மழை
தூறினால் மழைதான்
மீறினால் பிழைதான்
மீறினால் பிழைதான்
இடைமழை நல்லதாம்
அடைமழை தொல்லைதாம்
அடைமழை தொல்லைதாம்
முகிலொடு முகில்தான் - பின்
திகிலொடு திகில்தான்
திகிலொடு திகில்தான்
சூறைக்குச் சொந்தம் - இடிப்
பாறைக்குச் சந்தம்
பாறைக்குச் சந்தம்
உயிர்களும் உண்ணும்
பயிர்களும் பண்ணும்
பயிர்களும் பண்ணும்
வானம் வழியும் - எனில்
ஈனம் ஒழியும்
ஈனம் ஒழியும்
நிலத்தை நிறைக்கும் - மக்கள்
நலத்தைப் பெருக்கும்
நலத்தைப் பெருக்கும்
மண்ணின் வாசனை - மழை
பண்ணும் பூசனை
பண்ணும் பூசனை
பஞ்சம் பசியும் - மழைக்(கு)
அஞ்சி மசியும்
அஞ்சி மசியும்
மாரி இலையேல் - நலம்
பாரில் இலையே
பாரில் இலையே
பெய்யவும் இடரும் - பயன்
செய்யவும் தொடரும்
செய்யவும் தொடரும்
ஆற்றுக்கு நண்பன் - உழைச்
சேற்றுக்கு வம்பன்
சேற்றுக்கு வம்பன்
கடலுக்கும் மகன்தான் - வயல்
திடலுக்கு மகான்தான்
திடலுக்கு மகான்தான்
உயிர்க்கும் வேண்டும் மழை
பயிர்க்கும் தூண்டும்
பயிர்க்கும் தூண்டும்
நிலத்துள் நீரின்றேல் - உயிர்க்
குலத்துள் யாரின்றே?
குலத்துள் யாரின்றே?
No comments:
Post a Comment