வண்ணையம்பதி அருள்மிகு காமாட்சியம்மன் அந்தாதி
(பாடல்கள் 21 - 30)
சிறப்பவள் நீநெஞ்சில் செந்தமிழ் மூன்றும்
.. சிறுபொழுதில்
நிறைப்பவள் நீஎந்த நீசரும் செய்த
.. நெடும்பிழையை
மறப்பவள் நீஅவர் மற்றுமங் குய்ய
.. மழைக்கருணை
இறைப்பவள் நீவண்ணை ஈச்சுரி நீஎமை
.. ஈன்றவளே (21)
.. சிறுபொழுதில்
நிறைப்பவள் நீஎந்த நீசரும் செய்த
.. நெடும்பிழையை
மறப்பவள் நீஅவர் மற்றுமங் குய்ய
.. மழைக்கருணை
இறைப்பவள் நீவண்ணை ஈச்சுரி நீஎமை
.. ஈன்றவளே (21)
ஈன்றவ ளாகி இறையவ ளாகி
.. எமக்குதவத்
தோன்றுவ ளாகிஅத் தோன்றாளு மாகித்
.. துணிவதற்கும்
சான்றவ ளாகிச் சமரசம் ஆகிச்
.. சயநெறியே
ஆன்றவ ளாயெமை ஆள்வதும் காமாட்சி
.. ஆதரமே (22)
.. எமக்குதவத்
தோன்றுவ ளாகிஅத் தோன்றாளு மாகித்
.. துணிவதற்கும்
சான்றவ ளாகிச் சமரசம் ஆகிச்
.. சயநெறியே
ஆன்றவ ளாயெமை ஆள்வதும் காமாட்சி
.. ஆதரமே (22)
ஆதா ரமும்நீ அபயமும் நீஎன்(று)
.. அழுதழுதுன்
பாதார விந்தம்யாம் பற்றிப் புலம்பிப்
.. பதறல்நிதம்
காதாரக் கேட்பினும் காக்க வராமல்நீ
.. கன்னெஞ்சமே
சாதா ரணம்கொளின் சார்வதென் காமாட்சி
.. சாம்பவியே (23)
.. அழுதழுதுன்
பாதார விந்தம்யாம் பற்றிப் புலம்பிப்
.. பதறல்நிதம்
காதாரக் கேட்பினும் காக்க வராமல்நீ
.. கன்னெஞ்சமே
சாதா ரணம்கொளின் சார்வதென் காமாட்சி
.. சாம்பவியே (23)
சாம்பவி சங்கரி சாரும் பிரணவி
.. சத்தியம்போல்
தாம்பவித் தேமுன் தழையும்கா மாட்சி
.. தருமிணிவாய்
தேம்புவித் தெம்குறை தீர உனக்கே
.. தெரியவைத்தோம்
யாம்புவிக் காட்பட யாதினி மேற்றடை
.. யாமளையே (24)
.. சத்தியம்போல்
தாம்பவித் தேமுன் தழையும்கா மாட்சி
.. தருமிணிவாய்
தேம்புவித் தெம்குறை தீர உனக்கே
.. தெரியவைத்தோம்
யாம்புவிக் காட்பட யாதினி மேற்றடை
.. யாமளையே (24)
யாமளை அன்பொன்றே யாதுமாய் வாழமெய்
.. யாண்டுமுற்றோம்
போமளை போட்டி பொறாமை புகைச்சலும்
.. பொய்ம்மையுமே
தாமுளை சாகும் தருமம் வளரும்
.. தயாபரியாம்
கோமளை வண்ணைக்கா மாட்சி எனும்தாய்
.. குளிர்க்கண்ணிலே (25)
.. யாண்டுமுற்றோம்
போமளை போட்டி பொறாமை புகைச்சலும்
.. பொய்ம்மையுமே
தாமுளை சாகும் தருமம் வளரும்
.. தயாபரியாம்
கோமளை வண்ணைக்கா மாட்சி எனும்தாய்
.. குளிர்க்கண்ணிலே (25)
கண்ணிலே அன்னவள் காட்சியே வைகும்
.. கருதுநெஞ்சம்
எண்ணிலே அன்னவள் எங்ஙன் வசப்படல்
.. என்பதுறும்
பண்ணிலே அன்னவள் பாடலே வந்து
.. பரிணமிக்கும்
மண்ணிலே அன்னைகா மாட்சியல் லாற்பிறர்
.. மாண்புமென்னே (26)
.. கருதுநெஞ்சம்
எண்ணிலே அன்னவள் எங்ஙன் வசப்படல்
.. என்பதுறும்
பண்ணிலே அன்னவள் பாடலே வந்து
.. பரிணமிக்கும்
மண்ணிலே அன்னைகா மாட்சியல் லாற்பிறர்
.. மாண்புமென்னே (26)
என்னே உனையாம் இகபர மென்னும்
.. இரண்டிலும்தான்
முன்னே வணங்கும் முதுபெரு ளென்ற
.. முறைமைகண்டு
பொன்னே எனவும் பொருத்தக் கருதிப்
.. பொலிவதுற்றோம்
அன்னேகா மாட்சி யருளுக யாமுன்
.. அடைக்கலமே (27)
.. இரண்டிலும்தான்
முன்னே வணங்கும் முதுபெரு ளென்ற
.. முறைமைகண்டு
பொன்னே எனவும் பொருத்தக் கருதிப்
.. பொலிவதுற்றோம்
அன்னேகா மாட்சி யருளுக யாமுன்
.. அடைக்கலமே (27)
அடைக்கல மாம்எம் அறிவைத் தெளிவாய்
.. அனைத்துவரும்
நடைக்கல மாம்எது நன்றுதீ தென்று
.. நடுவுறுத்தும்
விடைக்கல மாம்எவ் விளைவையும் வென்று
.. விரைந்தெழவே
படக்கல மாம்வண்ணைக் காமாட்சி பக்தி
.. படைமின்களே (28)
.. அனைத்துவரும்
நடைக்கல மாம்எது நன்றுதீ தென்று
.. நடுவுறுத்தும்
விடைக்கல மாம்எவ் விளைவையும் வென்று
.. விரைந்தெழவே
படக்கல மாம்வண்ணைக் காமாட்சி பக்தி
.. படைமின்களே (28)
படைகொண் டெழுவோம் பதிகொண் டெழுவோம்
.. பவனிவெற்றிக்
குடைகொண் டெழுவோம் குடிகொண் டெழுவோம்
.. குவலயமே
தடைகொண் டெழினும் தயார்தயார் என்றே
.. தகர்த்தெறியக்
கடைகொண் டெழுகுவம் காமாட்சி தணையங்
.. கால்பணிந்தே (29)
.. பவனிவெற்றிக்
குடைகொண் டெழுவோம் குடிகொண் டெழுவோம்
.. குவலயமே
தடைகொண் டெழினும் தயார்தயார் என்றே
.. தகர்த்தெறியக்
கடைகொண் டெழுகுவம் காமாட்சி தணையங்
.. கால்பணிந்தே (29)
கால்பணி வோமவள் கைபணி வோமவள்
.. காட்சிதர
மேல்பணி வோமவள் மெய்பணி வோமதன்
.. மேலுமருள்
பால்பணி வோமவள் பாடல் பணிவோம்
.. பரிந்துரைத்த
நூல்பணி வோமெலாம் நுண்ணிடைக் காமாட்சி
.. நோன்பறிந்தே (30)
.. காட்சிதர
மேல்பணி வோமவள் மெய்பணி வோமதன்
.. மேலுமருள்
பால்பணி வோமவள் பாடல் பணிவோம்
.. பரிந்துரைத்த
நூல்பணி வோமெலாம் நுண்ணிடைக் காமாட்சி
.. நோன்பறிந்தே (30)
No comments:
Post a Comment