Thursday, June 28, 2012

துளித் துளி - கவிதை

கவிதை
 
உள்மொழி ஊற்று
பண்மொழி மாற்று
 
யதார்த்தங்க ளோடும்
பதார்த்தங்கள் கூடும்
 
செஞ்சொல் சிலிர்ப்புகள் - உள்
நெஞ்சின் ஒலிப்புகள்
 
கருத்தெனும் கவிநயம் - சொல்
பொறுத்துநம் செவிநயம்
 
சுருக்கஎச் சொல்லும் - நமைச்
சுருக்கென வெல்லும்
 
எழுத்துகள் முன்படும்
எண்ணங்கள் பின்படும்
 
கற்பனை கவிதைக்கு - அதன்
விற்பனம் உவகைக்கு
 
சருகெனும் சொற்கள் - கவி
மெருகினில் கற்கள்
 
இலக்கியம் என்பது - கவி
துலக்கிய தெம்பது
 
சந்தவசந்தம் - செவி
முந்த விசைந்தும்

No comments:

Post a Comment