணிய நீவண்ணை நாடினை காமாட்சி
.. நாரணியே (37)
.. பூத்தமுதற்
கண்ணியம் நீயந்தக் கண்ணியம் யாவுக்கும்
.. காட்சிமுந்த
எண்ணிய நீயந்த எண்ணங்கள் யாவும்
.. இயக்கவன்றோ
நண்ணிய நீவண்ணை நாடினை காமாட்சி
.. நாரணியே (37)
நாரா யணிநீ நவின்மறை நான்கும்
.. நயந்தொழுகும்
பாரா யணிநீ பரமனார் அன்றே
.. பகுத்துரைத்த
சீரா யணிஎழு நாலா கமும்நீ
.. சிரமிசையாம்
பேரா தணிந்தனம் பேறுறக் காமாட்சி
.. பெட்டகமே (38)
.. நயந்தொழுகும்
பாரா யணிநீ பரமனார் அன்றே
.. பகுத்துரைத்த
சீரா யணிஎழு நாலா கமும்நீ
.. சிரமிசையாம்
பேரா தணிந்தனம் பேறுறக் காமாட்சி
.. பெட்டகமே (38)
பெட்டகம் போலப் பிறங்குமுன் பாலே
.. பெரும்பற்றையாம்
இட்டகம் போற்றி இனிது புரந்தனம்
.. என்றென்றுமே
திட்டகம் போலத் திரைகடல் வாழ்வில்
.. தெரிந்தெம் கண்ணிற்
பட்டகம் பீரமும் நீயன்றோ காமாட்சி
.. பாங்கினியே (39)
.. பெரும்பற்றையாம்
இட்டகம் போற்றி இனிது புரந்தனம்
.. என்றென்றுமே
திட்டகம் போலத் திரைகடல் வாழ்வில்
.. தெரிந்தெம் கண்ணிற்
பட்டகம் பீரமும் நீயன்றோ காமாட்சி
.. பாங்கினியே (39)
பாங்கினி றைவான் பயன்தரு மாறு
.. பழுத்திருக்கும்
தீங்கனி நீஎன்றே தேடினம் கண்டோம்
.. திரண்டசுகம்
தாங்கனித் தின்பத் தனிப்பெரு வாழ்வும்
.. தழைப்பதுண்டே
ஆங்கினி காமாட்சி யாவுக்கும் நின்னருள்
.. ஆதிக்கமே (40)
.. பழுத்திருக்கும்
தீங்கனி நீஎன்றே தேடினம் கண்டோம்
.. திரண்டசுகம்
தாங்கனித் தின்பத் தனிப்பெரு வாழ்வும்
.. தழைப்பதுண்டே
ஆங்கினி காமாட்சி யாவுக்கும் நின்னருள்
.. ஆதிக்கமே (40)
No comments:
Post a Comment