ஸ்ரீ சக்தி உலா (41-47)
சமயங்களுக்கெட்டாச் சக்தியே - எனில்
சமயபுரம் கிட்டும் சித்தியே
உமை சிருங்கார உல்லாசி - சொல்லும்
உஜ்ஜனியும் அவள் நல்லாசி (41)
சமயபுரம் கிட்டும் சித்தியே
உமை சிருங்கார உல்லாசி - சொல்லும்
உஜ்ஜனியும் அவள் நல்லாசி (41)
திருக்கட வூரினள் அம்மையே - அவள்
திருத்தலங்கள் தொறும் நம்மையே
அருட்கொடைக் காக்குதல் உண்மையே - அவள்
அற்புதம் என்னென்ன வண்மையே (42)
திருத்தலங்கள் தொறும் நம்மையே
அருட்கொடைக் காக்குதல் உண்மையே - அவள்
அற்புதம் என்னென்ன வண்மையே (42)
வற்றிடாச் செல்வ வரத்தினள் - மற்றும்
வண்ணை இமயபுரத்தினள்
ஒற்றியூர் வாழ்சசி வோத்தமி - அவள்
உலகம்மை தாம் என ஏத்துமின் (43)
வண்ணை இமயபுரத்தினள்
ஒற்றியூர் வாழ்சசி வோத்தமி - அவள்
உலகம்மை தாம் என ஏத்துமின் (43)
ஆழிஅலைஅவள் ஆயிரம் - பெயர்
அர்ச்சனை செய்திட வாயுறும்
வாழி அவள் என வாழ்த்துமே - சூறை
வந்திடித் தும்தலை தாழ்த்துமே (44)
அர்ச்சனை செய்திட வாயுறும்
வாழி அவள் என வாழ்த்துமே - சூறை
வந்திடித் தும்தலை தாழ்த்துமே (44)
ஆம்சிவசக்தியாம் ஆணைமேல் - என்னுள்
ஆவியும் தேன்சொரி வீணையே
தீஞ்சுவை காட்டிடும் தெய்வதம் - அவள்
திருவடிப் பேறன்றோ உய்வதும் (45)
ஆவியும் தேன்சொரி வீணையே
தீஞ்சுவை காட்டிடும் தெய்வதம் - அவள்
திருவடிப் பேறன்றோ உய்வதும் (45)
மந்திர அட்சதை வல்லியே - அவள்
மணித்திரு நாமங்கள் சொல்லியே
இந்திர போகமும் பற்றுவோம் - அவள்
இணையடிக் கோவிலே சுற்றுவோம் (46)
மணித்திரு நாமங்கள் சொல்லியே
இந்திர போகமும் பற்றுவோம் - அவள்
இணையடிக் கோவிலே சுற்றுவோம் (46)
சுற்றச்சுற்றச் சுகம் சூழ்ந்திடும் - நாமம்
சொல்லச்சொல்லத் துயர் வீழ்ந்திடும்
மற்றுமற்றின்பமும் மண்டிடும் - அஷ்ட
மகாலட்சுமி வாசமும் கொண்டிடும் (47)
சொல்லச்சொல்லத் துயர் வீழ்ந்திடும்
மற்றுமற்றின்பமும் மண்டிடும் - அஷ்ட
மகாலட்சுமி வாசமும் கொண்டிடும் (47)