அநுபவம்
சிந்தித்தும் சேரும்
நிந்தித்தும் சாரும்.
புண்படும் நெஞ்சம்
பண்படக் கொஞ்சும்.
மனத்தின் அரிப்பு
மவுனச் சிரிப்பு.
வருந்தும் மனம்தான் - பின்
திருந்தும் தினம்தான்.
செயல்களின் மூடம் - பல
புயல்களின் ஓடம்.
சந்திக்கும் தோறும்
நிந்திக்கத் தேறும்.
பெற்றால் பீடம்
கற்றால் பாடம்.
தலையிலே முட்டும் தாள் - பல
நிலையிலே குட்டும் தாள்.
அநுபவ ஆசான் - வெறும்
கனவவை பேசான்.
அடைமழை முன்தான் - காலத்
திடைபிழை பின்தான்.
காலம்கொள் கட்டியம் - அதன்
மேல்உங்கள் வட்டியும்.
பயன்தான் பாடம் - பெறப்
பயந்தால் மூடம்.
சிந்தித்தும் சேரும்
நிந்தித்தும் சாரும்.
புண்படும் நெஞ்சம்
பண்படக் கொஞ்சும்.
மனத்தின் அரிப்பு
மவுனச் சிரிப்பு.
வருந்தும் மனம்தான் - பின்
திருந்தும் தினம்தான்.
செயல்களின் மூடம் - பல
புயல்களின் ஓடம்.
சந்திக்கும் தோறும்
நிந்திக்கத் தேறும்.
பெற்றால் பீடம்
கற்றால் பாடம்.
தலையிலே முட்டும் தாள் - பல
நிலையிலே குட்டும் தாள்.
அநுபவ ஆசான் - வெறும்
கனவவை பேசான்.
அடைமழை முன்தான் - காலத்
திடைபிழை பின்தான்.
காலம்கொள் கட்டியம் - அதன்
மேல்உங்கள் வட்டியும்.
பயன்தான் பாடம் - பெறப்
பயந்தால் மூடம்.
No comments:
Post a Comment