Sunday, June 17, 2012

துளித் துளி - இறைமை

இறைமை


கடவுளே காப்பு - மனம்
பட வுளே கூப்பு.


இறைவனை ஏத்து - மனம்
நிறைவென வாழ்த்து.


பரம்பொருள் போற்று - அது
பெரும்பொருள் சாற்று.


தலைக்குமேல் ஒருவன் - நம்
நிலைக்குமேல் இறைவன்.


கடவுளே என்றேன் - கண்ட
விடையுளே நின்றேன்.


அன்பருள் முடிவும் - அந்தச்
செம்பொருள் வடிவம்.


ஆதிக்கே அஞ்சலி - அச்
சோதிக்கே நெஞ்சொலி.


இயற்கையே இறைவன்
செயற்கையே பெறுவன்.


வியக்க ஒருவன் - நலம்
பயக்கும் துறைவன்.


எல்லாநற் புகழும் - அவன்
அல்லாதென் நிகழும்?

No comments:

Post a Comment