இறைமை
கடவுளே காப்பு - மனம்
பட வுளே கூப்பு.
இறைவனை ஏத்து - மனம்
நிறைவென வாழ்த்து.
பரம்பொருள் போற்று - அது
பெரும்பொருள் சாற்று.
தலைக்குமேல் ஒருவன் - நம்
நிலைக்குமேல் இறைவன்.
கடவுளே என்றேன் - கண்ட
விடையுளே நின்றேன்.
அன்பருள் முடிவும் - அந்தச்
செம்பொருள் வடிவம்.
ஆதிக்கே அஞ்சலி - அச்
சோதிக்கே நெஞ்சொலி.
இயற்கையே இறைவன்
செயற்கையே பெறுவன்.
வியக்க ஒருவன் - நலம்
பயக்கும் துறைவன்.
எல்லாநற் புகழும் - அவன்
அல்லாதென் நிகழும்?
கடவுளே காப்பு - மனம்
பட வுளே கூப்பு.
இறைவனை ஏத்து - மனம்
நிறைவென வாழ்த்து.
பரம்பொருள் போற்று - அது
பெரும்பொருள் சாற்று.
தலைக்குமேல் ஒருவன் - நம்
நிலைக்குமேல் இறைவன்.
கடவுளே என்றேன் - கண்ட
விடையுளே நின்றேன்.
அன்பருள் முடிவும் - அந்தச்
செம்பொருள் வடிவம்.
ஆதிக்கே அஞ்சலி - அச்
சோதிக்கே நெஞ்சொலி.
இயற்கையே இறைவன்
செயற்கையே பெறுவன்.
வியக்க ஒருவன் - நலம்
பயக்கும் துறைவன்.
எல்லாநற் புகழும் - அவன்
அல்லாதென் நிகழும்?
No comments:
Post a Comment