Monday, July 2, 2012

துளித் துளி - உயிர் எழுத்துச் செய்யுள்

உயிர் எழுத்துச் செய்யுள்
 
அன்பே உலகம்
பண்பே திலகம்
 
ஆற்றுதல் நலமேல்
போற்றுதல் தலைமேல்
 
இன்ப வேட்டை - எலாம்
துன்பக் கோட்டை
 
ஈதல் நல்லது
மோதல் பொல்லது
 
உள்ள உரம்தான்
கொள்ளைத் திறம்தான்
 
ஊதா ரித்தனம்
தீதாம் மெத்தனம்
 
எண்ணிச் செய்வோர்
விண்ணின் உய்வோர்
 
எற்ற இறக்கம்
தேற்றம் பிறக்கும்
 
ஐயமே அறிவு
வையமேல் விரிவு
 
ஒன்று படுவார்
வென்றுவிடுவார்
 
ஓடாய் உழைக்கின்
காடாய்த் தழைக்கும்
 
ஔவியம் பேசேல்
செவ்விய(து) ஏசேல்

No comments:

Post a Comment