கல்வி
முயன்றால் முடியும்
பயின்றால் படியும்.
சுடச்சுடச் செம்பொன் - கல்வி
படப்படக் கம்பன்.
படப்படக் கம்பன்.
படித்தால் மட்டுமே - செயல்
படைத்தால் கிட்டுமே.
வாசிக்க வருவது
யோசிக்கப் பெறுவது.
பெறவும் துணைதான்
இறைவர்க் கிணைதான்.
ஆய்ந்தால் அறிவு
வாய்ந்தால் விரிவு.
அறிவார்க் கருள்தான்
அறியார்க் கிருள்தான்.
வீம்பினால் வித்தை
சோம்பினால் சொத்தை.
சிந்திக்கத் தூண்டும்
முந்திக்க வேண்டும்.
துறைதொறும் தோற்றம் - கல்வி
பெறப்பெற ஏற்றம்.
அகம்தான் அறியும் - கல்வி
முகம்தான் நெறியும்.
தகவல் அல்ல - அறிவு
புகஉள் செல்ல.
வாழ்க்கை விதிசெயும் - கல்வி
கேள்வி மதிசெயும்.
படிப்பினில் பயன்வரும் - கூடப்
படிப்பினை நயம் தரும்.
எண்ணும் எழுத்தும் - கை
வண்ணம் வழுத்தும்.
நற்றவ போகம் - கல்வி
கற்றவர் யோகம்.
விற்றால் விற்பனர் - கல்வி
பெற்றால் பொற்பினர்.
அறிவால் உள்ளவர் - கல்விச்
செறிவால் வள்ளுவர்.
கற்றால் கலைதான் - அதை
விற்றால் விலைதான்.
படிப்பவை பலபல - மனம்
படிபவை சிலசில.
வாழ்வில் வளமை - கல்வி
கேள்விக் கெழுமை.
அறிவால் எதிலும் - மனம்
விரிவாய்ப் பதிலும்.
கேட்கும் கேள்வி - அறி(வு)
ஏற்கும் வேள்வி.
கோல் எடுத்தால் குரங்காம்
நூல் அடுத்தால் அரங்காம்.
பட்டறிவுப் பாடும் - நூல்
நட்டறிவில் ஊரும்.
ஆழங்கால் ஆண்டும் - கல்வி
வாழுங்கால் வேண்டும்.
படத்தான் பாடும் - நூல்
தொடத்தான் கூடும்.
கற்றோர்க்குக் கண்
மற்றோர்க்குப் புண்.
கற்றது கசடு - எனில்
வெற்றது அசடு.
பல்விதம் கல்வி
வெல்விதம் புகல்வி.
No comments:
Post a Comment