வண்ணையம்பதி அருள்மிகு காமாட்சியம்மன் அந்தாதி(பாடல்கள் 11 - 20)
வாக்குக் கினியாள் மனத்துக் கினியாள்
.. வளருமனப்
போக்குக் கினியாள் புலனுக் கினியாள்
.. புலனமையும்
நோக்குக் கினியாள் நுகரற் கினியாள்
.. நுகருமருள்
தேக்குக் கினியாள் திருவண்ணைக் காமாட்சி
.. தேவியுமே (11)
.. வளருமனப்
போக்குக் கினியாள் புலனுக் கினியாள்
.. புலனமையும்
நோக்குக் கினியாள் நுகரற் கினியாள்
.. நுகருமருள்
தேக்குக் கினியாள் திருவண்ணைக் காமாட்சி
.. தேவியுமே (11)
தேவி அவளென்போம் தெய்விகம் பூக்கத்
.. திகழ்மணிப்பூ
வாவி அவளென்போம் வாழ்வாங்கு வாழ்ந்து
.. வளம்தருவோர்க்(கு)
ஆவி அவளென்போம் அப்பாலும் தத்துவம்
.. அத்தனைக்கும்
சாவி அவளென்போம் சந்ததம் காமாட்சி
.. சாரணியே (12)
.. திகழ்மணிப்பூ
வாவி அவளென்போம் வாழ்வாங்கு வாழ்ந்து
.. வளம்தருவோர்க்(கு)
ஆவி அவளென்போம் அப்பாலும் தத்துவம்
.. அத்தனைக்கும்
சாவி அவளென்போம் சந்ததம் காமாட்சி
.. சாரணியே (12)
சாரணி அண்ட சராசரம் யாவையும்
.. சார்ந்தியக்கும்
காரணி கண்டம் கறுத்தஎங் கண்ணுதற்
.. காதலுக்கே
பூரணி கொண்மெய்ச் சொர்க்கமும் நின்னாற்
.. புலர்ந்தெழுமே
வாரணி கொங்கைக்கா மாட்சியாம் வண்ணைசூழ்
.. வான்மழையே (13)
.. சார்ந்தியக்கும்
காரணி கண்டம் கறுத்தஎங் கண்ணுதற்
.. காதலுக்கே
பூரணி கொண்மெய்ச் சொர்க்கமும் நின்னாற்
.. புலர்ந்தெழுமே
வாரணி கொங்கைக்கா மாட்சியாம் வண்ணைசூழ்
.. வான்மழையே (13)
மழையே மழையின் மணமே மணம்பெறு
.. மண்பயனே
பிழையே எளியோம் பெரிது புரிந்திப்
.. பிறவியெலாம்
விழையேம் இணையடி வீணெனப் போந்தோம்
.. விழுந்தழிவை
அழையேம் இனியும் அடைக்கலம் வண்ணை
.. அதிசயமே (14)
.. மண்பயனே
பிழையே எளியோம் பெரிது புரிந்திப்
.. பிறவியெலாம்
விழையேம் இணையடி வீணெனப் போந்தோம்
.. விழுந்தழிவை
அழையேம் இனியும் அடைக்கலம் வண்ணை
.. அதிசயமே (14)
அதியச மென்றே அனவ ரதமுமெய்
.. அன்பர்குழாம்
துதிசெய வென்றே தகளறு வண்ணையந்
.. தொல்பதியில்
விதிசெய வென்றே விழைந்திருப் பாளெங்கள்
.. வித்தகிதான்
மதிசெய வென்றேகா மாட்சி எனயாம்
.. வழங்கிடவே (15)
.. அன்பர்குழாம்
துதிசெய வென்றே தகளறு வண்ணையந்
.. தொல்பதியில்
விதிசெய வென்றே விழைந்திருப் பாளெங்கள்
.. வித்தகிதான்
மதிசெய வென்றேகா மாட்சி எனயாம்
.. வழங்கிடவே (15)
வழங்குவாள் வாரி வளங்கள்யாம் வாழ்கென
.. வாழ்த்தொலித்து
முழங்குவாள் நான்மறை முற்றுமவ் வண்டங்கள்
.. மோதுறவே
கழங்குவான் மீன்களும் கோள்களு மேயவள்
.. கைத்தலமேற்
புழங்குவாள் காமாட்சி பொன்விளை யாட்டிவை
.. பொய்யில்லையே (16)
.. வாழ்த்தொலித்து
முழங்குவாள் நான்மறை முற்றுமவ் வண்டங்கள்
.. மோதுறவே
கழங்குவான் மீன்களும் கோள்களு மேயவள்
.. கைத்தலமேற்
புழங்குவாள் காமாட்சி பொன்விளை யாட்டிவை
.. பொய்யில்லையே (16)
இல்லை யெனினும் இருப்ப தெனினும்
.. இயம்புமெந்தச்
சொல்லையு மேபொருள் சூழப் பயில்வாள்
.. சுகவெளியின்
எல்லை யுலும்கூத் தியற்றுவாள் அவ்வெண்ணம்
.. என்னவென்றே
வல்ல வெவர்தாம் வகுப்பரெம் காமாட்சி
.. வைப்பிதுவே (17)
.. இயம்புமெந்தச்
சொல்லையு மேபொருள் சூழப் பயில்வாள்
.. சுகவெளியின்
எல்லை யுலும்கூத் தியற்றுவாள் அவ்வெண்ணம்
.. என்னவென்றே
வல்ல வெவர்தாம் வகுப்பரெம் காமாட்சி
.. வைப்பிதுவே (17)
வைப்பது வாய்ப்புகல் வானோரும் பாய
.. வரிந்தமுதென்(று)
உய்ப்பது வாய்ப்பர யோகி யரும்பரிந்(து)
.. உள்ளொலியில்
மொய்ப்பது வாய்ப்பவ மோகன வாழ்வில்
.. முனைபவரும்
துய்ப்பது வாய்ப்பொலி யும்திருக் காமாட்சி
.. தோத்திரமே (18)
.. வரிந்தமுதென்(று)
உய்ப்பது வாய்ப்பர யோகி யரும்பரிந்(து)
.. உள்ளொலியில்
மொய்ப்பது வாய்ப்பவ மோகன வாழ்வில்
.. முனைபவரும்
துய்ப்பது வாய்ப்பொலி யும்திருக் காமாட்சி
.. தோத்திரமே (18)
தோத்திர மென்ற துறைதொறும் சென்று
.. தொகுத்தமையும்
சாத்திர மென்ற சகலமும் கற்றதன்
.. சாரத்தையும்
பாத்திர மென்ற படைப்பினுட் கூட்டியாம்
.. பார்க்குமெலாம்
ஷேத்திர மென்ற சிறப்புகொள் வண்ணையஞ்
.. செல்வியன்றே (19)
.. தொகுத்தமையும்
சாத்திர மென்ற சகலமும் கற்றதன்
.. சாரத்தையும்
பாத்திர மென்ற படைப்பினுட் கூட்டியாம்
.. பார்க்குமெலாம்
ஷேத்திர மென்ற சிறப்புகொள் வண்ணையஞ்
.. செல்வியன்றே (19)
செல்வி யவள்புகழ் செல்லு மிடமெலாம்
.. சேர்த்துதவும்
கல்வி யவள்புதுக் காவிய மாம்பல
.. கற்பனைக்கும்
நல்வியப் பாமகள் நாளும்கா மாட்சி
.. நயந்தெமக்குச்
செல்வியப் பாமெய்ச் சிவகதி பண்ணிச்
.. சிறப்பவளே (20)
.. சேர்த்துதவும்
கல்வி யவள்புதுக் காவிய மாம்பல
.. கற்பனைக்கும்
நல்வியப் பாமகள் நாளும்கா மாட்சி
.. நயந்தெமக்குச்
செல்வியப் பாமெய்ச் சிவகதி பண்ணிச்
.. சிறப்பவளே (20)
No comments:
Post a Comment