வண்ணையம்பதி அருள்மிகு காமாட்சியம்மன் அந்தாதி
(பாடல்கள் 41 - 50)
ஆதிக்கும் ஆதியாய் அநாதியா மென்ற
.. அரும்பொருளாய்
நீதிக்கும் நீதியாய் நின்று நிமலையாம்
.. நிச்சயமாய்ச்
சோதிக்கும் சோதியாய்ச் சோதிச் சுடராய்த்
.. துரியவெளி
சாதிக்கும் வண்ணயஞ் சக்திகா மாட்சியைச்
.. சாற்றுமினே (41)
.. அரும்பொருளாய்
நீதிக்கும் நீதியாய் நின்று நிமலையாம்
.. நிச்சயமாய்ச்
சோதிக்கும் சோதியாய்ச் சோதிச் சுடராய்த்
.. துரியவெளி
சாதிக்கும் வண்ணயஞ் சக்திகா மாட்சியைச்
.. சாற்றுமினே (41)
சாற்றுமின் அன்னையைச் சந்தமும் சிந்தும்
.. சகலமுமாய்ப்
போற்றுமின் ஆடையும் பொன்னு மணியும்
.. புனைகுவித்தே
ஆற்றுமின் அன்னைகா மாட்சி அவளென
.. ஆய்ந்தறிந்தே
நேற்றுமுனின்று நிகழ்வருங் காலமும்
.. நேர்வெல்லுமே (42)
.. சகலமுமாய்ப்
போற்றுமின் ஆடையும் பொன்னு மணியும்
.. புனைகுவித்தே
ஆற்றுமின் அன்னைகா மாட்சி அவளென
.. ஆய்ந்தறிந்தே
நேற்றுமுனின்று நிகழ்வருங் காலமும்
.. நேர்வெல்லுமே (42)
வெல்வோம் அவளடிக் கீழ்நின்று பொல்லா
.. வினைகளையச்
செல்வோம் அவள்திருச் சந்நிதிக் கேசென்று
.. சித்திரமாய்ச்
சொல்வோம் அவள்பெயர் சுந்தரி காமாட்சி
.. சூழவந்(து), அ,
கல்வோம் எனலின்றிக் கைகூப்பி நிற்போம்
.. கருத்தொன்றியே (43)
.. வினைகளையச்
செல்வோம் அவள்திருச் சந்நிதிக் கேசென்று
.. சித்திரமாய்ச்
சொல்வோம் அவள்பெயர் சுந்தரி காமாட்சி
.. சூழவந்(து), அ,
கல்வோம் எனலின்றிக் கைகூப்பி நிற்போம்
.. கருத்தொன்றியே (43)
ஒன்றே உலகவ் வுலகமும் சோதர
.. ஒற்றுமையாய்
நின்றே நிலவுமெந் நெஞ்சமும் தீமை
.. நினைப்பறியா(து)
அன்றே கருணையிற் காமாட்சி நம்மை
.. அரவணைக்கச்
சென்றேமுன் னேறும் சிறிதுமில் லைபகை
.. செப்புவதே (44)
.. ஒற்றுமையாய்
நின்றே நிலவுமெந் நெஞ்சமும் தீமை
.. நினைப்பறியா(து)
அன்றே கருணையிற் காமாட்சி நம்மை
.. அரவணைக்கச்
சென்றேமுன் னேறும் சிறிதுமில் லைபகை
.. செப்புவதே (44)
செப்பு வதுமவள் சீர்த்திய யாமிந்தச்
.. சென்மத்திலே
ஒப்பு வதுமவ் வொருத்தியே தெய்வமென்(று)
.. உள்ளுணர்ந்தே
தப்பு வதுமில்லை தாயவள் காமாட்சி
.. தாட்பணிக்கே
எப்பு வனச்சுகம் ஏயினும் வேண்டோம்
.. இவைதிண்ணமே (45)
.. சென்மத்திலே
ஒப்பு வதுமவ் வொருத்தியே தெய்வமென்(று)
.. உள்ளுணர்ந்தே
தப்பு வதுமில்லை தாயவள் காமாட்சி
.. தாட்பணிக்கே
எப்பு வனச்சுகம் ஏயினும் வேண்டோம்
.. இவைதிண்ணமே (45)
திண்ணமே கொண்டவர் திண்ணிய ராகத்
.. திகழ்ந்ததற்பின்
எண்ணமே வேறெதும் என்செயும் மாயஅவ்
.. வெண்ணமும்தன்
வண்ணமே மக்களின் வாழ்வை நடத்துமோ
.. வாய்த்தஇரு
கண்ணுமே கல்விநற் செல்வமாம் காமாட்சி
.. கன்னிகையே (46)
.. திகழ்ந்ததற்பின்
எண்ணமே வேறெதும் என்செயும் மாயஅவ்
.. வெண்ணமும்தன்
வண்ணமே மக்களின் வாழ்வை நடத்துமோ
.. வாய்த்தஇரு
கண்ணுமே கல்விநற் செல்வமாம் காமாட்சி
.. கன்னிகையே (46)
கன்னியே உன்னைக் கடவுளர்க் கெல்லாம்
.. கடவுளெனப்
பன்னியே அந்தாதிப் பண்ணூறும் பாடிப்
.. பரவிநிதம்
சென்னியே உன்றன் திருவடி ஏற்றிச்
.. சிரசெழுத்தை
முன்னியே மாற்றவும் மூண்டனம் காமாட்சி
.. முன்வெற்றியே (47)
.. கடவுளெனப்
பன்னியே அந்தாதிப் பண்ணூறும் பாடிப்
.. பரவிநிதம்
சென்னியே உன்றன் திருவடி ஏற்றிச்
.. சிரசெழுத்தை
முன்னியே மாற்றவும் மூண்டனம் காமாட்சி
.. முன்வெற்றியே (47)
வெற்றிமேல் வெற்றிதான் வெற்றுரை யல்லஇவ்
.. வீறுரைகள்
பற்றிமேல் பற்றியப் பாதாம் புயத்தைப்
.. பணிந்தவொன்றால்
சுற்றுமேல் சுற்றிச் சுழலும் வினையெலாம்
.. சூழ்ந்தொழித்தோம்
கற்றுமேல் கற்றுக் கடைத்தேறக் காமாட்சி
.. காத்தவளே (48)
.. வீறுரைகள்
பற்றிமேல் பற்றியப் பாதாம் புயத்தைப்
.. பணிந்தவொன்றால்
சுற்றுமேல் சுற்றிச் சுழலும் வினையெலாம்
.. சூழ்ந்தொழித்தோம்
கற்றுமேல் கற்றுக் கடைத்தேறக் காமாட்சி
.. காத்தவளே (48)
காத்தவ ளேவான் கயிலையார் பங்கிற்
.. கனியமுதாய்ப்
பூத்தவ ளேயன்று பொன்னகர்க் காஞ்சியிற்
.. போந்தமர்ந்து
மூத்தவ ளேயண்டம் மூன்றையும் உந்தியுள்
.. மூண்டடக்க
வாய்த்த ளேஎமை வாழ்த்துகா மாட்சி
.. வனமயிலே (49)
.. கனியமுதாய்ப்
பூத்தவ ளேயன்று பொன்னகர்க் காஞ்சியிற்
.. போந்தமர்ந்து
மூத்தவ ளேயண்டம் மூன்றையும் உந்தியுள்
.. மூண்டடக்க
வாய்த்த ளேஎமை வாழ்த்துகா மாட்சி
.. வனமயிலே (49)
மயிலே அனையவான் மாதே குகனை
.. மகிழ்ந்துபெற்ற
குயிலே அனையர் குலமே இனிதொரு
.. கொள்கைநலம்
பயிலே எனஎமைப் பாலிக்கும் காமாட்சி
.. பார்க்கமுன்நீ
வெயிலே யணையா வியன்பொழில் வண்ணை
.. விழைபவளே (50)
.. மகிழ்ந்துபெற்ற
குயிலே அனையர் குலமே இனிதொரு
.. கொள்கைநலம்
பயிலே எனஎமைப் பாலிக்கும் காமாட்சி
.. பார்க்கமுன்நீ
வெயிலே யணையா வியன்பொழில் வண்ணை
.. விழைபவளே (50)
No comments:
Post a Comment